25 July 2014

விதிஎண் 9ல் பிறந்தவர்களே!!!

இந்த 9 எண்ணுக்குரிய கோள் செவ்வாய். பொதுவாக இவர்கள்  சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள்.முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள்.
மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். எந்த ஒருவேலையை செய்தாலும் .அதை சரிவர செய்வார்கள். பெயர் சரியாக அமைந்தவர்கள், செவ்வாய் பலமாக இருந்தால் பொறியியல் துறையிலும் அறுவை  சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பர். தன் செய்கை சரிதானா என்பதை கவனித்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்கள். இவர்கள் தன் வரை சுகமாக வாழ்ந்தால் போதுமென்று நினைப்பார்கள். எப்படி பட்டவர்களையும் மடக்கித் தன் சொல்படி நடக்க வைக்கும் திறமை சாலிகளாக இருப்பார்கள்.  இவர்கள் வாழ்க்கையே தனிப் பட்டதாக இருக்கும். இவர்களுக்கு காயங்களும் அறுவை சிகிச்சையும் சாதாரணமாகவே நடக்கும்.

No comments:

Post a Comment