31 July 2014

விதிஎண் 22-ல் பிறந்தவர்களே!!!

இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். இவர்கள் பெருந் தன்மை வாய்ந்தவர்கள். பிறருக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள். கல்வியில் மேலே படிக்க வசதி இருந்தாலும் படிக்க முடியாது. தடை பட்டு விடும். பின்னர் மிகவும் சிரமான முறையிலேயே படிக்க முடிகின்றது.
பிறர் மீது பொறாமை பட மாட்டார்கள். பிறரை வஞ்சிக்க மாட்டார்கள். மற்றவர்களும் தன்னைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். தங்கள் வேலையில் கண்டிப்பும், அக்கரையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.  மற்றவர்களை நம்பி பணத்தை இழக்கும் அவலம் உண்டு. கண்கள் சிறியதாகவும் காணப் படுவார்கள். பெரிய தலையும், அடர்த்தியான தலை முடியும் கொண்டவர்களாக இருப்பார்கள். கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். எப்போதும் மற்றவர்கள் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள்.கையில் பணம் இல்லா விட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயே இருப்பார்கள். பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். காதல் என்பதை சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள். ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். பலமின்மை, சோகை, குடல், தலை, இடுப்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படலாம். சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.மிக்க வல்லமை உடைய இவர்கள் நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும்.  இந்த தேதி தேதியில் பிறந்தவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் ஏற்படும். கோமேதகம் அதிக நன்மை தரும் கல்லாகும்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 21-ல் பிறந்தவர்களே!!!


குரு பகவானின் பரிபூரண அருள் பெற்ற இவர்களின் பேச்சு வன்மை காரணமாக இவர்கள் பேச்சில் பலர் மயங்கி விடுவார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள். காலத்திற்கு ஏற்றபடி வாழ்க்கையை அமைத்து கொள்வார்கள்.
சமய சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து பிறரிடம் நல்ல பெயரையும், புகழையும் பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். மூட நம்பிக்கையில் ஈடுபட மாட்டார்கள். வீணாக நேரத்தை போக்குதலையோ , அல்லது சோம்பேறி தனத்தையோ இவர்களிடம் காண முடியாது. நிமிர்ந்த நடையும், கம்பீரமான தோற்றமும் உடையவர்கள். இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்குக் கீழ்படிதல் போன்ற குணங்கள் அமையப் பெற்றவர்கள். நாணயத்தையும், கௌரவத்தையும், நல்ல பெயரையும் உயிராகக் கருதக் கூடியவர்கள். அதிக கூர்மையான அறிவும், உழைப்பும் இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள் ஆதலால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று எல்லோராலும் பாராட்டப் பெறுவார்கள். சிறு வயது முதலே பொறுப்பை உணர்ந்து போற்றும் படியாக நடந்து கொள்ளுவார்கள். பேச்சில் கண்ணியமும், அதே வேளையில் கண்டிப்பும் இருக்கும். நல்ல செயல்களும், பழக்கமும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் நியாயமான முறையிலேயே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதிக இறை நம்பிக்கை உடையவர்கள். எந்த நிலையில் இருந்தாலும் உண்மையுடனும், திருப்தியுடனும் செயலாற்று வார்கள்.  இல்லற வாழ்க்கை சிறப்பாகவே அமையும். இவர்களுக்கு தோல் தொடர்பான நோய்கள் ஏற்படும். நரம்பு தொடர்பான நோய்கள், வாத தொடர்பான நோய்கள் இவர்களை துன்பப் படுத்தும். உடற் பயிற்சியின் மூலமும், குறிப்பிட்ட நேரத்தில் உணவருந்தும் பழக்கமும் அமைத்துக் கொண்டால் ஓரளவு நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். இவர்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும், பேராசியர்களாகவும், வங்கியில் பணி புரிபவர்களாகவும் இருக்கலாம்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 20-ல் பிறந்தவர்களே!!!

சந்திரனின் ஆதிக்கம் அதிகம் உள்ளவர்கள். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசனை செய்து அதன் பின் மெதுவாகவே செய்யும் குணமுடையவர்கள். நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும்.
இறை நம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது. ஓவியம், இசை, சிற்பம் போன்றவைகளிலும் மற்றும் வழக்கறிஞர் வேலையிலும் இவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. எல்லா வகையான சாமர்த்தியங்கள் இருந்தாலும் உழைப்பில் மனம் ஈடுபடாது. சோம்பல் இருந்து கொண்டே இருக்கும். சிறிய துன்பங்களைக் கூட இவர்கள் கற்பனையில் பெரிதாக்கி அதனால் தேவையில்லாத கவலைக்குள்ளாவார்கள். வீணாகக் கவலைப் பட்டு வாழ்க்கையை பிரச்சினை ஆக்கி விடுவார்கள். என்னதான் தைரியமாக இருந்தாலும், பேசினாலும் மனதில் பயம் கொண்டிருக்கும் இவர்களின் புத்தி ஒரு நிலை உடையதாக இருக்காது. பலருக்கும் பல விதமான யோசனைகளை அளிப்பதில் வல்லவர்களான இவர்கள், தானே ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தால் பல முறை யோசனை செய்து மனதைக் குழப்பிக் கொள்வார்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது.  மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. சந்தேக புத்தி உடையவர்கள் ஆதலால் இவர்களை விரும்புவர்கள் கூட இவருடன் சேர்ந்து இருக்க விரும்புவதில்லை. எப்போதும் குற்றம் கண்டு பிடிப்பதும், தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். சூடு தொடர்பான நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு.பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 19-ல் பிறந்தவர்களே!!!


சூரியனின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், பொது நலத் தொண்டு செய்வதில் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். பிரதி பலனை பாராது பிறருக்கு நன்மை செய்வார்கள். வசதி இருந்தாலும் எளிமையாகவே வாழ விருப்பமுடையவர்கள்.
இவர்களிடம் உதவி பெற்றவர்களே இவர் மீது குறை கூறினாலும் அதை பொருட் படுத்த மாட்டார்கள். இவர்களுக்கு கேளிக்கைளில் விருப்பம் இருக்காது. ஒரு காரியம் தொடங்கினால் அதை முடிக்கும் வரையில் வேறு எதிலும் மனம் செல்லாது. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நினைப்பவர்கள் ஆதலால் வாழ்க்கையில் அதிகமாக முன்னேற முடியாத நிலையில் இருப்பார்கள். இவர்கள் தொழில் முறை எதுவானாலும் அதில் அவர்கள் முன்னேற்றம் அடைய 30 வயது செல்ல வேண்டி வரும். அது வரை பல இடம் மாறவும், பல தொழில் செய்யக் கூடிய நிலையும் தான் ஏற்படும். பித்தத் தொடர்பான கோளாறு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கும். பித்த மயக்கம், வாந்தி, கண் பார்வை மங்கல்போன்ற கோளாறுகள் ஏற்படும். பித்தம் விளைவிக்கக் கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உணவில் இஞ்சி,எலுமிச்சம் பழம், நாரத்தங்காய், சீரகம், நெல்லிக்காய், வெந்தயம் போன்ற வற்றை அதிகமாகசேர்க்க வேண்டும் பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 18-ல் பிறந்தவர்களே!!!

செவ்வாயின் ஆதிகம் மிகுந்த இவர்களின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்த, சம நிலையில் இன்பமும், துன்பமும் கலந்ததாகவே இருக்கும். அதிகமாக சம்பாதிப்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. இவர்கள் பலருடன் சேர்ந்து வாழவே விரும்புவார்கள்.
இவர்கள் வீண் காரியத்தில் நேரத்தை செலவிட மாட்டார்கள். மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். தற்பெருமை அற்றவர்கள். பொதுவாக இவர்கள்  சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள். முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள். மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். எந்த ஒருவேலையை செய்தாலும் .அதை சரிவர செய்வார்கள் செவ்வாய் பலமாக இருந்தால் இவர்கள் பொறியியல் துறையிலும் அறுவை  சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பர். இவர்களில் மிகுந்த மனோ பலம் உடையவர்கள் தமக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள் எந்த விதமான எதிர்ப்பு வந்தாலும் சமாளிக்கும் திறன் உடையவர்கள். பெண்களால் இவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புண்டு 2,11, 20, 29, 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் இந்த எண் வரும்பெயரை தவிர்ப்பது நலம். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 17-ல் பிறந்தவர்களே!!!


சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர். சனி கோளுக்கான குணாதிசயங்கள் இவர்களிடத்தில் காணப்படும். எதிலும் நிதானமாகவே இருப்பர். பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர்.
எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர். பிறரை வஞ்சிக்க மாட்டார்கள். பிறர் மனம் நோகப் பேச மாட்டார்கள். ஒருவரின் கீழ்வேலை செய்வது இவர்களுக்குப் பிடிக்காது. சொந்தத் தொழில் புரியலாம். குறிப்பாக, மின்சாரத் தொடர்பான பொருட்கள், திரை உலகத் தொடர்பான பொருட்கள் மற்றும் இராணுவத் தொடர்பான  தயாரிக்கும் பணியில் ஈடுபடலாம். 27 வயதுக்கு மேல்வாழ்க்கை மேன்மை அடையும். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு  இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும். இவர்கள் இரும்பு நிலக்கரி கட்டிட ஒப்பந்தம் போன்ற தொழில்களில் ஈடுபட்டால் இலாபமடைவர்.வாழ்க்கையின் முற்பகுதியில் பிரச்சினைகள் அதிகமிருக்கும் ஆனால் பிற்பகுதியில் பிரச்சினைகள் தீர்ந்து சாந்தமான வாழ்க்கை அமையும். நீலக்கல் நன்மை தரும் தெற்கு தென்கிழக்கு திசைகள் நன்மை தரும். 1 3 5 6  எண்கள்நன்மை தரும் உங்களுக்குரிய கடவுள் திருவண்ணாமலை ஈசன் பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 16-ல் பிறந்தவர்களே!!!

கேதுவின் ஆதிக்கம் பெற்ற இவர்கள், சிறிது தன்னம்பிக்கை மிகுந்து காணப் படும் போது அதிக அளவில் பேசுவார்கள். சில நேரங்களில் ஊமையோ என எண்ணும் வகையில் மௌனம் சாதிப்பார்கள்.
பெரும் பாலும் முன் கோபக்காரர்கள். இதனால் நல்ல நண்பர்கள் அமைவது கடினம். எந்த துன்பம் வந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் குணமுடையவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களால் எந்தக் கலைகளையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எதிலும் தனித் தன்மை கொண்டவர்கள். எதிலும் புதுமை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். துன்பப் படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் நம்பிக்கைக் குரியவர்கள். நம்பியவர்களை கை விட மாட்டார்கள். தங்கள் குடும்பத்தினரை அதிக அளவில் நேசிக்கும் குணம் உடையவர்கள். அவர்களுடைய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அதிகமாக ஈடுபடுவார்கள்.  இசை, நடனம் போன்ற வற்றில் இவர்களுக்கு அதிக ஈடுபாடு இருக்கும். இவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பார்கள். நீர் தொடர்புடைய தொழில்கள் இலாபம் தரும். இவர்களில் பெயர் சரியாக அமையாத, பெரும் பாலோருக்கு மனதிற்கு ஏற்ற மனைவி அமைவதில்லை. குடும்ப வாழ்க்கையும் அமைதி தரும் என்று சொல்ல முடியாது. குடும்பவாழ்க்கையை வெறுக்கும் நிலையும் ஏற்படலாம். அதனால் ஆன்மீகத் துறையில் அதிக அளவில் நாட்டம் ஏற்படும். மலச் சிக்கல்தான் இவர்கள் முதல் எதிரி. அதிக அளவில் வேர்த்தல், தோல் நோய், வாதத்தொடர்பான நோய்கள் வர வாய்ப்புண்டு. கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு நோய்வராமல் தடுத்துக் கொள்ளலாம்.  கலையிலும், காதலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். அமைதியும், சாந்தமும் உடையவர்கள். புத்திக் கூர்மையும், அதிக அளவு ரசிப்புத் தன்மையும் கொண்டவர்கள். தெய்வீக வழி பாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களின் குடும்ப வாழ்க்கை சிரமமானதாக இருக்கும்.  சிறு வயதிலேயே புகழ் பெற்ற நடிகர்களாகவும், கவிஞர்களாகவும், கலைஞர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. தவறான காதல் விவகாரங்களில் ஈடு படாமல் இருந்தால் வாழ்க்கை சிறப்படையும். இந்த  எண்ணில் பிறந்தவர்கள் வணக்கத்திற்குரிய மனிதர்களாக விளங்குகின்றனர். நீதிபதிகள், மதத் தலைவர்கள், ஆணையர்கள் இந்த எண்ணில் அதிகம் காணலாம். இந்த எண்காரர்களுக்கு வெளிர் சிவப்பும், வெளிர் நீலமும் நன்மை தரும். வைடூரியம் உகந்த கல்லாகும் பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 15-ல் பிறந்தவர்களே!!!


15-ம் எண்ணின் ஆதிக்கக் கோள் வெள்ளி (சுக்கிரன்) ஆகும். பேச்சுத் திறமை பெற்றவர்களாக இருப்பார்கள். எந்த தொழில் முறையிலும் நல்ல தேர்ச்சி பெறக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் மேற்கொள்ளும் எந்த காரியத்திலும் நல்லவருமானம் கிடைக்கும்.
தொட்டது துலங்கும். பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். கல்வியில் அவ்வளவாக தேர்ச்சி இல்லா விட்டாலுங் கூட நல்லயோகசாலிகளாக விளங்குவார்கள். வேதாந்தத்தில் ஈடுபாடு இருக்கும்.. அதிகாரம், அடக்கி ஆளுதல், பிறரை மகிழ்வித்து பொருளீட்டும் கலைத்துறை போன்ற வற்றில் இவர்களைக் காணலாம்.பொதுவாக நடுத்தரஉயரம் உடையவர்கள். நன்கு அமைந்த உடல் வாகு கொண்டவர்கள். முதுமையிலும் இளமையாகத் தோன்றுவார்கள். எப்போதும் இன்பமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அழகை ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள். கலைகளில் அதிக ஆர்வம் உடையவர்கள். ஒருவிதமான காந்தகச்தி உடையவர்கள்.அதனால் மற்றவர்களை தன்பக்கம் இழுக்கும் வல்லமை உள்ளவர்கள். தன்பால் அன்பு கொண்டவர்களுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். பிறர்நன்றாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் நன்கு சிந்தித்த பின்பே அதில் இறங்குவார்கள். விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள். எனவே, இவர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் விளங்குவார்கள். புகழ் பெற்ற கலைஞர்கள் பலர் இந்த எண்ணில் இருப்பதைக் காணலாம். எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கும் குணமுடையவர்கள். தனக்கு ஏற்ப்படும் பிரச்சனைகளை தீர்க்க பில்லி சூனிய மந்திரவாதிகளை தேடி செல்லும் எண்ணம் உண்டாகும்.

விதிஎண் 14-ல் பிறந்தவர்களே!!!


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் புதன். இவர்களில் பெரும் பாலோர் உயரமாக இருப்பார்கள். வசீகரமான முகமும், எவரையும் ஈர்க்கும் காந்தக்கண்களும் கொண்டவர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். மனதில் தோன்றுவதை உடனே வெளியே பேசும் தன்மை கொண்டவர்கள். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...
வேகமாக சிந்திக்கும் ஆற்றல் படைத்தவர்கள். அதே போன்று வேகமாக செயல் படத் துடிக்கும் எண்ணம் கொண்டவர்கள். எதிலும் வேகமே இவர்களின் லட்சியம். எவ்வளவு பெரிய காரியமானாலும் துணிந்து செயல் படுவார்கள். மற்றவர்களால் முடியாததை தன்னால் செய்ய முடியும் என்பதே இவர்களது எண்ணம். புதிது புதிதாக எதையாவது செய்து பேரும், புகழும் பெற வேண்டும் என்பதே இவர்கள் லட்சியம். முடிந்தவரையில்அடுத்தவர்களின் உதவியை பெற மாட்டார்கள். தானாகவே எதையும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.  இவர்களால் அதிக அளவில் சம்பாதிக்க முடியும். அரசியல், விஞ்ஞானம், ஆன்மீகம் போன்றவற்றில் இவர்களதுபங்கு அதிகம் இருப்பதைக் காணலாம். அறிவன் ஆதிக்கம் இருப்பதால் கணிதம், சட்டம் போன்ற வற்றிலும் பிரகாசிப்பார்கள்.கண்டதும் காதல் எனும் வகையை சேர்ந்தவர்கள். எனவே அவசரமாக திருமணம் செய்து கொண்டு பின்னால் வருந்து பவர்களும் உண்டு. நன்கு யோசித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. சமயங்களில் அதுவே பெரிய சண்டையாக மாறி விடும். கடுமையாக சிந்திக்கக் கூடியவர்கள். ஆதலால் மனம்அலை பாய்ந்து அமைதி இழக்கும். இதனால் நரம்புத் தனர்ச்சி, வாதம், மூளை தளர்ச்சி போன்ற நரம்புத் தொடர்பான நோய்கள் ஏற்படும். பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

29 July 2014

விதிஎண் 13-ல் பிறந்தவர்களே!!!


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும். கண்ணியமானவர்களாக இருப்பார்கள். ஆனால் தனிப் பட்டு வாழ நினைப்பார்கள். மற்றவர்களுடன் எந்தக் காரியத்திலும் சேர மனமில்லாதவர்களாக இருப்பார்கள். மிகவும் இரக்கம் உள்ளவர்கள்.
இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை பிடிக்காது. பணிவுடன் நடந்து கொள்வார்கள். கல்வியில் மேலே போக முடியா விட்டாலும் தேவையான கல்வி அறிவு இருக்கும். கடினமாக உழைக்க மனமில்லாதவர்கள். அரசாங்கத்தில் இவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமம். தனியார் துறையில் வேலை செய்வார்கள். தொழில் இதுதான் என்று கூற முடியாது. எந்த தொழிலாக இருந்தாலும் அதில் விரைவிலேயே தேர்ச்சி பெற்று விடுவார்கள். இவர்களுக்கு குடல் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். மிகவும் சிரமத்துடனேயே இவர்கள் பொருள் ஈட்ட வேண்டியது இருக்கும். ஆனால் கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும், பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். எப்போதும் மற்றவர்கள் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். எவரையும் நன்கு தீர விசாரித்த பின்பே நம்பும் தன்மை கொண்டவர்கள். அதிக நண்பர்கள் இவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள.ஒரு செயலில் ஈடு பட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். அதிக அளவில் பணம்சம்பாதிப்பார்கள். ஆனால்சேமிக்கும் பழக்கம் இவர்களிடம் இல்லை கையில் பணம் இல்லா விட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயேஇருப்பார்கள். பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வேதாந்தஎண்ணங்கள் மனதில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள்.

விதிஎண் 12-ல் பிறந்தவர்களே!!!


இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் குரு ஆகும். குரு மிகவும் வலிமை வாய்ந்த கோளாகக் கருதப் படுகிறது. எந்த காரியத்திலும் வீரத்தோடு விளங்குவார்கள். நேர்மையோடு நடப்பார்கள். பிறரை வஞ்சிக்கவோ, மோசம் செய்யவோ நினைக்க மாட்டார்கள்.
ஆடம்பர வாழ்க்கையை விரும்புவார்கள். ஏழைகளுக்கு உதவி செய்வார்கள். கச்சேரி, நாடகம் போன்றவைகளுக்கு அதிகம் செலவு செய்வார்கள். இயல்பாகவே அடக்கம், பொறுமை, பெரியவர்களுக்குக் கீழ்படிதல் போன்ற குணங்கள் அமையப் பெற்றவர்கள். நாணயத்தையும், கௌரவத்தையும், நல்ல பெயரையும் உயிராகக் கருதக் கூடியவர்கள். அதிக கூர்மையான அறிவும், உழைப்பும் இயற்கையாகவே அமையப் பெற்றவர்கள் ஆதலால் சிறு வயதிலேயே புத்திசாலி என்று எல்லோராலும் பாராட்டப் பெறுவார்கள். சிறு வயது முதலே பொறுப்பை உணர்ந்து போற்றும் படியாக நடந்து கொள்ளுவார்கள். பேச்சில் கண்ணியமும், அதே வேளையில் கண்டிப்பும் இருக்கும். நல்ல செயல்களும், பழக்கமும் உடையவர்கள். பிறருக்கு உதவும் மனம் கொண்டவர்கள். ஆனால் இவர்கள் பிறரிடம் உதவி கேட்க மாட்டார்கள். இவர்கள் கடினமான உழைப்பாளிகள். கல் மனம் போன்று தோன்றினாலும் உண்மையிலேயே மென்மையான உள்ளம் கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் நியாயமான முறையிலேயே செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதிக இறை நம்பிக்கை உடையவர்கள். தம் வேலைகளை விட மற்றவர்களின் வேலைகளை செய்வதில் அதிக அக்கறை உடையவர்கள். எனவே பொது காரியங்களில் இவர்களை அதிகம் காணலாம். அளவுக்கு மிஞ்சிய ஆசை கொள்ள மாட்டார்கள். எந்த நிலையில் இருந்தாலும் உண்மையுடனும், திருப்தியுடனும் செயலாற்று வார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள். பணத்துக்காக எந்த ஒரு வேலையையும் செய்ய மாட்டார்கள்.

26 July 2014

விதிஎண் 11-ல் பிறந்தவர்களே!!!


பலருக்கும் பல விதமான யோசனைகளை அளிப்பதில் வல்லவர்கள், இவர்களில் அநேகம் பேர் ஒருவரின் கீழ் வேலை செய்வதையே விரும்புவார்கள். தனியாக தொழில் செய்வதில் அதிக ஈடுபாடு இருக்காது.
நேர்மையும், நாணயமும் உள்ளவர்களுக்கு பலரின் உதவி கிடைக்கும். இறை நம்பிக்கையும், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கும் வாழ்வில் குறையேதும் இருக்காது. ஓவியம், இசை, சிற்பம் போன்றவைகளிலும் மற்றும் வழக்கறிஞர் வேலையிலும் இவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. மனோ திடத்துடன் செயல் பட்டால் பால் பண்ணை, விவசாயம், அழகு சாதனப் பொருட்கள் போன்ற தொழில்களில் நன்மை உண்டு. தேவையில்லாத விவாதங்களையும் குறைத்துக் கொண்டால் நன்மை பயக்கும். என்னதான் உதவி செய்தாலும் மற்றவர்கள் இவர்கள் மீது வெறுப்பையே காட்டுவார்கள். ஆகவே இவர்கள் வீண் சந்தேகத்தை கை விடுதல் நல்லது.  இவர்களில் பெரும் பாலோருக்கு சீக்கிரமே தொந்தி ஏற்பட்டு விடும். இளைத்துக் காணப் படுபவர்களுக்கு சூடு தொடர்பான நோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு. நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. உடல் உழைப்பு குறைவே இதற்குக் காரணம்.
பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

விதிஎண் 10-ல் பிறந்தவர்களே!!!


இவர்களின் ஆதிக்க கிரகம் சூரியன். இவர்கள் செய்யும் எந்தக் காரியமும் பிறர் புகழக் கூடியதாகவே இருக்கும்.
மனோ தைரியம் இருந்தாலும் சமயத்தில் குழம்பிப் போய் காரியத்தை முடீக்காமல் விட்டு விடுவார்கள். தம்மை அண்டி வந்தவர்களை ஆதரிக்கும் குணமிருக்கும். எப்போதும் பயனுள்ள காரியத்தையே செய்வார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட சில நண்பர்கள் தவிர பல நண்பர்கள் இருக்க மாட்டார்கள். ஒருவர்சொல்லும் காரியத்தை உடனே இறங்கி விட மாட்டார்கள். நன்றாக திட்ட மிட்ட பின்னரே அதில் இறங்குவார்கள். இவர்களுக்கு 7-16-27-38  வயதுகளில் உடல் நிலை பாதித்து குணமாகும். இவர்கள் தொழில் முறை எதுவாக இருந்தாலும் அது 28 வயதிற்கு மேல் தான் நல்ல முன்னேற்றம் அடையும். பொதுவாக சொந்த வீடு அமையும் பாக்கியம் இவர்களுக்கு உண்டு

25 July 2014

விதிஎண் 9ல் பிறந்தவர்களே!!!

இந்த 9 எண்ணுக்குரிய கோள் செவ்வாய். பொதுவாக இவர்கள்  சுறுசுறுப்பானவர்கள். சுதந்திரமாக செயல் படுவதில் விருப்பம் உள்ளவர்கள்.முன்கோபியான இவர்கள் எவரையும் தூக்கியெறிந்து பேசும் குணம் உள்ளவர்கள்.
மனதில் உள்ளதை பட்டென வெளிப்படையாக சொல்லி விடுவர். இவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். எந்த ஒருவேலையை செய்தாலும் .அதை சரிவர செய்வார்கள். பெயர் சரியாக அமைந்தவர்கள், செவ்வாய் பலமாக இருந்தால் பொறியியல் துறையிலும் அறுவை  சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பர். தன் செய்கை சரிதானா என்பதை கவனித்துக் கொள்ளக் கூடியவராகவும் இருப்பார்கள். இவர்கள் தன் வரை சுகமாக வாழ்ந்தால் போதுமென்று நினைப்பார்கள். எப்படி பட்டவர்களையும் மடக்கித் தன் சொல்படி நடக்க வைக்கும் திறமை சாலிகளாக இருப்பார்கள்.  இவர்கள் வாழ்க்கையே தனிப் பட்டதாக இருக்கும். இவர்களுக்கு காயங்களும் அறுவை சிகிச்சையும் சாதாரணமாகவே நடக்கும்.

விதிஎண் 8ல் பிறந்தவர்களே!!!

     நல்லவர்களுக்கு நல்லவர்களாகவும் , கெட்டவர்களுக்கு கெட்டவர்களாகவும் விளங்குவார்கள். ஆனால், மன சாட்சிக்கு விரோதமாக எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார்கள்.
சோம்பல் குணமும் , எதிலும் ஒரு அலட்சியப் போக்கும் இருக்கும். எப்படி பட்டவராக இருந்தாலும் தந்திரமாகப் பேசி தம் காரியத்தை முடித்து கொள்வார்கள். இந்த 8 எண்ணுக்குரிய கோள் சனி எனவே சனி கோளுக்கான குணாதிசயங்கள் இவர்களிடத்தில்காணப்படும். எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருப்பர். பொதுவாக மற்றவர்கள் இவர்களை தவறாகவே எடை போடுவர்.எனவே இவர்கள் தனிமையையே விரும்புவர்.எதிலும் நிதானமாகவே இருப்பர்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு  இருக்காது. அப்படியே ஈடுபட்டாலும் அதில் ஒரு வெறித்தனம் இருக்கும். பெயர் சரியாக அமைந்தவர்கள் மட்டும் மிகவும் உயர்ந்த நிலையினை அடைந்து, ஆனந்த வாழ்வினை வாழ்கிறார்கள்.

விதிஎண் 7ல் பிறந்தவர்களே!!!


7ம் எண்ணுக்கு உரிய கோள் கேது.  உடல் பலத்தை விட மனோ பலம் அதிகம். எதிர் காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும்.
எவரையும் பின் பற்றும் குணம் கிடையாது. எதிலும் தன் விருப்பப்படியே செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களின் சொல்லுக்கு பிறர் கட்டுப் படுவார்கள். இவர்களில் பெரும் பாலோர் நல்ல உழைப்பாளிகளாக இருப்பார்கள். வேலையில் அதிக நேரம் ஈடுபடுவார்கள்.  பெரும் பாலும் முன் கோபக்காரர்கள். எந்த துன்பம் வந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளும் குணமுடையவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் பிறரிடம் காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்களால் எந்தக் கலைகளையும் எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். எதிலும் தனித் தன்மை கொண்டவர்கள். இவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பார்கள். இவர்களில் பெரும் பாலோருக்கு மனதிற்கு ஏற்ற மனைவி அமைவதில்லை. ஆன்மீகத் துறையில் அதிக அளவில் நாட்டம் ஏற்படும். பெயரினை நிச்சயம் சரிபார்த்துக்கொள்வது நன்மையினை அளிக்கும். மலச் சிக்கல்தான் இவர்கள் முதல் எதிரி. அதிக அளவில் வேர்த்தல், தோல் நோய், வாதத் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புண்டு. கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட்டு நோய்வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

விதிஎண் 6ல் பிறந்தவர்களே!!!

      பிறர்நன்றாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொள்ள மாட்டார்கள். எந்த காரியத்தில் ஈடு பட்டாலும் நன்கு சிந்தித்த பின்பே அதில் இறங்குவார்கள். விடாமுயற்சி, சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டவர்கள்.
எனவே, இவர்கள் செல்வத்தோடும், செல்வாக்கோடும் விளங்குவார்கள். எல்லா வகையான இன்பங்களையும் அனுபவிக்கும் குணமுடையவர்கள். இவர்களிடம் காதல் விவகாரங்கள் அதிகம் இருக்கும். சிற்றின்பத்தில் அதிக நாட்டம் இருக்கும். பெயர் சரியாக அமைந்துவிடில், இவர்கள் பொருளீட்ட அதிக அளவில் சிரமம் எடுக்க வேண்டியது இல்லை. சிறிது முயற்சி செய்தே நல்ல வருமானத்தை அடைவார்கள். அழகு சாதனங்கள், வாசனைப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் போன்ற வற்றிற்காக அதிக அளவில் பணம் செலவழிப்பார்கள். எழுத்து, சினிமா, நாடகம் போன்றத் துறைகளிலும் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது அல்லது விற்பனை செய்வது, நவரத்தின விற்பனை போன்ற தொழில்கள் இலாபகரமானது. இவர்களுக்கு அழகும், பண்பும் நிறைந்த மனைவி அமைவார்கள். பல பெண்களோடு தொடர்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதய தொடர்பான நோய்களும், இரத்த அழுத்தம் போன்ற நோய்களும் தொல்லை தரும்.பால்வினை நோய்களும் வர வாய்ப்பு அதிகம் உண்டு.

விதிஎண் 5ல் பிறந்தவர்களே!!!


     இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் புதன். வசீகரமான முகமும், எவரையும் ஈர்க்கும் காந்தக்கண்களும் கொண்டவர்கள்.
எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள். கபடு , சூது , வாது அறியாதவர்களாக இருப்பார்கள். ரகசியத்தை காப்பாற்ற அதரியாதவர்கள். இரக்க குணம் உள்ளவர்கள். பிறர் மனம் நோகும்படி எதையும் செய்ய மாட்டார்கள். பண விவகாரத்தில் கெட்டி. பிறருக்கு கடன் கொடுக்கத் தயங்குவார்கள். எதிரும் யோசித்து செலவு செய்வார்கள். இவர்கள் பிறரிடத்தில் எளிதில் பழக மாட்டார்கள். எனவே, இவர்களுக்கு நண்பர்கள் குறைவு. வெளி வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதனால் உற்சாகம் அடைவார்கள். இவர்கள் உடல் வலிமையை விட மனவலிமை அதிகம் கொண்டவர்கள். கடுமையாக சிந்திக்கக் கூடியவர்கள். ஆதலால் மனம்அலை பாய்ந்து அமைதி இழக்கும். இதனால் நரம்புத் தளர்ச்சி, வாதம், மூளை தளர்ச்சி போன்ற நரம்புத் தொடர்பான நோய்கள் ஏற்படும்.

18 July 2014

விதிஎண் 4ல் பிறந்தவர்களே!!!

உலகில் உள்ள அனைத்து விசயங்களிலும் தன் விரல் நுனியில் வைத்து இருப்பார். பிறர் பேச்சினை மறித்து பேசுவார்கள். தனக்கு சரியெனப்பட்டதை துணிவுடன் செய்வார்கள். எதையும் பலமுறை ஆராய்ந்தே முடிவு செய்வார்கள். இவர்களின் பிறப்பு எண் 1 10 ஆகவே இருக்கும். நட்பு வட்டம் அதிகமாக இருக்கும்.

10 July 2014

உங்கள் விதி


ஒருவரின் விதி அவரின் எண் படியே அமைகிறது.
அதுபோல இயல்பிலேயே அமைந்தவர்கள் மிகப்பெரிய வெற்றியாளர்களாக உருவாகின்றார்கள். விதி எண்ணுக்கு எதிராக தொழில் அமைந்தவர்கள், எவ்வளவு கடின உழைப்பினை செய்தாலும்கூட அவர்களால் மகிழ்சியான வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்கள். உங்கள் விதியினை நிர்ணயம் செய்யும் எண் எது, என தெரிந்து கொண்டு நாம் செய்யும் காரியங்களால் நமது வேலையும், வருமானமும், மனமகிழ்சியும் அதிகரிக்கின்றது. விபரம்

03 July 2014

பவளம் (CORAL)

பவளம் இதன் ஆதிக்க கிரகம்செவ்வாய் ஆகும். செவ்வாய் பகவானின் கதிர்களை ஆகர்ஷிக்கும் இரத்தினம் பவளம் ஆகும்.

        பவளம் என்பது கற்களின் வகை அல்ல. இது கடலில் வாழும் ஒருவித பூச்சியின் கழிவுகளால் ஆன அவற்றின் கூடே பவளபாறைகள் ஆகும். அவற்றினையே நாம் பவள ரத்தினமாக அணிந்து பலன் பெறுகிறோம். இது மான் கொம்பு மாதிரியான வடிவத்தில் உருவாகும். இதனை பவளக்கொடி என கூறுகின்றோம். சில இடங்களில் இது கடல் மட்டத்தினை விட மேலேயே வளர்ந்து விடுகிறது. நாளடைவில் அதன் பரப்பளவு அதிகரித்து தீவு போலவே காட்சியளிக்கிறது. இந்தியாவின் இலட்சத்தீவு, மற்றும் மாலத்தீவு ஆகியவை இது போல உண்டானவைகளே. விபரங்களுக்கு

எங்கு கிடைக்கும்.

     கடலில் வளர்கிறது என்றாலும், எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. இந்தியா, ஆஸ்திரேலியா, மத்தியதரைகடல் நாடுகள், சிறந்த செந்நிற பவளங்கள் நேபில், கார்சிகா, ஆகிய இடங்களிலும் கடலில் இருந்து எடுக்கும்போது பவளம் சாதாரணமாகவே காணப்படும். அவைகள் வெட்டி பட்டை தீட்டும் போதுதான் அதன் அழகிய சிகப்பு வண்ணமும், பளபளப்பும் சிறப்பாக தெரியும். பட்டை தீட்டாத பவளங்களுக்கு விலையும் மிகவும் குறைவு ஆகும்

 பவளத்தின் இரசாயன குறியீடு CaCo3 ஆகும். பவளகற்களின் கடினத்தன்மை மிகவும் குறைவு (3 மட்டுமேமட்டுமே) ஆகவே எளிதில் தேயும் குணம் உண்டு. பொதுவாக பவளங்கள் நல்ல ஆழ்ந்த வண்ணமும், திரட்சியுடனும், பழுது இன்றியும் இருக்க வேண்டும் என இரத்தின பரீட்சை நூல் குறிப்பிடுகிறது.

பவளம் உண்டாக்கும் நன்மைகள்.
                         1.         உடலுக்கு வலிமை உண்டாகும்.
      2.       எதிரிகளுக்கு பயம் உண்டாகும்.
      3.       வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும்.
      4.       கோழைத்தனம் மாறி வீரம் உண்டாகும்.
      5.       திருஷ்டி தோஷங்களை போக்கும்.
      6.       விலங்குகள் மூலம் உண்டாகும் தீமைகள் வராது.
      7.       பால்வினை நோய்கள் நீங்கும்.
      8.       செவ்வாய் தோஷம் உடையவர்கள் பவளம் அணிந்து நிறைய நன்மைகள் அடையலாம்.
      9.       உடலின் உஷ்ண நோய்களை குறைக்கும்.

 பவளம் யார் அணியலாம்?
1.       மேஷம் விருட்சிகம் இவற்றை இராசி இலக்கினமாக கொண்டவர்கள்
2.       மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள்.
3.       கடக, சிம்மம், தனுசு, மீனம் ராசிக்காரர்கள்
4.       தற்போது செவ்வாய் திசை நடப்பவர்கள்.
5.       9, 18, 27, ம் ம் தேதிகளில் பிறந்தவர்கள்
6.       விதி எண் ஒன்பது வருபவர்கள் பவளம் அணிந்து மேற்கண்ட நன்மைகளை அடையலாம்.


விபரங்களுக்கு