31 July 2014

விதிஎண் 20-ல் பிறந்தவர்களே!!!

சந்திரனின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பின் மெதுவாகவே செய்யும் குணமுடையவர்கள். நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும்.
இறை நம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது. ஓவியம், இசை, சிற்பம் போன்றவைகளிலும் மற்றும் வழக்கறிஞர் வேலையிலும் இவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. எல்லா வகையான சாமர்த்தியங்கள் இருந்தாலும் உழைப்பில் மனம் ஈடுபடாது. சோம்பல் இருந்து கொண்டே இருக்கும். சிறிய துன்பங்களைக் கூட இவர்கள் கற்பனையில் பெரிதாக்கி அதனால் தேவையில்லாத கவலைக்குள்ளாவார்கள். வீணாகக் கவலைப் பட்டு வாழ்க்கையை பிரச்சினை ஆக்கி விடுவார்கள். என்னதான் தைரியமாக இருந்தாலும், பேசினாலும் மனதில் பயம் கொண்டிருக்கும் இவர்களின் புத்தி ஒரு நிலை உடையதாக இருக்காது. பலருக்கும் பல விதமான யோசனைகளை அளிப்பதில் வல்லவர்களான இவர்கள், தானே ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தால் பல முறை யோசனை செய்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது.  மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. சந்தேக புத்தி உடையவர்கள் ஆதலால் இவர்களை விரும்புவர்கள் கூட இவருடன் சேர்ந்து இருக்க விரும்புவதில்லை. எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். சூடு தொடர்பான நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு.பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

No comments:

Post a Comment