25 June 2024

6 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

கொடுமுடிக்கு சென்று புத்தகம் வாங்க முடியாது போனது குறித்து ஏமாற்றத்தில் இருந்தாலும், எண்ணியல் குறித்த பல்வேறு சிந்தனைகளிலேயே கண்ணனின் அடுத்தடுத்த நாட்கள் சென்றுகொண்டு இருந்தது.

அப்போது உலகக்கோப்பை கிரிகெட் 1996 ஆரம்பம் ஆகி சென்று கொண்டு இருந்தது. இதில் எண்கணித கலையினை ஆராய்ச்சி செய்ய கிடைத்த அரிய வாய்ப்பாக கண்ணன் பயன்படுத்தினான்.
பிரமிடு முறை பற்றி கிடைத்த குறிப்புகளின் படி அணியின் வெற்றி தோல்விகளை பற்றி ஆராய தொடங்கினான்‌. அந்த புத்தக ஆசிரியர் கூறியபடி... ஒரு நபரின் கேள்வியினை ஆங்கிலத்தில் எழுதி வைக்கவும். அதனை பிரமிடு நெடுங்கணக்கில் விடை காணவும். இதன் விடையாக கிடைப்பது என்னவோ அதற்க்கு தக்க பலன் உண்டாகும் என்பது விதிமுறையாகும்.
அதன்படி, இந்தியகிரிகெட் அணி பாகிஸ்தானை வெற்றி பெறுமா? Will Indian cricket team beat Pakistan? என பிரமிடு கணக்கிடப்பட்டது. இதில் கேள்வி எண் 101, பிரமிடு எண் 9 (45) என வந்தது. இதன்படி இந்தியா செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது தெரிந்தது. இதையே பாகிஸ்தான் இந்தியாவை வெல்லுமா என கணக்கிடப்பட்டது. Will Pakistan Cricket Team Beat India? இதில் கேள்வி எண் 96, பிரமிடு எண் 5 (59) என வந்தது.
மேற்கண்ட கணக்கின்படி பாகிஸ்தான் நன்றாக விளையாடும் ஆனால் கடைசியில் இந்தியா வெல்லும் என கணிக்கப்பட்டது. கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்க கண்ணனும் அவனது அப்பா மற்றும் நண்பர்கள் என அனைவரும் கூட்டமாக அருகேயிருந்த சொந்தக்காரரின் வீட்டிற்கு செல்லவேண்டும் . அல்லது ரேடியோவில் ஆங்கில வர்ணனை வரும். கடைசியில் பார்த்தால் கணக்கிட்ட படி இந்தியா வென்று விட்டது.
சூப்பர், எண்கணித கணக்கு சக்சஸ் எனும் மிதப்பில் மிதக்க ஆரம்பித்தான் கண்ணன். இந்தியா ஆறாவது உலகக்கோப்பை கிரிக்கெட் கோப்பையை வாங்குமா? என கேள்வி கேட்டு கணக்கிட்டான். Will India win sixth World Cup cricket trophy? கேள்வி எண் 141, பிரமிடு எண் 3 (66) இதில் கேள்வி எண் சுக்கிரன் பிரமிடு எண் குரு.
மேற்கண்ட படி கணக்கில் குரு சுக்கிரன் என இருவரின் அருளும் உள்ளதால் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என தனது 16ம் வயதில் முதல் உலகியல் ஜோதிட கணிப்பை கூறினான் கண்ணன்.
அப்படி எனில், 1996 ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா தான் வென்றதா? மேலேயுள்ள கணிதம் சரியானதா? இவ்வளவு எளிதாக எண்கணித ஜோதிடராக மாறி விட முடியுமா? அவ்வளவு தானா எண்கணிதம் என படிக்கும் உங்களுக்கு இருந்த கேள்விகள் அன்று கண்ணனிடம் இல்லை. இந்திய பாகிஸ்தான் போட்டியில் தனது முதல் கணிப்பு வெற்றி பெற்றதும் கண்ணன் நியூமராலஜிஸ்ட் ஆகிவிட்டதாக உணர்ந்தான்.
அவனுக்கு அப்போது தெரியாது. பிரமிடு எண்ணியலுக்கான பயிற்சியில் எத்தனை இன்னல்களை எதிர்கொள்ளும் போகிறான்‌. அதனை பயன்படுத்தி எத்தனை ரகசியங்களை அறியப்போகிறான் என...
தொடரும்...

No comments:

Post a Comment