24 June 2024

3 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

கண்ணனுக்கு முன்பாகவே கணேசனும் அர்ஜுனன் ம் காவிரிக்கரையில் அமர்ந்திருந்தார்கள். குமார் செந்தில் இருவரும் இன்னும் வரவில்லை. "அண்ணா தேர்ல வாங்கிய புத்தகத்தில் பல விசயங்கள் சூப்பரா இருக்கு." என அர்ஜுனனிடம் ஆர்வத்தில் உரையாட துவங்கினான் கண்ணன்.

"நாம் பிறந்த தேதி என்னவோ அதை ஒட்டித்தான் ஒருவரின் குணாதிசயம் அமைகிறதாம். நம்ம எல்லாருக்கும் சூப்பராக பொருந்துகிறது அண்ணா" கண்ணன்.
"பதினைந்து வயசு பையன் போல பேசு கண்ணா... அறுபது வயசு ஜோசியர் மாதிரி யோசிக்காதே. சரியா?" இது அர்ஜுனன்.
கணேசன் குறுக்கிட்டு "அண்ணா, கண்ணன் என்ன சொல்றான் என கேட்கலாம். நாமும் யோகா தியானம் வழிபாடு என ஏதேதோ செய்ய பிரயத்தனம் செய்கிறோம். அதற்கு எத்தனை தடைகள் வருகிறது. இவன் சொல்லும் விசயத்தில் ஏதாவது புதுசா கிடைக்கலாம் ல"
"ஆமாம் அண்ணா, என்னோட பேரு 46 ல் இருக்குங்கணா. அது எனக்கு செட் ஆகல போல. பாருங்க முதல்ல இருந்தே முதலிடம் போக முடியாம போக இதான் காரணமாம். எங்க வீட்டில் எல்லாருக்கும் பார்த்தேன். எதுவும் சரியில்லை."
அப்போது தான் வந்து சேர்ந்த செந்தில் "ஆமாம் கணேசன் அண்ணா. கண்ணன்னா கணக்கிட்டு பார்த்த போது நானும் அங்கே தான் இருந்தேன்."
உரையாடல் மிகவும் சுவாரஸ்யமாக போனது. கடைசியில் நேரமில்லை என்பதால் நாளை பேசிக் கொள்ளலாம் என கூறி கலைந்தனர். அடுத்த மூன்று நாளுக்குள் நான்கு பேரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் கண்ணன் கணேசன் ஆகியோர் ஆராய்ந்து பார்த்தனர்.
சிலநாள் கழித்து பெரிய சந்தேகம் வந்து விட்டது. யாருக்கு எந்த எண் பொருந்தும். எது மோசமானது... எது நல்லது. இதை அறிய என்ன செய்வது. இந்த குழப்பம் அடுத்த கட்ட பயிற்சிக்கு அடித்தளமிட்டது.
கண்ணன் கணேசன் என இரண்டு எண்ணியல் ஜோதிடர்கள் தங்களுக்கே தெரியாமல் தங்களை ஆராய ஆயத்தம் ஆனார்கள்.
மேலும்... இதுசம்பந்தமாக அறிய புதிய பெரிய புத்தகங்கள் வாங்க வேண்டும் என முடிவெடுத்து விட்ட அவர்களின் ஞாபகத்தில் வந்த இடம் தான் கொடுமுடி.
அங்கு பிரதி அமாவாசை அன்று கோவிலுக்கு உள்ளே அம்மன் சன்னதியின் முன்பாக புத்தக கடை சிறப்பாக வைக்கப்படும்.
இவர்களால் "கொடுமுடி போறோம். புக் வாங்குறோம்". என முடிவு செய்யப்பட்டது.
தொடரும்....

No comments:

Post a Comment