26 July 2016

விலங்குகளுக்கு ஜோதிடமா?

கேள்வி:
மனிதனுக்கு ஜோதிடம் சொல்ல கிளி ஜோதிடம்  எலி ஜோதிடம்லாம் இருக்கு. சகுனம் சொல்ல மாடு எருமை காக்காய் பல்லியெல்லாம் இருக்கு... ஆனால் அவைகளுக்கு ஜாதகம் பார்க்க யார் இருக்கா? முடியுமா? 



(கேள்விக்கு நன்றி *6136அய்யா*)

பதில்:

ஜோதிடம் தனது அறிவினை அடுத்த நிலைக்கு உயர்த்த பயணிக்கும் நபர்களால் உருவாக்கப்பட்டது.
மனிதன் மனிதனை உயர்த்த பாதை தேடுகிறான். அதற்க்கு ஏற்க்கனவே ஆன்ம வெற்றிபெற்ற சித்தர் பெருமக்கள் வகுத்ததே ஜோதிடம். ஆறாம் அறிவின் மூலமே ஜோதிடத்தை அறியும் வழியுன்டாகும் என்பதால்...
தாவரம் விலங்ககுகளுக்கு அறிய முடியாது.
ஜோதிடத்தின் சிஸ்டம் படி மனிதனின் வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஏற்பவே வரைமுறைகளை தந்துள்ளார்கள்.
கிரகங்கள் நகர்வினால் காரிய பலனா..
அல்லது காரியம் நடக்கும்போது கிரகபலனா என்பதாக யோசிக்க...
ஜோதிடம் கண்டறியும் போது காரியங்களையும் அப்போது நடக்கும் கிரகங்களின் அசைவையும் வைத்து தான் பலன்களை நிர்ணயித்து இருப்பார்கள்.
இதனால் தான் நம்மால் பரிகாரம் மூலமாக விதியினை
மாற்றமுடியும் என கூறமுடியும்படி ஜோதிடத்தை கூறியுள்ளார்கள்.
மனிதனை வைத்து அறியப்பட்ட ஜோதிடத்தினை மனிதன் மீதுதான் பிரயோகிக்க முடியும். அதுதானே முறையும் கூட...
இயற்கையில் பல்வேறு உயிர்களுக்கும் ஜாதகம் கணிக்க வேண்டும் ஆனால்...
இயற்க்கையோடு இணைந்து நாம் அதனை கருத்துடன் கவனித்து அறிய வேண்டும். பலன்களை நிர்ணயம் செய்ய வேண்டும். உதாரணம் ஏதோ ஓர் பிரச்சினை ் நாய்க்கு உணவளிக்க கூறும் பரிகாரத்தினால் தீர்வு எனில்... நாயின் ஜாதகத்தில் அது யாருக்கு உணவளிக்கும்.. அல்லது வாலை ஆட்டும்...
பசுவுக்கு நாம் உணவளிக்கலாம்... பசுவுக்கு ஏதேனும் என்றால்...
இப்படி அனேக விசயங்களுக்கு கணிதம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு
பொறுமை...
மன உறுதி...
அதிகமான ஆர்வம்
மற்றும் நீண்ட ஆயுள் இவைகள் இருப்பின் நிச்சயமாக அனைத்து உயிர்களுக்கும்... ஜாதகம் கூறலாம். இயற்க்கை நமக்கு மட்டுமா அனைத்துக்குமானதல்லவா....
ஆகவே அனைத்துக்குமான பொது ஜோதிடம் சாத்தியமில்லாது போவதால் தனியாக ஆராய்ந்து கண்டறியலாம்.
அது அந்த அந்த ஜோதிட குருமார்களின் தனித்திறனாகும்.
நாம் குருமார்கள் தந்த விசயங்களை நமக்கு புரிந்த வகையில் மக்களிடம் சேர்பிக்கிறோம் அவ்வளவே...
நன்றியுடன்...
அஸ்ட்ரோகண்ணா

No comments:

Post a Comment