01 January 2014

4 13 22 31ம் தேதி பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

        இந்த எண்ணின் ஆதிக்கக் கோள் இராகு ஆகும்உள்ளவர்கள். தன் சொந்த முயற்சியில் ஏதேனும் ஒன்றை உருவகப் படுத்துவதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். 
          இந்த  தேதியில் பிறந்தவர்கள், விஞ்ஞானகணித ஆராய்ச்சியில் இறங்கி அதில் புகழ் பெறுவர். . இவர்கள் தன் நலம் கருதாது ,பொது மக்கள் சேவையிலும் ஈடு படுவார்கள். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற கொள்கையை உடையவர்கள். இவர்கள் போக்கைப் பற்றி பிறர் என்ன கூறினாலும் அதை காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். தன் திட்டப் படியே நடப்பார்கள். இவர்களுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. கிடைத்தது போது மென்ற மனம்  இவர்களில் பெரும் பாலோர் நடுத்தர உயரமுடையவர்களாகவே இருப்பார்கள். இரட்டை நாடி உடையவர்கள் ஆகவும், கண்கள் சிறியதாகவும் காணப் படுவார்கள். பெரிய தலையும், அடர்த்தியான தலைமுடியும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிகவும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப் படக் கூடியவர்கள். மிகவும் சிரமத்துடனேயே இவர்கள் பொருள் ஈட்ட வேண்டியது இருக்கும். ஆனால் கிடைத்த பணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் செலவுசெய்வார்கள். நல்ல பேச்சாளர்கள். எழுத்தாலும், பேச்சாலும் சமூகத்தை சீர் திருத்த பார்ப்பார்கள். எப்போதும் மற்றவர்கள் பேசும் வார்த்தைக்கு எதிர் வார்த்தையே பேசுவார்கள். எவரையும் நம்ப மாட்டார்கள். நன்கு தீர விசாரித்த பின்பே நம்பும் தன்மை கொண்டவர்கள். அதிக நண்பர்கள் இவர்களுக்கு இருக்க மாட்டார்கள். அதிக அளவு புத்தி கூர்மை உள்ளவர்கள். எனவே வாழ்க்கையை தீவிரமாக ஆராயும் தன்மை கொண்டவர்கள். எல்லா வற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள.ஒரு செயலில் ஈடு பட்டால் அதை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். அதிக அளவில்பணம் சம்பாதிப்பார்கள். ஆனால்சேமிக்கும் பழக்கம் இவர்களிடம் இல்லை கையில் பணம் இல்லா விட்டாலும் மிக்க மகிழ்ச்சி உடனேயேஇருப்பார்கள்.பொறாமை இவர்களிடம் கிடையாது. சிறு வயதில் ஓடி விளையாடுவதிலும், சுகமானவாழ்க்கையிலும்,முன்னேற வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் வயது ஆக ஆக வேதாந்தஎண்ணங்கள் மனதில் தோன்றி அதில் ஈடுபடுவார்கள். அரசியல், சட்டம், மருத்துவத்துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.தரகுத் தொழிலும் லாபமுடையதே. காதல் என்பதை சிந்திப்பதற்கே நேரம் இல்லாதவர்கள். ஆனாலும் இளம் வயதிலேயே இவர்களுக்கு திருமணம் நடைபெற்று விடும். பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாகவே இருக்கும். இவர்களில் பெரும் பாலோருக்கு பித்தத் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அதனால் பித்ததொடர்பான பொருட்களை தவிர்ப்பது நல்லது. பலமின்மை, சோகை, குடல், தலை, இடுப்பு போன்றவற்றில் நோய்கள் ஏற்படலாம் துணிச்சலும்,பலமும் மிக்கவர்கள். அதிக அளவு கண்டிப்புதன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.மிக்க வல்லமைஉடைய இவர்கள் நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். மனவலிமையும்,மனோஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். மித மிஞ்சிய புத்தி கூர்மை உடையவர்கள். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர். வேதாந்த எண்ணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.4ம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மை தரும் நிறம்மஞ்சள். கோமேதகம் அதிக நன்மை தரும் கல்லாகும்.தெற்கு திசை நன்மை தரும். மிக்க வல்லமை உடைய இவர்கள் நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்து கொண்டால் உயர்ந்த நிலையை அடையலாம். இந்த தேதியில் பிறந்தவர்கள் துணிச்சலும், பலமும் மிக்கவர்கள். அதிக அளவு கண்டிப்பு தன்மை கொண்டவர்கள். உணவு உண்பதிலும், இல்லறத்திலும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம்.இனிமையாகவும், கவர்ச்சியாகவும் பேச பழகுதல் நன்மை பயக்கும். நிர்வாகத்திறமையும், சாமர்த்தியமும் உடையவர்கள். நேர்மையுடனும், நாணயமாகவும் நடந்துகொள்வது நலம்.இந்த தேதி பிறந்தவர்கள் தைரியசாலிகளாகவும், மனவலிமையும், மனோஆற்றல் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள்.  பெயர் எண் சரியாக அமையாதவர்கள், சிறு வயதில் இருந்தே துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும்.

No comments:

Post a Comment