25 June 2024

5 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

நண்பர்கள் ஐவரும் கொடுமுடி மில் நல்ல தரிசனம் செய்து முடித்தார்கள். அம்மன் கோவில் பிரகாரத்தில் உள்ள புத்தக கடைக்கு வந்தார்கள். ஜோதிடம் நியூமராலஜி புத்தகங்கள் உள்ள பக்கம் பார்வையினை விரித்து தேடினார்கள்.

விதவிதமான தலைப்புகளில் பலவிதமான புத்தகங்கள் வரிசையாக வைத்திருந்தது. கண்ணன் கடைக்காரரிடம் நியூமராலஜி புக் இருக்காங்கணா என கேட்க, அவர் ஒரு மஞ்சள் நிற புத்தகத்தை எடுத்து தந்தார். அது பண்டிட் சேதுராமன் எழுதிய "அதிர்ஷ்ட விஞ்ஞானம்" விலை தள்ளுபடி போக நூற்று சொச்சம் வரும் என கூறினார்கள்.
கண்ணன் மற்றும் கணேசன் இருவரும் தான் புத்தகம் வாங்க ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆனால், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது என்பதால் ஏமாற்றத்துடன் இவர்கள் திரும்ப நேர்ந்தது. அந்த சைக்கிள் பாஸ் ல் இருந்த நான்காம் எண் வேலை செய்து விட்டது என பேசிக்கொண்டே வீடு திரும்ப முடிவெடுத்தனர்.
ஆனாலும், நூலில் உள்ள விசயங்கள் என்ன என்பதை கண்ணன் பார்க்க தவறவில்லை. தன்னிடம் உள்ள சிறிய புத்தகத்தின் விளக்கமான பதிப்பே அது என உணர்ந்தான். அதிர்ஷ்ட விஞ்ஞானத்தில் இல்லாத பல விசயங்கள் தான் வாங்கிய நூலில் உள்ளதையும் கவனித்தான். சரி. கிளம்பலாம் அண்ணா என அர்ஜுனன் அண்ணாவிடம் கூறிய கண்ணனும் அவர்களது நண்பர்களும்... எந்த புத்தகமும் வாங்காமலேயே திரும்ப கிளம்பினர். புத்தகத்தை புரட்டிப் பார்க்க தான் பத்துநாளா புலம்பிட்டு இருந்தியா என மீதமுள்ள நால்வரும் கண்ணனை கலாய்த்து கொண்டிருந்தாலும், அந்த பெரிய புத்தகத்தில் உள்ள பல்வேறு விசயங்கள் சுருக்கமாக நம்மிடம் உள்ளது என புரிந்த திருப்தி கண்ணனிடம் இருந்தது.
1996 ல் இந்தியா இலங்கை என பல நாடுகள் இணைந்து உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தியது. இதில் எண்கணிதப் படி ஏதேனும் கணக்கிட முடியுமா எனும் படி ஆய்வு செய்ய வேண்டும் என முடிவெடுத்து க்ணணன் அதற்கான குறிப்புகளை அவனிடம் இருந்த புத்தகத்தில் கண்டறிந்தான்.
அதில் இருந்த அற்புத விசயம் பிரமிடு நெடுங்கணக்கு நியூமராலஜி. பிரமிடு நியூமராலஜி என்றால் என்ன? இதிலிருந்து என்ன கணிக்க முடியும் என்பது ஒரு சவால் தான்.
தொடரும்...

No comments:

Post a Comment