30 March 2017

கர்போட்டமும் பழந்தமிழர் மழைக்கணிப்பும்

மார்கழியில் நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது ஒருநாளில் *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருப்பதை கவனித்திருப்பீர்கள். பிறகு சில நாட்களில் *கெர்போட்ட நிவர்த்தி* என்று இருப்பதையும் கண்டிருப்பீர்கள்
இது என்ன என்று என்றைக்காவது நினைத்ததுண்டா??
உண்மையில் இது ஒரு பழந்தமிழர் மழைக்கணிப்பு முறை
*கரு ஓட்டம்* என்பதே *கர்ப்ப ஓட்டம்* என்று மாறி *கர்ப்போட்டம்* என்றாகி இன்று காலண்டர்களில் *கெர்ப்போட்டம்* என்று காண்கிறது

நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது
இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர்
அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன் *தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது* இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை காணலாம்
இந்த பதினான்கு நாட்களும் *கர்ப்போட்ட நாட்கள்* ஆகும்
அதாவது *மழை கருக்கொள்ளும் நாள்* அல்லது *மேகம் சூலாகும் நாள்*
இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருத்தி ஒன்பது மாதம் கழித்து புரட்டாசிக்கு பின் பிள்ளை பெறுவாள்
அவ்வகையில் இந்த கர்ப்போட்ட நாட்களில் *மழை முறையாக சூல் கொண்டால்* ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும்
இந்த கர்ப்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது
ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரம்லாம் தெரியாது இல்லையா?? அதனால..
மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் கர்போட்ட நாட்கள் என்று நினைவில் வைத்து கொள்வார்கள்
*இந்நாட்களில் லேசான தூறல் மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கரு கட்டி இருக்கிறது* என்று பொருள் அடுத்த ஆண்டு நல்ல மழை பொழிவை எதிர்பார்க்கலாம்
மாறாக கர்ப்போட்ட நாட்களில் *கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ கடும்வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது* என்று பொருள்
*சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் மேகத்தின் கருக்கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் மழையளவு குறைகிறது*
இந்த கர்ப்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் மானாவாரி பயிர்களை விதைக்கிறார்கள் விவசாயிகள்
நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் *கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம்*
வானிலை அறிக்கைக்கு டீவியை பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்.
அதை விடுத்து சற்றே ஜோதிடத்தினை கையில் எடுப்போம்.
படித்ததை பதிவது
*அஸ்ட்ரோ கண்ணா*

No comments:

Post a Comment