30 March 2017

நான்கின் வீடும் பனிரண்டின் வீடும்

நமக்கு உண்டாகும் வீடு பற்றி எடுக்கும் 
பேசும் இடமாக நான்கும்...
நமது உயிருக்கு தேவையான வீடு 
பனிரண்டு எனவும் கூறுகிறோம்.


இந்த வீடுகளை காலபுருஷப்படி சற்று பார்வையிடலாமா?

இந்த வீடு பேறு மற்றும் வீடு பற்றி கூறும் 
இடங்கள் நான்காம் திரிகோணங்களே ஆகும். 
ஒருவன் தனது வேலைகள் முடிந்து கடைசியாக 
செல்லும் இடம் தனது வீடாக தான் இருக்கும்.



இந்த வீடுகள் பற்றி கூறும் திரிகோணங்கள் 
பற்றி யோசிக்கையில் ஒரு உண்மை புரியும்...
இராசி நிலையில் சட்டென ஒடி ஒழியும் வகையில் உள்ள குறியீடு கொண்ட 
ஜீவராசிகளை உடையது 
மூன்று இராசிகள் சரியா... 
(நண்டு தேள் மீன்)


மேலும் சில ஆச்சரியங்களை பகிர்கிறேன். 
காலபுருசத்தின்
நான்கில் ஒன்று நீசம்...
எட்டில் நான்கு நீசம்...
பனிரண்டில் நான்கும் எட்டும் 
பிரச்சனை இல்லை.
மேலும் இணைப்பாக பனிரண்டு 
நான்கில் உச்சம்...
இது எதனையாவது கூறுகிறதா...
ஆச்சரியம் என்றால் ஆச்சரியம்...
இல்லையெனில் இல்லைதான்😀😀😀



அப்போது... நான்கின் இன்னோர் 
காரகமான சுகத்தினை எடுத்தால் 
நாம் நீசமாவோம். பனிரண்டின் 
காரகத்தினை அதாவது 
மரணம் முக்தி இதனை சுகத்துடன் 
இனைக்க நம் உயர்வு நிச்சயம்


அப்படியெனில் 
பேரின்பம் பேரின்பம் என சித்தர்களும் 
முனிவர்களும் கூறுவது தனது 
உடல் சுகத்தினை நாடாது 
பிறவியின் கடைசி நிலையின் 
வீடு பேறின் சுகத்தினால் தான்
அதீத சுகம் சித்திக்கும் 
என கூறுவது போல இருங்கிறது அல்லவா... 
காலபுருஷத்தின் பனிரண்டில் 
புதன் நீசம் என்பது 
காதல் மற்றும் விளையாட்டு 
இல்லாத நிலையினை 
வழியுறுத்துகிறது.


லக்கினம் எப்படி பாக்கியம் பூர்வம் 
இரண்டினையும் நமக்கு 
பேலன்ஸ் செய்ய நடுவு நிற்க்கிறதோ... 
அதே போல, நான்கு பனிரண்டு 
எனும் இரண்டினை சமன் செய்யும் 
வேலையினை ஏற்றிருக்கும் 
சென்டர் பாயிண்ட்... 
நமது ஆயுள் என்பதை 
குறிக்கும் எட்டாமிடமாகும்...


சுகம் என்பதே வீடாகும்...
மரணத்தின் பின் வீடுபேறு பனிரண்டு,
மரணத்தின் முன் வீடு பெறுதல் நான்கு,
இந்த வீடுகள் இரண்டினையும் சமனாக்கி 
நமக்கு தரும் இன்னோர் இடமே 
இந்த இரண்டு இடங்களின் 
இரண்டாம் திரிகோண ஸ்தானமான
நடுவில் நின்று மாயையினால் கட்டிப்போடும்
அதியுன்னத மறைவு ஸ்தானமான எட்டு.


எட்டு தான் நூறு சதவீத மறைவாகும்... 
 இதன் சக்தியினை நம்மால் 
உணரவோ அல்லது ஆராயவோ 
கூட முடியாத அளவு 
நுணுக்கமாக இருக்கும்...


நமது அனைத்து ரகசியங்களின் 
சாவிகள் எட்டில் தான்
எனும் கருந்துடன்
மீண்டும் சந்திப்போம்....


மக்களின் அதிர்ஷ்ட சேவையில்
அஸ்ட்ரோv கண்ணா  கொடுமுடி..7667745633

No comments:

Post a Comment