08 March 2023

அதிர்ஷ்டம் தரும் நவரத்தினங்கள் (இலவச வகுப்பு)

 உலகில் நூற்றுக்கணக்கான கற்கள் இருந்தாலும், அவற்றில் சில வகை கற்களே, மக்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என நமது ஆன்றோர்கள் கண்டறிந்து உள்ளார்கள். அவைகள் ஆற்றல் மிக்கவைகள் என அடையலாம் கண்டு உள்ளார்கள். மேலும் அவைகள் நல்ல அதிர்வலைகளை கொண்டவை, என அறிவியல் ஆய்வுகளும் வெளி வந்து கொண்டு உள்ளது.

இதுவரை 84 வகையான கற்களை பயன்படுத்தி வெற்றியும் பெற்று உள்ளார்கள். இந்த 84 வகையான கற்களில் அதிக சக்தி மிக்கதாகவும், மதிப்பு மிக்கதாகவும், அமைந்து இருப்பது தான் நவரத்தினங்கள். நவரத்தினங்களை விலை உயர்ந்த கற்கள்(Precious stones) எனவும், மற்ற வகை கற்களை உபரத்தினங்கள் (Semi precious stones) எனவும் பிரித்துள்ளார்கள். அந்த உபரத்தின கற்களையே நாம் அதிர்ஷ்ட கற்கள் (Lucky stones) என்று கூறுகிறோம். இவற்றில் சிலவகை கற்கள் மருந்து தயாரிக்க மட்டுமே பயன்படும் என்பது அதிசயமான உண்மையாகும்.
ராசிக் கற்களை பற்றி விரிவாக youtube -ல் முன்னரே தந்திருந்தோம். அதனை நமது மாணவர்கள் தொகுப்பாக அறிய இங்கே பாடமாக தந்துள்ளோம். பயன் பெறுங்கள்.




பெங்சூயி சீன வாஸ்து சாத்திரம்

 பெங்சூயி சீன வாஸ்து சாத்திரம்

காலம் காலமாக மறைக்கப்பட்ட வாஸ்து ரகசியங்களை,
முதல் முறையாக தமிழ்வழியில் கற்றுக்கொள்ள அரிய வாய்ப்பு.
வீடுகட்டுதல் என்பது இன்றைய நிலையில் அவசர அவசரமாக செய்யப்படுகிறது. அவசரத்தில் ஆரம்பித்த இல்லத்தில் உண்டாகும் வாஸ்து குற்றங்களின் விளைவுகளை சந்திக்க முடியாமல், தினம் தினம் வருத்தப்படும் நிலையில் உள்ளோம்.
இதற்கான தீர்வு சீனவாஸ்து.
இந்த பிரச்சனைக்கான 100% தீர்வினை பெங்சூயி கலை தருகிறது. இந்த பாடத்தில் பல்வேறு சூட்சும ரகசியங்களை அரிய உள்ளீர். FENG SHUIயின் சக்திகளின் பிறப்பிடம் பற்றிய சூட்சுமங்கள், FENG SHUI முறையில் உங்கள் அதிர்ஷ்ட திசைகளை அறியும் ரகசியங்கள், FENG SHUI வாஸ்துவும் இன்-யாங் தத்துவமும் பற்றிய விளக்கம் போன்றவற்றை கற்கலாம்.
இத்துடன், வாஸ்து தோஷங்கள் என்றால் என்ன? அந்த தோஷங்களை நீக்கும் 30 க்கும் மேலான எளிய சீன வாஸ்து கருவிகள் என்ன? கருவிகளை பயன்படுத்தும் வழிகள் என்ன? தனிநபர்களாக தங்கள் ஜாதிக ரீதியாக எட்டு திசைகளை பயன்படுத்தி பணம் புகழ் ஆரோக்கியம் அடையும் வழிகள் என்ன? போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.
முழுமையாக வடிவமைக்கப்பட்ட 11 மணி நேரத்திற்கும் மேலான வீடியோ பாடங்கள் வழியே சீன வாஸ்துவின் பல்வேறு பரிணாமங்களை உணர்வீர்கள்.



வேத நட்சத்திர பலன்கள்

 


நட்சத்திரங்களும் தேவதைகளும்

ஜோதிடத்தில் பலன்களை தருவது மூன்று மாபெரும் சக்திகள் ஆகும். இதில், கிரகங்கள் ராசிகள் பற்றியும், ராசிகளின் அடிப்படையில் அமைந்த நட்சத்திரங்கள் பற்றியும் அறிந்துள்ளோம்.
இந்த வழியே, பல்வேறு விரிவான நட்சத்திர பலன்களை பற்றி கூறும் பாடங்களை மனப்பாடம் செய்துசெய்து பல்வேறு குழப்பத்தில் ஆழ்ந்த நபர்கள் உள்ளார்கள்.
இதில், எந்த பிரிவில் நீங்கள் இருந்தாலும் சரி, வேதம் கூறும் நட்சத்திர பலன்களையும் உள்வாங்கிக் கொள்ளும் போதுதான், பலன்களை நிர்ணயிப்பது 100 % துல்லியத்தினை நோக்கி செல்லும்.
ஸ்ரீராம் ஜோதிடாலயம் வழங்கும், வேதம் கூறும் நட்சத்திர பலன்கள் பாடங்கள் பலன்களை பற்றி மட்டுமே கூறப்போவாதில்லை. மாற்றாக, பலன்களை மாணவர்களே நிர்ணயிக்கும் யுக்திகளை மிக விரிவான பாடங்களாக தரவுள்ளோம். (18+ மணி நேர வீடியோ பாடங்கள்)
உதாரணமாக, அசுவினி, மகம், மூலம் மூன்றும் கேதுவின் நட்சத்திரங்கள். ஆனால், இவற்றின் பலன்கள் முற்றிலும் வெவ்வேறாக இருக்கிறது.
அசுவினி மகிழ்ச்சியான ஒன்றாகவும், எளிதில் ஆசைப்படும் குணத்துடனும், அதை அடைய முயற்சி செய்யும். தன்னிடம் நியாயம் இல்லையெனில் எதிர் தரப்புக்கே நன்மை செய்யும் படி செய்யும். இது, மகத்திடம் தனது முயற்சியின் பலனை மட்டுமே நம்பி செயல்படும் குணமாக வெளிப்படுகிறது. கடைசியாக, மூலத்திடம், அடைந்தே தீர்வது எனும் முனைப்பில் அனைத்தினையும் துவம்சம் செய்யும் கோபாவேஷம் குணம் மிகுந்துள்ளதையும் காண்கிறோம்.
இது ஏன் என அறிய ஆவலுடன் உள்ளீரா?
ஆம் எனில்... உங்களுக்கான இந்த ஆன்லைன் வகுப்பறையில் இணையுங்கள்...
இந்த வகுப்பில் கலந்து கொள்வது புத்தம்புதிய அனுபவத்தினையும், உயர்ந்த வழிகாட்டலையும் தரும் என்பது உறுதி. இத்தனை விரிவாக ஜோதிட நட்சத்திரங்களை பற்றி இதற்கு முன்பு அறிந்திருக்க மாட்டீர்கள். நேரடி வகுப்பாக இருந்தால் முழுதாக 5 நாட்கள் இந்த வகுப்பிற்கு தேவைப்படும். இந்த அற்புத வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள இறைவனின் ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.


சோடச வர்க்க சக்கர சூட்சுமங்கள்

 

வர்க்க சக்கரங்கள்

(24+ மணிநேர வகுப்பு)

இராசி மண்டலம் 360 பாகையாக அமைந்துள்ளது. 360 பாகையும் 12-இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே ஒரு இராசிக்கு 30 பாகையாக அமையும். ஒவ்வொரு இராசியின் 30 பாகை பல பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவும் வர்க்கங்கள் அல்லது Divisional Chart என்று அழைக்கப் படுகிறது.
ஒவ்வொரு வர்க்கங்களும் ஜாதகரின் ஆயுள், செல்வம், கல்வி, திருமணம், குழந்தைகள், உத்தியோகம். ஆன்மீகம் போன்றவற்றை விளக்குகிறது. பதினாறு வர்க்கங்களை மகரிஷிகள் விளக்கியுள்ளார்கள். இத்துடன் ஜெயமினி முனிவர் அருளிய பஞ்சமாம்சம் D5, சஷ்டாம்சம் D6, அஷ்டாம்சம் D8 ஆகிய மூன்று வர்க்கங்களுடன் சேர்த்து மொத்தம் 19 வாவையான வர்க்கங்களை பற்றி மிக விரிவாக அறியலாம்.
24 மணி நேரத்திற்கும் அதிகமான (1,225 நிமிடம்) பாடங்கள்.

1. இராசி (D1) - ஒரு இராசி 30 பாகைகள் கொண்டது. இதன் மூலம் அனைத்து பலன்களும் அறியலாம்.
2. ஹோரா (D2) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 2 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. ஹோரா ஜாதகரின் செல்வநிலையைக் குறிக்கிறது.
3. திரேக்காணம் (D3) - 30 பாகை கொண்ட இராசி 3 சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. திரேக்காணத்தின் மூலம் சகோதர சகோதரிகளைப் பற்றி அறியலாம். மேலும். உடம்பிலுள்ள மச்சம். மரு. காயங்கள் விபத்துக்கள் பற்றியும் அறியலாம்.
4. சதுர்த்தாம்சம் (D4) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 4 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சதுர்த்தாம்சத்தின் மூலம் ஜாதகரின் அதிர்ஷ்டம். குழந்தைப் பருவம். சொத்துக்கள் போன்றவற்றை அறியலாம்.
5. சப்தாம்சம் (D7) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 7 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சப்தாம்சத்தின் மூலம் குழந்தைகள் பற்றிய விபரம் அறியலாம்.
6. நவாம்சம் (D9) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 9 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. நவாம்சத்தின் மூலம் களத்திரம். திருமணவாழ்க்கை. சமூக அந்தஸ்து மற்றும் கிரகங்களின் பொதுவான பலத்தைப் பற்றி அறியலாம். நவாம்சம் தர்மாம்சம் எனவும் அழைக்கப்படுகிறது.
7. தசாம்சம் (D10) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 10 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. தசாம்சத்தின் மூலம் தொழில் மற்றும் ஜீவனத்தை அறியலாம்.
8. துவதசாம்சம் (D12) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 12 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. துவதசாம்சத்தின் மூலம் பெற்றோர்கள் மற்றும் இரத்த சம்பந்தமுள்ள நெருங்கிய உறவினர்களைப் பற்றிய விபரங்களை அறியலாம்.
9. சோடசாம்சம் (D16) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 16 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சோடசாம்சத்தின் மூலம் வாகனங்கள். சுகபோகப் பொருட்கள் மற்றும் மகிழ்ச்சியை அறியலாம்.
10. விம்சாம்சம் (D20) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 20 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. விம்சாம்சம் மூலம் ஆன்மீகத் தொடர்பு. செயலாற்றும் தன்மை. செயல்களில் ஈடுபாடு போன்றவற்றை அறியலாம்.
11. சதுர்விம்சாம்சம் (D24) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 24 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சதுர்விம்சாம்சத்தின் மூலம் உயர்கல்வி. அறிவாற்றல் மற்றும் கல்வியில் சாதனை நிகழ்த்துதல் போன்றவற்றை அறியலாம்.
12. சப்த விம்சாம்சம் (அ) பாம்சம் (D27) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 27 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. பாம்சத்தின் மூலம் ஜாதகரின் புறத்தோற்றம். பலம். மனநிலை. ஆன்மீகத் தொடர்பு முதலியவற்றை அறியலாம்.
13. திரிசாம்சம் (D30) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 5 சமமற்ற பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. திரிசாம்சத்தின் மூலம் ஜாதகருக்கு ஏற்படும் துன்பங்கள். தீமைகள். துரதிர்ஷ்டம் போன்றவற்றை அறியலாம்.
14. கவேதாம்சம் (D40) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 40 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. கவேதாம்சத்தின் மூலம் அதிர்ஷ்டம். தாயார் வழிச் சொத்துக்களை பற்றி அறியலாம்.
15. அக்ஷவேதாம்சம் (D45) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 45 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. அக்ஷவேதாம்சத்தின் மூலம் தந்தை வழிச் சொத்துக்களை பற்றி அறியலாம்.
16. சஷ்டியாம்சம் (D60) - 30 பாகை கொண்ட ஒரு இராசி 60 சமமான பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. சஷ்டியாம்சம் இராசி சக்கரத்தை போன்றே பலவிதமான பலன்களையும் அறிய பயன்படுகிறது. மேலும் இதன்மூலம் முற்பிறப்பின் கர்மா மற்றும் இப்பிறப்பில் நடைபெறும் பலன்களை அறியலாம்.



ஜெயமினி சூத்திரம்

 

ஜோதிடத்தின் புதிய பரிணாமம்

ஜோதிடம் என்பது மூன்று காலங்களையும் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாகும். ஜெயமினி சூத்திரம் மூலமாக பல்வேறு பலன்களை மிக நுணுக்கமாக அறிய முடியும்.
நமது முன்னோர்களான ஞானிகள் பலவித ஜோதிடமுறைகளை நமக்கு தந்து அருளி உள்ளார்கள். அதில் பராசரர் ஜோதிடத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுத்தார். வராகமிகிரர் இன்று நாம் அறிந்துள்ள பாரம்பரிய ஜோதிட முறையை தந்துள்ளார். ஜெயமினி அவர்கள் இவர்களுக்கு அடுத்து வந்தவர் ஆவார். பராசரர் வராகமிஹிரர், கூறிய சூட்சுமங்களை உள்வாங்கி, தனது அற்புத ஞானத்தினால் "ஜெயமினி சூத்திரம்" என்ற புதிய ஜோதிட முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். பாரம்பரிய முறையே ஜோதிட பலன் கூறும் முறைகளின் தாய் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவற்றினை கொண்டு புத்தம்புதிய பலன் கூறும் முறைகளை அமைத்து தந்தவர் மகரிஷி ஜெயமினி ஆவார்.
ஜெயமினி சூத்திரக் சிறப்புகளை சொல்லவேண்டுமானல்,
12 வகையான லக்னம் (ஆருடபதம் உபபதம் கோச பதம் என்று...), ஏழு காரகர்கள் (ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு காரக பெயர்கள் அதாவது ஆத்மகாரகர் அமாத்திய காரகர் என...), மிக முக்கியமாக பார்வை பற்றி... ராசிக்கும் பார்வை உண்டு என்ற புதிய நிலையை ஜெயமினி அறிவித்தார். மேலும், காரகாம்சம், பிரம்மா, ருத்ரா, மகேஸ்வரன், அர்க்கலா என்ற பலவிதமான புதிய சொற்கள் பற்றியும் இந்த 15 மணி நேர பயிற்சியில் கற்றுக்கொள்ள உள்ளோம். மேலும் இந்த ஜோதிட முறையானது பிருகு நாடி ஜோதிட விதிகளுக்கும் பொருத்தமாயுள்ளது என்பது இன்னும் சிறப்பு மிக்கதாகும்.


பிருகு நந்தி நாடி & சக்கர பத்ததி

 

பிருகு நந்தி நாடி ஜோதிடம்

கணிதங்கள் இல்லாத துல்லிய பலன் கூறும் எளிய ஜோதிட முறையே பிருகு நந்தி நாடி
பிருகு நந்தி நாடி முறையில் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது இலக்கினம் என்ற ஒன்றை கருத்தில் கொள்வது இல்லை. பழைய ஜோதிட(பராசரர்) முறையானது பாவகங்களை எடுத்து, பாவகாரகங்களை வைத்து, தசா புத்தியை மையமாக வைத்துப் பலன் சொல்லப்படுகிறது. பிருகு நந்தி நாடி முறையில், பாவகாரகங்களை விடுத்து பிரதானமாக கிரக காரகங்களை வைத்துப் பலன் கூறப்படுகிறது.
கோள்களின் காரகத்துவங்களைக் கொண்டு பலன்கள் அறியப்படுகின்றன. கோள்களின் சஞ்சாரம் ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் எப்படி மாறுதல்களை ஏற்படுத்தும் என கூறுகிறது. ஒருவருடைய பிறந்த ஜாதகமானது, அவர் எந்த மாதிரிப் பலன்களை அனுபவிக்கப் பிறந்தவர் எனக் காட்டுகிறது. அந்தப் பலன்களை எப்போது அனுபவிப்பார் என்பதை நாடி முறையில் துல்லியமாக கூற முடியும்.
சில முக்கிய கோட்பாடுகளை சிறப்பாக கூறலாம். குறிப்பாக ராசிக் கட்டத்தில் ஒரு கிரகம் தனித்து இருந்தால், அந்த கிரகமாகப்பட்டது எந்தவிதமான பலனையும் தருவது இல்லை. மாறாக, ஒரு கிரகமானது, வேறு ஒரு கிரகத்துடன் இணைந்து, ஒரு வீட்டில் இருந்தால், அந்த இணைவுக்குத் தக்கபடி நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும்.
இதுபோன்ற நூற்றுக்கணக்கான ரகசியங்களை ஒழிவு மறைவு இன்றி நமது பத்துமணி நேரத்திற்கும் மேலான பாடங்களில் கற்றுக்கொள்ளுங்கள்.


நீங்களும் ஜோதிடர் ஆகலாம்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்

எளிய முறையில் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் பலன் கூற தேவையான பல்வேறு நுணுக்கங்களை அனைவருக்கும் புரியும்படி கற்பிக்கும் விரிவான பாடங்கள்.
(36 தலைப்புகளில், 15 மணி நேர பாடங்கள்)
பயிற்சியில் கற்றுக் கொள்ளவுள்ள சிவற்றை பட்டியலிடுகிறோம்.
  1. திதி காரண யோக நாள் பலன்கள்
  2. நட்சத்திர, ராசி பலன்கள்
  3. நவக்கிரக, பாவக பலன்கள்
  4. திசாபுக்தி பலன்கள்
  5. கோட்சார பலன்கள்
  6. அஷ்டவர்க்க பலன்கள்
  7. பலன் கூறும் சூட்சுமங்கள்
  8. துருவ கணிதம் ரகசியங்கள்



 

பாரம்பரிய ஜோதிடம் அறிமுகம்

பாரம்பரிய ஜோதிடம் அறிமுகம்

ஜோதிடத்தின் அடிப்படையான அறிவியல் & தத்துவம் பற்றிய விரிவான பாடங்கள். ஜோதிடம் வெறும் அனுமானம் அல்ல, பெரிய அறிவியலை தன்னுள் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சி அடிப்படை மாணவர்களுக்கு மிக முக்கியமானது. கீழ் கண்ட முக்கியமான விஷயங்கள் பற்றி நீங்கள் கற்கவூள்ளீர்.
(4:45 மணிநேர பாடங்கள்)
  1. விண்வெளி ராசி மண்டலம் பற்றிய விளக்கம் (36 mins)
  2. ராசி மற்றும் நட்சத்திரம் பற்றிய விளக்கம். (46 mins)
  3. பஞ்சாங்க விபரங்களை அறிதல் (28 mins)
  4. ஜாதக கட்டத்தில் பூமி எங்கே உள்ளது? மற்றும் கேந்திர கோணம் பற்றிய விளக்கம். (13 mins)
  5. காலம் நேரம், மணி, நாழிகை பற்றிய முழுமையான விளக்கம். (18 mins)
  6. பஞ்ச பூதம் மற்றும் ஆண் பெண் தத்துவங்கள் (38 mins)
  7. லக்கினம் பற்றிய அறிவியல் பார்வை. (15 mins)
  8. இன்னும் பல்வேறு ஜோதிட விஷயங்கள் அறிமுகம். (88 mins)


ஜாதக கணித பயிற்சி


உதயாதி நாழிகை கணிதம் முதல் ஜாதக புத்தகம் எழுதி தரும் பயிற்சிகள் அடங்கிய முழுமையான பாடங்கள்.

இன்று ஜாதகம் கணிப்பது என்பது கம்ப்யூட்டர் மொபைல் சாப்ட்வேர்கள் மூலமாக மிக எளிமையாக செய்து விடுகிறோம். இருப்பினும் அந்த கணிதங்களை நாமாக செய்ய பயிற்சி பெற்றிருப்பது நல்லது. இதன் மூலம் ஜோதிடம் மீதான புரிதல் இன்னும் நெருக்கம் அடையும். நமது பாடத்தின் மூலமாக சாத்தியப்படுத்தி உள்ளோம். நீங்கள் கற்றுக்கொள்ளவுள்ள சில முக்கியமான பாடங்களின் தலைப்புகளை பட்டியலிடுகிறோம்.
  1. பஞ்சாங்க வார்த்தைகளின் விளக்கம் & புரிதல்கள்
  2. லக்கின கணிதம்
  3. ராசி, நவாமிசம், திரேக்கண கணிதம்
  4. கிரக பாதசார, பாகை கணிதம்
  5. திசா & புக்தி கணிதம்
  6. அஷ்டவர்க்க கணிதம்
  7. தசவித திருமண பொருத்தம்



தொழில் முறை எண் கணிதம்

 தொழில் முறை எண் கணிதம்

நியூமராலஜி என்பது எண்களின் அறிவியல் ஆகும். நமக்கான வாழ்க்கையினை நாமே தேர்வு செய்ய, நமக்கு என்ன தேவையோ அதனை அடைய வழிகாட்டும் கலையாகும்.


நியூமராலஜி பற்றி புரிந்துகொள்ள நம் இதயத்தினை ஆன்மாவை முழுமையாக திறந்து வைப்போம். இது வாழ்க்கையில் நிறைந்துள்ள வார்த்தைகள், பெயர்கள் மற்றும் யோசனைகளில் உள்ள எழுத்துக்களின் எண் மதிப்பைப் பற்றிய ஆய்வு ஆகும். எண்களின் சக்திமிக்க ஆற்றல் தரும் ்வாழ்க்கை விளைவுகள் பற்றிய ஆய்வுதான் எண்கணிதம். எண் கணிதம் என்பது உங்கள் கனவுகளை யதார்த்தமாக மாற்றுவதற்கான, உங்கள் வாழ்க்கையை அற்புதமாக்குவதற்கான ஒரு வழிமுறை எனலாம். ஒவ்வொரு எண்ணும் எதைக் குறிக்கின்றன என்பதையும், நம் வாழ்வில் அது எவ்வாறு பெரும் பங்கு வகிக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள இந்தப் பாடத்திட்டம் உதவும்.
உங்கள் பிறந்த தேதி, உங்கள் வயது, உங்கள் மொபைல் எண், உங்கள் பிளாட் எண், உங்கள் ஐடிகார்டு எண், உங்கள் ஓட்டுநர் உரிம எண், உங்கள் பான் அல்லது ஆதார் கார்டு எண் என, எல்லா இடங்களிலும் எண்களைப் பார்க்கிறோம். உலக அளவில் எண்களின் பயன்பாட்டினை தவிற்க முடியாது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எண்களின் சக்தி என்பது குறிப்பிட்ட எழுத்துக்களின் (அ) எண்களின் மூலம் எவ்வாறு தனது குணாதிசயங்கள் அல்லது அடிப்படை பலன்களை தருகிறது, எப்படி தொடர்பு கொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்தப் பாடங்கள் உதவும்.
மேலும், எண்கள் பற்றிய இந்த அறிவை கொண்டு, உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். எண் கணிதத்தின் மூலமான பெயர் திருத்தம் உங்கள் விதியை மறுசீராய்வு (டீகோட்) செய்யவும், உங்கள் வாழ்க்கையை சீராக செல்லவும் உதவும் என்பதை உணர்வீர்கள். உங்கள் பிறந்த தேதியை உங்கள் சாதகமான மற்றும் அதிர்ஷ்ட எண்ணுடன் சமநிலைப்படுத்துவதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் அற்புதமான முடிவுகளைப் பெறுவீர்கள். (இதுவே நியூமராலஜியில் ஒரு முக்கியமான தீர்வு)
எண்கணிதம் ஒரு அற்புதமான இயற்கையின் அறிவியல், இது மீண்டும் மீண்டும் சோதிக்கப்பட்டது. இந்த பாடத்திட்டம் கற்கும் ஆர்வமுள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயிற்சியின் மூலம் எண்களைக் கற்கவும் & புதிய பாதையில் வெற்றிகரமாக செல்ல அனைவரையும் வரவேற்கிறோம். சாதி, மதம், மதம், வயது மற்றும் பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எவரும் எண் கணிதத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்பதை மீண்டும் கூற விரும்புகிறேன்.
இந்தப் படிப்பில் சேர அனைவரையும் வரவேற்கிறோம். நீங்கள் ஒரு மாணவராகவோ, இல்லத்தரசியாகவோ, பணிபுரியும் நபராகவோ, அல்லது தொழிலதிபராகவோ இருக்கலாம். எண்கணிதம் கற்க தேவையான ஒரே விஷயம், இதைபோன்ற சிறந்ததைக் கற்றுக் கொள்ள, ஆராய உள்ள அறிவுபசி.
முக்கிய குறிப்பு:-
இந்த பாடத்தை கற்க எண் கணிதம் அல்லது ஜோதிட பின்னணி தேவையில்லை. ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்தின் பெயரால் அடையாளம் செய்யப்படும். குறிக்கப்படும் அந்த கிரகத்தின் செயல்பாடுகளை செய்யும் என்பதை அறிவீர்கள். உயர்நிலை எண் கணித பாடத்தில் ரகசியமான பல்வேறு விதமான முறைகளில் பெயர் அமைக்க கற்றுக்கொண்டு, சிறப்பான எண்ணியல் மேதை என போற்றப்படுவீர். அதனை பிரயோகம் செய்யும் வழிகளையும் 100% துல்லியமாக கற்று தேர்வீர்.
ஸ்ரீராம் ஜோதிடாலயம் உங்களை புதிய ஜோதிட உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை. இப்போதே இணையுங்கள்.