31 December 2015

2016ம் ஆண்டு பலன்கள் - 9 18 27

9, 18, 27 தேதிகளில் பிறந்த நேயர்களே

துணிவும் பணிவும்  கொண்ட வெற்றி வீரரான உங்களுக்கு, எதுவெல்லாம் தேவையோ அதுவெல்லாம் கிடைக்கும். மன மகிழ்வுக்கு அளவே இல்லை. சரித்திரம் போன்றது இந்த 2016ம் ஆண்டு. பொருளாதார நிலை மிகவும் உயர்வு பெரும். பூர்வீகச் சொத்துக்கள், வாகன விற்பனை, நிலத்தால் பணம் என்று வந்து கொண்டே இருக்கும். மங்கள காரியங்கள் மனதுக்கு பிடித்ததுபோல அமையப்பெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். பெண்கள் கணவருடன் இணக்கமாக நடந்து நற்பெயர் பெறுவார்கள். தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வார்கள். பிறந்த வீட்டு சொத்துக்களும் உண்டு. மாணவர்கள் மதிப்பெண்களை பெறுவதில் மும்முரம் காட்டி அனைவருடைய பாராட்டுதல்களையும் பெறுவார்கள்.

2016ம் ஆண்டு பலன்கள் - 8 17 26

8, 17, 26 தேதிகளில் பிறந்த நேயர்களே

கடமை வீரராக வலம் வரும் நீங்கள் இந்த 2016ம் ஆண்டு பொறுமையுடன் நிதானமும் கொண்டு நடப்பது மிக அவசியம். யாருக்கும் எந்த வகையிலும் ஜாமீன் ஏற்க வேண்டாம். சற்று தன்னை அடக்கியாள முயற்சி செய்யுங்கள். கடன் சுமைகள் அதிகரிக்கலாம். இருப்பதைக் கொண்டு செலவுகளை கட்டுப்படுத்தி வாழ பழகுவது நல்லது. இதற்கு திட்டமிடல் ஒன்றே அருமருந்து. ஏதேனும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரலாம். 

திருமண காரியங்களில் தடை பிரிவு உண்டாக வாய்ப்பு அதிகம். பொறுமையே வெற்றிக்கு வழி. பெண்கள் தங்கள் செல்வாக்கை தாமே குறைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர்க்கவும். மாணவர்கள் மதிப்பெண் குறைகளை ஏற்படுத்தி மன உளைச்சல் பெறுவார்கள். தீவிர முயற்சி தேவை. உடல்நிலையிலும் ஏதேனும் ஒருவகையில் உஷ்ண, நீர் சார்ந்த உறுப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும். பத்திய முறைகளும், உணவு கட்டுப்பாடும் அவசியம்.

சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களுடன் பிரச்னைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். புதிய நண்பர்களால் ஏமாற்றத்துக்கு உள்ளாகலாம். அனைத்து நபர்களும் சட்டத்துக்கு உட்பட்டு நடப்பது நலம். சிக்கல் வரும் கவனம். அன்புடன் நடந்து கொள்ளுங்கள். பணியில் கெடுபிடி கூடும். ஏச்சு பேச்சு, பிரச்னை என்று வந்துகொண்டே இருக்கும். அரசியல்வாதிகள் தன்னிச்சைப்படி செயல்பட்டு தண்டனைக்கு உள்ளாகலாம். கலைத்துறையினர் உள்ளதை வைத்து நல்லதை செய்து கொள்ளுங்கள். கவனம். விவசாயிகள் செயல்பாடு குறையும். ஆள், பணம் பற்றாக்குறையால் விளைச்சல் பாதிக்கும். 

2016ம் ஆண்டு பலன்கள் - 7 16 25

7, 16, 25 தேதிகளில் பிறந்த நேயர்களே

எதற்கும் அலட்டிக்கொள்ளாத குணமும் ஞானமும் கொண்ட உங்களுக்கு இந்த 2016ம் ஆண்டு பல புதிய நட்புக்கள் மூலம் புகழ் பெற வைக்கும். நீண்டகாலமாக தடைபட்ட திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றம் பெறும். வெளிநாட்டு தொடர்புகள் மகிழ்வாக அமைந்திடும். கரைந்த கையிருப்புகள் மீண்டும் வந்து சேரும். இதுவரை எடுத்துக்கொண்ட எல்லா பணிகள் மூலமும் வருமானம் பெருகும். மங்கள காரியங்கள் மனதுக்கு பிடித்ததுபோல் அமைந்து வரும். பெண்கள் கணவர் இணக்கத்தை பெறுவார்கள். குழந்தைகளால் ஏற்படும் கல்விச்செலவு அதிகரிக்கும். நல்லதே நடக்கும். மாணவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு மதிப்பெண்களை அதிகரிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள்.

2016ம் ஆண்டு பலன்கள் - 6 15 24

6, 15, 24 தேதிகளில் பிறந்த நேயர்களே

வாழ்க்கையினை கொண்டாடும் கலா ரசிகர்களே இந்த 2016ம் வருடம் சென்ற வருடத்தை விட பன்மடங்கு நன்மையை தரும். திடீர் அறிமுகங்கள் மூலம் ஆதாயம்பூர்வீகச் சொத்துக்கள் மூலம் வருவாய் என்று நன்மைகள் குவிந்திடும்.  பொருளாதார ஏற்றம் உண்டு.
சுபகாரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். மனம் போல மணவாழ்க்கை அமையும். நீண்ட காலமாக கிடைக்காத மழலைப்பேறும் உண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். பெண்கள் புதுமைப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். கணவருடன் ஏற்பட்ட மனத்தாபங்கள் அகலும். மாணவர்கள் சாதனைகள் பல புரிந்து கல்வி நிறுவனத்துக்கே பெருமை தேடித்தருவார்கள்.

2016ம் ஆண்டு பலன்கள் - 5 14 23

5, 14, 23 தேதிகளில் பிறந்த நேயர்களே

எதற்கும் கலங்காத மனோதிடம் கொண்ட நல்ல பண்பு கொண்ட உங்களுக்கு 2016ம் வருடம் வெற்றிகளை வீட்டுக்கு கொண்டு வரும்.  நிறைவான வருமானம், எடுத்த காரியங்களில் எல்லாம் முன்னேற்றம் வழிகாட்டும். சுபகாரியங்கள் தங்கு தடையின்றி படிப்படியாக நடந்தேறும். காதலர்களுக்கு வெற்றி உறுதியாகும். உடல்நிலை வெகு நிறைவாக செயல்படும். பல வியாதிகள் தங்களிடம் இருந்து ஓடிப்போகும்.  இரும்பு, கெமிக்கல், வாகன உற்பத்தி, கரும்பாலைகள், மருந்து உற்பத்தி, கட்டடம் கட்டுவது போன்ற துறையினர் அதிகமான வருமானத்தை அடைவார்கள்.
பெண்கள் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள். கணவர் அன்பை பெறுவாகள். குழந்தைகளால் குதூகலம் உண்டு. மாணவர்கள் மன நிறைவுடன் செயல்பட்டு கல்வியில் பெரிய வெற்றி பெறுவார்கள். விளையாட்டிலும் வீரம் காட்டுவார்கள்.

2016ம் ஆண்டு பலன்கள் - 4 13 22 31


4, 13, 22, 31 தேதிகளில் பிறந்த நேயர்களே

எடுத்த காரியம் முடிக்கும் உங்களுக்கு 2016 ஆண்டு எளிமையாக வெற்றிகளை தரும். பல வழிகளில் வருமானம் பெருகும். திடீர் பண வரவுகளால் திக்குமுக்காடிப்போவார்கள். இரும்பு, டிராவல்ஸ் துறையினருக்கு வெகுவான முன்னேற்றம் உண்டு. சொந்தபந்தங்கள் வந்து தங்கள் செல்வாக்கை உணர்வார்கள். சுபகாரியங்கள் கூடிவரும். மூட்டு வலி, சத்து குறைபாடு எல்லாம் நீங்கி நல்ல நிலையில் செயல்படும் உடல்நிலை. திட்டம்போட்டு செயல்பட்டு விரும்பிய எல்லாவற்றையும் திருப்திகரமாக நடத்திக்கொள்வார்கள். மாணவர்கள் கண்ணும் கருத்துமாக தங்கள் பணியில் ஈடுபட்டு திறமையை வளர்த்துக்கொள்வதால் அனைவரிடமும் பாராட்டு பெறுவார்கள்.

2016ம் ஆண்டு பலன்கள் - 3 12 21 30

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்த நேயர்களே

பாரம்பரியத்தினை கொண்டாடும் கட்டுப்பாடான குணமுடைய உங்களுக்கு 2016 ஆண்டில் நினைத்த உயர்வுகளை பெறுவீர்கள். பிரபலமானவர்கள் நட்பு அதிகமான ஆதாயத்தை தேடித்தரும். கைநிறைந்த வருமானம், திட்டங்கள் எல்லாம் நிறைவேறும், கொடுத்து வைத்தவைகள் அனைத்தும் திரும்ப வரும். மகிழ்வான நிலைதான். பெற்றோர் ஆசிகளுடன் தாங்கள் நினைத்தவர்களை கைபிடிப்பார்கள். புதிய வாகனம், வீடு உண்டாகும். பலம் கூடும். நலம் கூடும். மகிழ்ச்சி அதிரிக்கும். பெண்கள் கணவரால் புகழப்படுவார்கள். புகுந்த வீட்டில் புகழும் பாராட்டும் பெறுவார்கள். குழந்தைகளால் குதூகலம் உண்டு. புதிதாக எண்ணம்போல் நகை வாங்கி குவிப்பார்கள். மாணவர்கள் உழைப்பு மாபெரும் வெற்றிகளைபெற உதவிடும். பெற்றோர், ஆசிரிர்களுக்கு பெருமை சேர்ப்பாரகள்.

சொந்த தொழில் செய்பவர்கள் வெளிநாட்டு மாநில ஒப்பந்தங்கள் மூலம் வெகுவான வருமானத்தை குவிப்பார்கள். அரசாங்க ஆதரவும் உண்டு. தொழிலாளர்கள் ஒற்றுமையும் மகிழ்வு தரும் வகையில் அமையும்.

உணவகங்கள், ஜவுளி, பலசரக்கு, ஸ்டேஷனரி வியாபாரிகள் நினைத்ததைவிட அதிக வருமானம் பெறலாம். பணியாளர்களுக்கு பண பலன்கள் அதிகம் கிடைத்து மகிழ்விக்கும். பதவி உயர்வு தரும். 

கலைத்துறையினருக்கு அயல்தேச வரவேற்பு புகழ் தரும் வகையில் அமைந்திடும். அரசாங்க பாராட்டும் உண்டு. விவசாயிகளின் நீண்டகால எண்ணங்கள் ஈடேறும். அருகில் உள்ள நிலங்களை வாங்கி மகிழ்வார்கள். விளைச்சல் பெருகும்

2016ம் ஆண்டு பலன்கள் - 2 11 20 29

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்த நேயர்களே

துணிச்சலை துணை கொண்டு போராடும் குணம் கொண்ட உங்களுக்கு 2016 ஆண்டு சற்று கூடுதல் உழைப்பை ஏற்படுத்தி ஏற்றம் பெற வைக்கும். ஏற்கனவே செய்து வைத்த முயற்சிகளுக்கு ஏற்படும் பலன்களைப் பெற்று உயர்வு பெறவேண்டும். சுபகாரியங்கள் மனதுக்கு இதமாக அமைந்திடும். இருப்பினும் இதனால் ஏற்படும் மன உளைச்சலை தவிர்க்க இயலாது.
பெண்களின் திட்டங்களில் அதிக தடுமாற்றம் ஏற்படலாம். கணவருடன் இணக்கமற்ற நிலை ஏற்படுமாதலால் விட்டுக்கொடுத்து செல்லும் பக்குவம் வேண்டும். குழந்தைகளாலும் கூடுதல் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு இரு துறைகளிலும் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு உயர்வு பெறவேண்டும்.

2016ம் ஆண்டு பலன்கள் - 1 10 19 28

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களே

 அதிகார குணமும் அயராத உழைப்பும் கொண்ட உங்களுக்கு, இந்த 2016ம் ஆண்டு மிக சிறப்பாக துவங்கப்போகிறது. போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் வரிசையாக வெற்றியடையும் நேரம் இது. வருமானத்துக்கு பஞ்சமே இல்லை. புதிது புதிதாக வருமானத்துக்கு வழி கிடைக்கும். இரும்பு, மருந்து, அரசாங்கம். எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் போன்ற துறையில் பணம் வந்து குவியும். எதிர்பார்த்ததுபோல் மங்கள காரியம் நிகழும். புதிதாக வீடு கட்டலாம். வெகு நாளாக துரத்தி வந்த சில நோய்கள் முற்றிலும் விலகி ஓடும். வலிமையும் பலமும் உடல்நிலையில் ஏற்படும்.

பெண்கள் கணவருடன் இணக்கமான சூழ்நிலையை பெறுவார்கள். ஆபரணங்களை வாங்கி குவிப்பார்கள். குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். எதிலும் முதன்மை பெறுவார்கள். வெற்றிகளை குவிப்பார்கள். கல்வியில் கவனம் செலுத்துவார்கள். சொந்த தொழில் செய்வோரின் எண்ணங்கள் ஈடேறும். மருந்து, இரும்பு உருக்காலை, எலட்ரிக் பொருட்கள் தயாரிப்பு விற்பனை செய்பவர்கள் லாபம் ஈட்டுவர். அரசாங்க காண்ட்ராக்டர்கள் நினைத்ததை சாதிப்பார்கள். 

வியாபாரிகள் புதிய கிளைகளை ஆங்காங்கே திறப்பார்கள். புதிய வகை பொருட்களை விற்பனைக்கு விடுப்பதால் மக்கள் செல்வாக்கு பெறுவார்கள். கையிருப்புகளும் அரசாங்க ஆதரவும் பெருகும். கடன்களில் இருந்து விடுதலையடைவார்கள். அரசாங்க, தனியார் பணியாளர்கள் தங்கள் பதவி உயர்வுகளை எளிதில் பெற்று உயர்வு பெறுவார்கள். வீடு, கார் கடன்களை பெறலாம். புதிய உத்வேகத்தை பெறுவார்கள்.
அரசியல்வாதிகள் சாதாரண நிலையில் இருந்து மிகப் பிரமாண்டமான உயர்வுகளை பெற்று மகிழ்வார்கள். தலைமையிடம் மிக இணக்கம் பெறுவார்கள். ஏற்கனவே வழக்குகளில் சிக்கி இருந்தால் விடுதலை பெறுவார்கள். யோசித்து பேசுதல் நலம் பயக்கும். கலைஞர்கள் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் நேரம் இது. விவசாயிகள் மாபெரும் புரட்சிகளை செய்து உற்பத்தியை பெருக்குவார்கள். 

2016ம் ஆண்டு பலன்கள்-பொது

பொது பலன்கள்

    இந்த ஆண்டு சிவசத்தி யோகம் பெற்று பிறக்கிறது. இதனால் பெண்களுக்கான புகழ் கூடும். உலக அளவில் பெண்களுக்கான சமத்துவம் குறித்து அதிகம் பேசப்படும். இந்தியாவை பொறுத்த மட்டில் அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டகரமான ஆண்டு. அதிகப்படியான பேச்சினால் பிரச்சினைகள் உண்டாகும். 

26 December 2015

பரிகாரங்கள் பலிக்க வேண்டுமா?

     ஆன்மீக பரிகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட கிரகம் அல்லது தேவதையின் சக்தியினை ஆசிர்வாதத்தினை முறைபடுத்தி நமக்கு கிடைக்க வழி செய்வதாகும். ஆன்மீக பரிகாரங்களை நம்பிக்கையுடன் முழுமையாக செய்ய வேண்டும். பரிகாரம் செய்யும் அன்பர்கள் ஒரு விஷயத்தை மனதில் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும்.

 பரிகாரம் என்பது நல்ல மழை பெய்யும் நேரத்தில் கையில் ஒரு குடையுடன் பாதுகாப்பாக செல்வதற்கு ஒப்பானது. குடை வைத்திருந்தால் மழையே பெய்யாது என்பது எப்படி சாத்தியம் இல்லையோ, அது போல பரிகாரம் செய்தால் நமது கர்ம வினை பதிவுகள் நடக்காமல் போகும் என்பதும் சாத்தியம் இல்லை. நமக்கு கிடைக்கும் துன்பங்கள், நமது கர்ம வினைக்கு ஏற்ப, இந்த ஜென்மத்தில் திரும்பக் கிடைக்கும். பரிகாரங்கள் அதன் தாக்கத்தை, கடுமையை ஓரளவுக்கு குறைக்கச் செய்யும்.

25 November 2015

கார்த்திகை தீபம் வரலாறு

கார்மேகம் மழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

கார்த்திகை விழா

கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டுதென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.
  • குமராலய தீபம்:முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம்கூடிவரும் நாள்.
  • விஷ்ணுவாலய தீபம்: விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம்கூடிவரும் நாள்.
  • சர்வாலய தீபம்:ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.கார்த்திகை நட்சத்திரத்தன்று பூரணை கூடுகின்ற மாதம் கார்த்திகை ஆகும்.இதனால் இக்கார்த்திகை நாள் திருக்கார்த்திகை எனப்படுகிறது. கார்த்திகை நட்சத்திரம் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதிலுள்ள ஏழு நட்சத்திரங்கள் பிரகாசமானவை. இதிலுள்ள மிகப்பிரகாசமான ஆறு நட்சத்திரங்களே கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் (Pleiades) எனப்படுகிறது.



28 October 2015

ஜாதகத்தின் பயன் என்ன? vol-5

வேதத்தின் ஒரு அங்கமாக ஜோதிடம் பாவிக்கப் படுகிறது. ஜோதிட சாஸ்த்திரம் பூவுலகில் நாம் பிறந்த நேரத்தினை கொண்டு கிரகங்கள் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இணைவுகளை கொண்டு நமது வாழ்க்கையில் என்ன விதமான சம்பவங்கள் உண்டாகக்கூடும் என்பதனை நமக்கு கூறுகிறது. கிரகங்களால் உண்டாகும் நன்மை தீமைகள் ஒரே மாதிரியாக நடந்து வருவது இல்லை. நமது வீட்டில் குளியல் அறை, படுக்கை அறை, சமையல் அறை, விருந்தினர் அறைகள் என எல்லாம் இருந்தாலும், நாம் எப்படி ஒரே சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் உபயோகம் செய்வது இல்லையோ, அது போலவே கிரகங்களும் அதன் வேலைகளை எல்லா நாட்களிலும் செய்வது இல்லை. ஒரு நியதிக்கு உட்பட்டு வரிசைபடியே கிரகங்கள் தங்களின் பலன்களை தருகிறது.


எந்த கிரகம் தற்போது என்ன பலன்களை தருவார், எவ்வளவு காலம் தருவார் என்பதனை நிர்ணயிக்க தெசா புக்திகளை உபயோகம் செய்யும் முறைகளை, பராசர முனிவர் கூறியுள்ளார். அதில் நாற்பதுக்கும் மேற்ப்பட்ட முறைகள் இருந்தாலும், தற்போது விம்சோத்ரி தசை, அஷ்டவர்க்க தசை ஆகிய இரண்டு மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதிலும் அஷ்டவர்கத்தில் பிந்துக்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. இராசி பிண்டம், கிரகபிண்டம், கிரக குணாகரம் போன்ற பவிதமான உட்பிரிவுகளை பலரும் கணிப்பதே இல்லை.

விம்ஷோத்ரி திசாபுத்தியில் ஒரு சுற்றுக்கு 120 வருடங்களாக கணக்கிடுகிறார்கள். ஒருவரின் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ப ஆரம்ப திசாபுத்தி அமைகிறது. ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஜனன சமயம் செல்லு போக இருப்பு என குறித்து இருப்பார்கள். அதுவே அவரின் முதல் திசை புத்தி ஆகும். அதிலிருந்து

சூரியன் தசை 6வருடம். 
சந்திரன் தசை 10வருடம். 
செவ்வாய் தசை 7வருடம்.  
ராகு தசை 18வருடம். 
குரு தசை 16வருடம். 
சனி தசை 19வருடம். 
புதன் தசை 17வருடம். 
கேது தசை 7வருடம். 
சுக்கிரன் தசை 20வருடம் 

என கிரகங்கள் தங்களின் பலன்களை கொடுக்கும். அதிலும் அதன் உட்பிரிவாக தன் புத்தி முதலாக கொண்டு அனைத்து கிரகங்களும் தமது புத்திகளை நடத்தும். புத்தியின் உட்பிரிவாக அந்தரம் மற்றும் சூட்சும அந்தரம் என பல உட்பிரிவுகள் உள்ளது. அவைகளை கணிப்பதன் மூலம் கிரக பலன்களை துல்லியமாக அறியமுடியும். (தொடரும்) 

27 October 2015

உங்களின் ஜாதகத்தில் வர்கோத்தம கிரகம் உள்ளதா?

ஒரு கிரகம் ராசி மற்றும் நவாம்சம் ஆகிய இரண்டு கட்டங்களிலேயும் ஒரே இடத்தில் இருப்பது வர்கோத்தமம் எனப்படும். இவ்வாறு வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!

லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான். அநேக நன்மைகள் உண்டாகும்.

சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.

சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்

செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்

புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.

குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்

சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்

சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்

ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும்



கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும் விபரங்கள்

06 October 2015

ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு செய்வது எப்படி

ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு.
     ஆயுத பூஜை என்பது ஸ்ரீசரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. வீடு, அலுவலகம், தொழில்நிலையம் ஆகியவற்றின் முகப்பில் வாழைக் கன்றுகள், மாவிலைகள், தென்னங்குருத்துத் தோரணங்கள் கட்டலாம்.

     ஸ்ரீசரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபட வேண்டும். அனைத்திலும் மேம்பட்டதாகஸ்ரீ கோமதி சக்கரா என்று கூறப்படும் இயற்கையாக கடலில் கிடைக்கும் சக்கரங்களை 11 என்ற எண்ணிக்கையில் வைத்து முறையாக வழிபடலாம். இந்த கோமதி சக்கரத்தில் முப்பெரும் தேவியரும் வாசம் அளிப்பதாக ஆன்றோர் கூறுகிறார்கள். இந்த பூஜை அனுபவத்தில் மிகவும் சிறந்த பலனை தருகிறது.

    எமது ஸ்ரீராம் ஜோதிட நிலையத்தில் முறையாக சுத்திகரணம் செய்து, பிரத்தியேகமாக ப்ரோகிராமிங் செய்யப்பட ஸ்ரீ கோமதி சக்கரங்கள் கிடைக்கும். ரூ.600 முதல் ரூ.3,000 வரை பலவிதமான அளவுகளில் கிடைக்கும்.( பார்சல் மற்றும் தபால் செலவு ரூ 100 ) கட்டணம் செலுத்தும் விபரம் க்ளிக் செய்க..



     
சரஸ்வதிக்கு உகந்தவை என்று சொல்லப்பட்ட வெள்ளைத் தாமரை, வெள்ளரளி, முல்லை, மல்லிகை, நந்தியாவட்டை, சம்பங்கி, தும்பைப்பூ ஆகியவற்றை சரஸ்வதிக்கு அணிவிக்கலாம். இந்தப் பூக்களையே அர்ச்சனைக்கும் பயன்படுத்தலாம். பழ வகைகளுடன், அவல், பொரி, பொட்டுக்கடலை, சர்க்கரை ஆகியவற்றைக் கலந்து வைக்கலாம். கடலை சுண்டல், வெண்பொங்கல், தேங்காய் சாதம், பால் சாதம், இனிப்பு வகைகள் போன்றவற்றையும் வைத்து நிவேதனம் செய்யலாம்.

சரஸ்வதி தேவியின் திருவடிகளே சரணம்.

28 August 2015

ராகு கேது தோஷம் நிவர்த்தி Ragu Kethu Parihara


     நாம் வசிக்கும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் ஒளி மிகுந்த கிரகங்களும், நட்சத்திரங்களும் இருக்கிறது. கிரகங்கள் ஒன்பது என்றும், நட்சத்திர மண்டலங்களில் கிரகங்களின் பாதையில் உள்ள இருபத்தேழு மண்டலங்கள் என்றும், வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என ஏழு கிரகங்களும் நிழல் கிரகங்கள் எனப்படும், ராகு, கேது
சேர்த்து நவகிரகங்கள் எனப்படுகிறது.

      சூரியனின் ஒரு சுற்று ஒரு வருட காலமும், சந்திரனின் ஒரு சுற்று இரண்டு பட்சங்கள் கொண்ட ஒரு மாதமாகவும் கணக்கிடப்படுகிறது. செவ்வாய் ஒரு சுற்று 18 மாதங்களாகும். புதன், சுக்கிரன், இவர்களின் சஞ்சாரம் ஒரு ஆண்டு ஆகும் சனியின் ஒரு சுற்று முப்பது வருட காலமாகும். குருவின் ஒரு சுற்று பன்னிரெண்டு வருடங்கள், ராகுவும், கேதுவும், ஒன்றரை வருட காலத்தில் ஒரு சுற்றை முடிப்பர். ஏழு கிரகங்களும் பிரதட்சிணமாக சுற்றி வரும் போது ராகுவும், கேதுவும் மட்டும் அப்ரதட்சிணமாக சுற்றி வருகிறார்கள்.

      ராசி சக்கரத்தில் தனக்கென்று வீடு இல்லாமல் இருக்கும் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவிதமானவை. ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்று வசனம் உண்டு. இவ்விருவரும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் ராசியையும், அந்த ராசிநாதனையும் பொருத்தும், இவர்கள் எந்த கிரகங்களின் பார்வை பெறுகிறார்கள் என்பதை பொருத்தும் இவர்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. அனேகமாக நல்ல இடங்களில் அமையாவிடில் இவற்றால் அதிகக் கெடுதல்கள் ஏற்படுகிறது. சந்திரன் சூரியன் இவர்களை விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர். சந்திர, சூரியரையும், பலம் இழக்கும் படி, ஒளி இழக்கும்படி செய்ய இவர்களுக்கு ஆற்றல் உண்டு.

        ராகு கேது தோஷம் உடையவர்கள், மிகவும் கடுமையான பலன்களை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். விவாக தாமதம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவற்றுக்கு காரணமாக இருக்கிறார்கள். மேலும், மனநோய், விபத்துக்கள், தீய சேர்க்கை போன்ற பலவித கெடுதல்களும் ஏற்படும். ராகு, கேது இவர்களால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் கெடுதலான பாதிப்புகள் நீங்க ராகு, கேது ஸ்தோத்திரங்களை சொல்வதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் உண்டு. திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் ராகுவுக்கும், கீழ்பெரும்பள்ளம் எனும் இடத்தில் கேதுவுக்கும், தனித்தனி சன்னதிகள் இருப்பதால் அங்கு சென்று வழிபட்டு நாகநாத ஸ்வாமியை வணங்கி வருவது மிக்க நன்மையினை கொடுக்கிறது. இந்த வழிபாடு ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானாவர்களின் அனுபவம். லக்னத்தில் கேதுவும், ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள ஆண் பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். இத்தகைய ஜாதக அமைப்புகள் உள்ளவர்கள் முறையாக வழிபாடு செய்து வந்தால், சீக்கிரம் திருமணம் நிச்சயமாகி விடும்.

       அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷபரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில், அவர்களின் நல்லாசி பெற, ராகு பகவானுக்கு கோமேதகம் ரத்தினத்தினையும், கேது பகவானுக்கு வைடூரியம் இரத்தினம், ஆகிய ராசிகல்-க்களை ஒரே மோதிரத்தில் அணியும்போது, முக்கியமாக ராகு, கேது இவர்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம் முதலான தோஷம், ராகு தசை பதினெட்டு வருடங்கள். கேது தசை ஏழு வருடங்கள் ராகுகேது மூலம் உண்டாகும் கெடுதல்களைப் போக்கி எல்லா நன்மைகளையும் பரிகாரம் அடைய முடிகிறது. மேலும்  விபரங்களுக்கு...

        கொங்கு தேசமான ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் மும்மூர்த்தி ஸ்தலத்தில் ராகு கேதுக்களுக்கான பரிகார பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. ராகு, கேது தோஷங்கள் நீங்குவதற்காக விசேஷமான பூஜைகள் செய்வதற்கு இங்கே அனேக வசதிகள் உள்ளன. கால சர்ப்ப தோஷம், குடும்ப சாப தோஷம், மேலும் எல்லாவிதமான பாம்பு கிரகங்களால் ஏற்படும் தோஷம் காரணமாக, திருமணம் தடைபட்டு வருபவர்களும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி உறவு சரியில்லாமல் கவலைப்படுபவர்களும், குடும்ப சச்சரவுகளால் மன அமைதி இல்லாதிருப்பவர்களும், செய்யும் தொழிலில் விருத்தி இல்லாமல் இருப்பவர்களும் இத்தலத்தினில் ராகு-கேது பரிகார பூசையினை இங்கு செய்ய முடிகிறது. இங்கு அனைத்து நாட்களிலும் பரிகார நிவர்த்தி பூஜைகள் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு...
tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

26 August 2015

வெற்றிக்கு உதவும் எண்கணிதம் Numerology for success

பெயர் நன்கு அமைந்த ஒருவருக்கு, சுகமான வாழ்வு கிட்டும், தொழில் விருத்தி உண்டாகும், வண்டி வாகனங்கள், வீடு மாளிகைகள், செல்வவளம் பெற்று வாழ்வார் நல்ல இல்லறம், நன்மக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

எந்த வயதிலும் பெயரினை சாதகமான அதிர்ஷ்ட எண்ணில் மாற்றி அமைத்து வளம் பெறலாம். நல்ல அதிர்ஷ்ட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கும் கூட பெயர் நன்றாக இருந்தால் மட்டுமே அதிர்ஷ்ட்டம் நிலையானதாக இருக்கும்.

எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் உனக்கு, உன்னைத் தவிர, உனக்குள் இருக்கும் ஆற்றலைத் தவிர, வேறு எதுவும் உதவாது. என சித்தர்கள் கூறியுள்ளார்கள். நம்முள் உள்ள ஆற்றலை அதிர்ஷ்ட்ட ஆற்றலாக மாற்றி நம்மை ஒரு வெற்றியாளனாக மாற்ற அதிர்ஷ்ட பெயர் எப்போதும் உடன் இருந்து உதவும்.

நமக்குள் உள்ள ஆற்றல் என்பது நமது பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் ஆகியவற்றின் மூலம் கணித்து உணர வேண்டும். அதனை சரியான முறையில் நாம், நேர்மறையாக பயன்படுத்தி நம்மை வளமாக வாழ வைக்கும் கலையே, எண்கணிதம் என்னும் நியூமராலாஜி என்னும் கலையாகும்.

பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...



sriraam jyothida arayci maiyam

tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

25 August 2015

பெயர் மாற்றம்&பரிகார கட்டண விபரங்கள் numerology name correction & parihara fees

ஜோதிடம், எண்கணிதம், குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர், நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்னைகள், தோஷங்கள், பரிகாரங்கள், ராசிக்கல் போன்ற அனைத்து விபரங்களுக்கும் அணுகவும். நேரில் வரமுடியாதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.


பெயர் மாற்றம் செய்வது என்பது, பெயரினை ஒட்டு மொத்தமாக மாற்றுவது இல்லை. பெயரில் ஒரு சிறு மாற்றத்தின் மூலம் நமது பெயரை அதிர்ஷ்ட அலைவரிசைக்கு கொண்டுவருவதே ஆகும்.


நிலைகட்டணம்உங்களுக்கு கிடைக்கும் விபரங்கள்குறிப்பு
குழந்தைகளுக்கு பெயர் சூட்டரூபாய்
 5,699 
மட்டும்
அதிர்ஷ்ட பெயர்,
12 பக்க அதிர்ஷ்ட குறிப்புகள் pdf தரப்படும். .
(பெயர் எண், பிறப்பு எண், விதி எண், எண், தேதிகள், மாதம், வழிபாடு, யந்திரம், தீப தூபங்கள், அதிர்ஷ்ட சின்னங்கள், அதிர்ஷ்ட வண்ணம், அதிர்ஷ்ட வயதுகள், தொழில், பெயர் எண் பலன்கள், ஹீப்ரு எண் பலன்கள், பிறப்பு எண் பலன்கள், அதிர்ஷ்ட ரத்தினம், பெயர் எழுத குறிப்பு, தவிர்க்க வேண்டிய எண், வண்ணம், பற்றிய குறிப்பு)
குறைந்த பட்சம் ஐந்து பெயர்கள் கொடுக்கப்படும். மேலும் பெற்றோர் கொடுக்கும் பெயர்கள் எண்கணித முறையில் பரிசீலித்து தரப்படும்.
உயர் நிலை நியூமராலாஜி 
(பெயர் மாற்றம் செய்ய)
ரூபாய் 8,099 மட்டும்அதிர்ஷ்ட பெயர்,
12 பக்க pdf  அதிர்ஷ்ட குறிப்புகள்.
(பெயர் எண், பிறப்பு எண், விதி எண், எண், தேதிகள், மாதம், வழிபாடு, யந்திரம், தீப தூபங்கள், அதிர்ஷ்ட சின்னங்கள், அதிர்ஷ்ட வண்ணம், அதிர்ஷ்ட வயதுகள், தொழில், பெயர் எண் பலன்கள், ஹீப்ரு எண் பலன்கள், பிறப்பு எண் பலன்கள், அதிர்ஷ்ட ரத்தினம், பெயர் எழுத குறிப்பு, தவிர்க்க வேண்டிய எண், வண்ணம், பற்றிய குறிப்பு)
அதிக பட்சம் மூன்று அதிர்ஷ்ட பெயர்கள் தேர்வு செய்து தரப்படும். அதில் நீங்கள் தேர்ந்து எடுக்கும் பெயருக்கு ஏற்ற அதிர்ஷ்ட குறிப்புகள் தரப்படும்.
உயர் நிலை நியூமராலாஜி (நிறுவனங்களுக்கான பெயர் தேர்வு)
ரூபாய் 9,999 மட்டும்அதிர்ஷ்ட பெயர்,
 12 பக்க pdf குறிப்பு,
சீன வாஸ்த்து குறிப்பு
(நான்கு அதிர்ஷ்ட திசைகள், நான்கு தீய திசை விபரங்கள், வெற்றி திசை, ஆரோக்கிய திசை, குடும்ப வாழ்க்கை திசை, சுயமுன்னேற்ற திசை, தடைகள் தரும் திசை, ஆபத்தினை தரும் திசை, விபத்தினை தரும் திசை, முற்றிலும் தோல்வி தரும் திசை, ஆகிய விபரங்கள்.)
 உங்களுக்கு பொருந்தும் பெயருக்கு ஏற்ற அதிர்ஷ்ட குறிப்புகள் தரப்படும்.
தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்.

கொடுமுடி-யில் தகுதிவாய்ந்த புரோகிதர்களை கொண்டு பரிகாரங்கள் செய்யப்படும்
ரூபாய் 6,000 மட்டும்நாக தோஷம்
காலசர்ப்ப தோஷம்
திருமண தடை தோஷங்கள்
கதளி விவாகம்
ஜோதிடர்களின் தேவைகளுக்கு ஏற்ப எல்லாவிதமான பரிகாரங்களும் செய்யப்படும்.
இந்த கட்டணத்தில் பூஜா பொருள்கள், அய்யர் சம்பாவனை, மற்றும் அர்ச்சனை தட்டுகள் & அபிசேக சீட்டு & தீபம் உட்பட அனைத்தும் அடங்கும். வேறு எந்த மறைமுக கட்டணமும் கிடையாது.


வங்கி கணக்கு எண் காண


பெயர் மாற்றம் மூலம் வளம்பெற கீழ்கண்ட விபரங்களை சமர்பிக்கவும்.

எந்த பிரிவின் கீழ் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

பெயர்:

தந்தை பெயர்:

தாய் பெயர்:

பிறந்த தேதி

பிறந்த நேரம்

பிறந்த இடம்:

குல தெய்வம் பெயர்:

கல்வி:

தொழில்:

ராசிக்கல் அணிந்த விவரங்கள்:

இதுவரை நீங்கள் செய்த பரிகாரங்களின் விபரம்:
1.



உங்கள் தொடர்பு செல் எண்:

உங்கள் மின்னஞ்சல் ஐடி:

உங்கள் முக்கியமான கேள்வி:
1.




tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

எண் கணிதம் விளக்கம் astro numerology

அஸ்ட்ரோ நியூமராலாஜி - எண் கணிதம் விளக்கம்.
      பெயர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் முழுவதும் அவரினை உலகத்துடன் இணைக்கிற முக்கியமான அடையாளம் ஆகும். பெயரின் உச்சரிப்பு என்பது ஒலி அலைவரிசைகளின் அதிர்வாகும். பொதுவாக ஒலி அலைகளின் மாறுபட்ட அதிர்வுகளின் தொகுப்பினையே நமது செவி மொழி என்ற வடிவில் உணர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழி மற்ற எல்லா மொழிகளையும் உள்ளடக்கி உலகத்தினையே ஆட்கொள்கிறது என்பது, அந்த மொழியின் பலமான அதிர்வலைகளின் தொகுப்பு மற்ற மொழிகளின் ஆகர்சன சக்தியினை விட அதிகமானது என்பதனை நாம் உணரவேண்டும். அந்த வகையில் உலகத்திற்கே பொது மொழியாக உள்ள ஆங்கில எழுத்துகளை மட்டுமே பயன் படுத்தி சப்தத்தின் நல்ல மற்றும் தீய விளைவுகளை கண்டறிவது பொருத்தமானதாகவே உள்ளது.


       நம்மை உலகத்தின் சக மனிதர்களுடன் இணைக்கும் நமது பெயரின் அதிர்வெண், நமது ஜாதக ரீதியாக நாம் பிறந்த தேதி எண், விதி எண், மற்றும் உயிர் எண்ணுடன் பொருந்தி போகும் போது, நம்மால் மிகவும் சிறப்பான முறையில் இயங்க முடிகிறது. அதனை இப்படி விளக்கலாம். போர்களத்திற்கு செல்லும் வீரனுக்கு அவனின் அசைவுகளை, போர்முறைகளை, வேகத்தினை தடுக்காத ஆடைகள், கவசங்கள், ஆயுதங்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது பெயரும் முக்கியமானது.

      ஒரு குழந்தை பிறந்து, அது வளரும் போதும் அல்லது வளர்ந்த பின்னரும் கூட பெற்றோர்கள் மட்டுமல்ல குடும்பத்தினை சேர்ந்த எந்த நபர்களும் குழந்தையினை இனிசியலுடன் சேர்த்து கூப்பிடுவது இல்லை. எனவே இனிசியல் இல்லாமலேயே முதலில் பெயரினை மட்டும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தை வளரும் பொது உச்சரிக்கும் அதிர்வலைகள் குழந்தைக்கு நன்மைகள் செய்யும். குழந்தைக்கு வைக்கும் பெயர் நீண்ட பெயராக இருக்கும் பட்சத்தில் செல்லமாக அந்த பெயரில் ஒரு பகுதியினை மட்டும் கூப்பிட முடிவு செய்யும் பொது, எண்கணித நிபுணரிடம் தக்க ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். முழு பெயர் எண்னின் அலைவரிசையினை கெடுக்கும் படியான பெயராக அது அமையுமானால், அது குழந்தைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

      படித்து வளர்ந்து பட்டங்கள் பெற்று, தொழில் அதிபராகவோ அல்லது உயர் பதவியிலோ இருக்கும் பொது நாம் நமது முழு பெயராலேயே அறியப்படுவோம். அப்போது நிறைய கையெழுத்து போடும் பொது இன்சியலுடன் உள்ள பெயரின் எழுத்துகளின் உண்டாகும் அதிர்வுகளின் தாக்கத்தினால் மீண்டும் நாம் மாறுபாடான பலன்களை அடையக்கூடும். எனவே இன்சியலுடனும், இல்லாமலும் மேலும் நமது கூப்பிடும் பெயரும் கூட ஒரே அலைவரிசையில் நட்பு அலைவரிசையில் இருக்குமாறு அமைத்து கொள்ளுங்கள். பெயர் மட்டுமே முழு பலன்களை தந்து விட முடியாது. அவரவர்களின் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து தான் பெயர் வைக்க வேண்டும். ஜாதக ரீதியாக மிகவும் கடினமான சூழலில் சிக்கிய அன்பர்கள் 100% எண்கணித முறையில் எளிமையான வாழ்க்கையினை அடையலாம். ஜாதக ரீதியாக தற்போது நல்ல சூழல் இருக்கும் அன்பர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தினை 100% தக்க வைத்து கொள்ள முடியும். மேலும், அதனை வாழ்நாள் முழுதும் தொடரவைக்க முடியும். 
   ஜோதிடம் எண்கணிதம், குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர், நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்னைகள், தோஷங்கள், ராசிக்கல் போன்ற அனைத்து விபரங்களுக்கும் அணுகவும். நேரில் வரமுடியாதவர்கள் Consultng Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.

18 August 2015

நாக சதுர்த்தி, நாக பஞ்சமி (naga parikara)

 18-08-2015 ம் தேதி நாகசதுர்த்தி வழிபாடு
 19-08-2015 ம் தேதி நாகபஞ்சமி வழிபாடு
இந்த இரண்டு நாட்களில் நாக தெய்வங்களை முறைப்படி வழிபட ஜாதக ரீதியான, ராகு கேது தோஷங்கள், குடும்ப சாப தோஷம், கால சர்ப்ப தோஷம், மற்றும் விஷ ஜந்துக்களால் உண்டாகும் தோஷங்களும், விலகி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

விசேசமாக தினசரி பூஜை செய்யப்படும் இடத்தில், அரசு வேம்பு மரத்தடியில், இந்த தினங்களில் நாக பிரதிஷ்டை செய்ய அநேக விதமான நன்மைகள் உண்டாகும். தோஷ நிவர்த்தி ஆகும். வழிபாட்டு மந்திரத்திற்கு அடுத்துள்ள இணைப்பினை க்ளிக் செய்க...>> நாகர் வழிபாடு மந்திரம்

25 July 2015

ஜிர்கான் (வைரத்தின் மாற்று கற்கள்) zircon

ஜிர்கான்

         zircon stones எனப்படும் இந்த கற்கள் பளபளப்பில் வைரத்தினை போன்றே பிரகாசிக்கும். மற்ற கற்களை விட இதன் அடர்த்தி அதிகம். (zicon=4.7, diamond=3.62) எனவே எளிதில் உடையாது. ஜிர்கான் பலநிறங்களில் கிடைத்தாலும் நிறமற்ற கற்களே வைரத்திற்கு மாற்றாக கருத படுகிறது. மற்றவை ரத்தினமாக கருதப்படுவது இல்லை. 



கிடைக்கும் இடங்கள்.
     வியட்நாம், தாய்லாந்து, இலங்கையில் அதிகம் கிடைக்கும் இந்தவகை கற்கள் மதிப்பு மிக்கவைகளாகும்.

யார் அணியலாம்?
1. வைரம் அணிய நினைக்கும் அனைத்து நபர்களும் அணியலாம்.
2. 5, 14, 23 ம் தேதியினரும், விதி எண் 5 வருபவர்களும் அணியலாம்.
3. ரிசபம், துலாம் இராசி, இலக்கினமாக வரும் அன்பர்கள் அணிந்து ஆனந்தம் அடையலாம்.
4. சுக்கிர திசை, புத்தி நடப்பில் உள்ள அனைவரும் அணியலாம்.

அணிபவர்கள் அடையும் நன்மைகள்.
1. வாதம், பித்தம், கபத்தினை சமன் செய்து ஆரோக்கியத்தினை உறுதியாக்கும்.
2. மனதுக்கு உற்சாகம் தரும்.
3. உடல் அழகினை அதிகரிக்கும்.
4. வைரத்திற்க்கான அனைத்து பலன்களையும் அடையலாம்.

குறிப்பு:
அதிகம் போலி கற்கள் புழங்கும் கற்களில் ஜிர்கான்-ம் ஒன்று. அமெரிக்கன் டைமண்ட் எனப்படும் செயற்கை கற்களை ஜிர்க்கான் என கூறி விற்று விடுகிறார்கள். எனவே ஜிர்கான் வாங்கும் அன்பர்கள் நன்கு விசாரித்து வாங்கவும்.
ஜிர்க்கான், வாங்க முடியாத பட்சத்தில் வெள்ளை புஷ்பராகம், அல்லது வெள்ளை குவார்ட்ஸ் கற்களை அணிந்து பயன் அடையலாம்.

மேலும் விபரங்களுக்கு: க்ளிக்

20 July 2015

தச தானம்

எந்த ஒரு பூஜையும் தானம் அளிப்பக்கும் பொது தான் பூரணம் அடைகிறது. தானங்களில் பலவிதங்கள் இருந்தாலும் அனுபவத்தில் அதிக பலன் தரக்கூடிய, சிறப்பான தானம் என பெரியோர்களால் விரும்பும் தானம் தசதானம் ஆகும். ஒரே சமயத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு, பத்து விதமான பொருள்களை தானம் அளிப்பதே தச தானம் ஆகும். இதனால் பலவிதமான நற்ப்பலன்களை கர்த்தா அடைகிறார்.  

தச தானம்செய்ய உகந்த பொருள்களும், 

அதனால் பெரும் பலன்களும்... 



மஞ்சள் தானம்=நோய் நீங்கும்
குங்குமம் தானம்=மாங்கல்ய பலம்
சந்தனம் தானம்=நினைத்தது நடக்கும்
வஸ்த்திரம் தானம்=ஆயுள் விருத்தி
பழங்கள் தானம்=தரித்திரம் நீங்கும்
நெய் தானம்=மகாலட்சுமி வசியம் ஏற்ப்படும்
நெருப்பு தானம்=நோய் நீங்கும்
மஹா கூஷ்மாண்ட தானம்=ஆயுள் விருத்தி உண்டாகும்
இரும்புசட்டி தானம்=ஆபத்து நீங்கும்
தில தானம்=ஆயுள் விருத்தி உண்டாகும்
கண்ணாடி தானம்=ஜனவசியம்  ஏற்ப்படும்.
மஹா தானம்=சர்வ ஜெயம் உண்டாகும்
பசு தானம்=தெய்வ அருள் உண்டாகும்
நவதானிய தானம்=நவக்கிரக தோஷம் நீங்கும்
அன்னதானம்=சகல பாவங்கள் விலகும்
பூமி தானம்=சகல ஐஸ்வரியம் கிடக்கும்
தண்ணீர்  தானம்=சகல தோஷம் விலகும்
தேங்காய் தானம்=சகல பாவங்கள் விலகும்
தேன் தானம்=புத்திர பாக்கியம் கிடைக்கும்

நாக கவசம் naga kavasam

ஜாதகத்தில் லக்னம், இரண்டாம் பாவத்தில்  ராகு கேது உள்ளவர்கள், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மரற்றும் நாக தெய்வங்களின் அருளினை பெற விரும்புபவர்கள், கீழ்கண்ட நாக கவசத்தினை பாராயணம் செய்து பயன் பெறலாம். மேலும் சமஸ்கிருதத்தில் நாக துதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. அன்பர்கள் படித்து பயன் அடைவீர்களாக!!

  

நாக கவசம்


நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே!

வணங்கும் பக்தர்க் கருளுகிற வளந்தரு நாகராசவே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய் தெற்கினிலே
சுணக்க மின்றிச் சுகந்தருவாய் சோதி மறையும் மேற்கினிலே
மணக்க வந்து காப்பாயே வடக்கிலும் காத்து வளந்தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில் மேல் கீழ் ஆகாயம்
நீயே செல்வம் தனைத்தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய் நெற்றியோடு
வாயைப் புருவ நடுவினையும் வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்.

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா; பற்கள்
மின்னும் நாகராசாவே விரைந்து காப்பாய் முகங்கழுத்தும்
இன்னல் தீர்க்கும் எழில் கோவே இதமாய் காப்பாய் தோள், கைகள்
மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்.

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இலையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் காப்பாய் நீ நீள்தொடை முழந்தாள் ஆடுசதை
மலையே கால்நகம் கனைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாய் காப்பாயே!

எங்கள் உரோமம் நரம்பினையும் எலும்பு தசைகள் ரத்தம் தும்
திங்கள் ரவி உள்ளவரைத் தினமும் காப்பாய் இரவு பகல்
மங்கும் நேரம் மலர் நேரம் மருளும் நேரம் மகில்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே! அரவத் தேவே காப்பாயே!

எட்டுத் திசையிலும் காப்பாயே எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள் தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப் போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே விடங்கள் ஏறா தருள்வாயே!

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகர்க்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்ற்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணிய தெல்லாம் ஈமக்கீந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய சுப்பிரமணியனிவன் செந்சொல் கவசம் தினம் சொன்னால்
நல்ல புத்திர பேறு தரும் நாக தோஷம் நீங்கி விடும்
இல்லற சுகமும் இயைந்து வரும் எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன வெல்லாம் கைகூடும் வாழ்வு வளமும் பெருகிவிடும்.

 நாக துதி
ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி

ஸர்வத்ர விஜயூபவேத்

09 July 2015

சந்திர காந்த கல் moon stone

 சந்திரகாந்த கற்கள்





இந்த கற்களின் ஒளி பட்டைகள் மிகவும் அழகாக இருக்கும். வைடூரியம் போன்று சுழலும் ஒளி தெரியும்.இது கீழ் புறம் தட்டையாக மேல்புறம் மளமளப்பாக இருக்கும். இந்த சந்திரக்காந்த கற்கள் பார்ப்பதற்கு வெண்மையாக, பார்வைக்கு குளிர்சியாக சந்திரனை போல தெரியும். ரோமானியர்கள் இதனை லுனாரிஸ் (lunaris) என கூறி மகிழ்வார்கள்.

மூன்ஸ்டோன் அதிகமாக இலங்கையிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நமது நாட்டிலும் அதிகம் கிடைக்கிறது. மூன் ஸ்டோன் கற்கள், லேசான பச்சை, நீலம், பழுப்பு  வண்ணங்களிலும் கிடைக்கிறது. இதில் பழுப்பு நிறம் கொண்ட கல் தரம் குறைந்தவைகளாக கருதப்படும். 

    சந்திரகாந்த கற்கள் அணிபவர்கள் பெரும் நன்மைகள்


இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். 
பொருள்வரவு தடையின்றி கிடைக்கும். 
கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். 
ஜலகண்டதில் இருந்து காக்கும்.
நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகுதல் சரியாகும்.
தியானம் போன்றவற்றில் மனம் ஒருநிலை அடைய வைக்கும்.



மருத்துவ குணங்கள்

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் கோளாறுகளை சீராக்கும்.
இருதய கோளாறுகளை கட்டுப்படுத்தும்.
வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.
குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். 
மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?    
   
2,11,20,29   ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.
கடகம் ராசி, இலக்கினம் உடையவர்கள் அணியலாம்.
நன்முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு  மாற்றாகவும் அணியலாம்.
குறைந்த பட்சம் 5காரட் முதல் எவ்வளவு பெரிதாகவும் அணியலாம். விலை பற்றி அறிய...