27 May 2015

பித்ரு பூஜை ஒரு அறிவியல் பார்வை. (pithru pooja, pitru puja)

மஹாளய பட்சத்தினுள் ஒளிந்திருக்கும்இந்து தர்ம (ஜோதிட) விஞ்ஞான ரகசியம். 

     நமது தாத்தாக்கள்,  பாட்டிகள்,  முப்பாட்டன்கள்,  முப்பாட்டிகள்,  பூட்டன்கள் (தாத்தாவின் தாத்தா)பூட்டிகள் (பாட்டியின் பாட்டி) என முன்னோர்களுக்கு திதி கொடுக்க புரட்டாசி மாத அமாவாசையை ஏன் நமது ஆன்மீகப் பெரியவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்?
ஆவணி மாத அமாவாசையைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே?

    ஏனெனில்ஆவணி மாதத்தில் ஆத்மாக்காரனாகிய சூரியன் ஆட்சியாக இயங்குகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழ்நாட்டுப் பிரிவுகளில் ஒன்று கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவை! இந்த அமைப்பிலிருந்து ஒரு மாத இதழ் வெளிவருகிறது. அந்த மாத இதழின் பெயரே பூஜாரி முரசு. இதன் செப்டம்பர் 2011 ஆம் வெளியீட்டில் 4,5ஆம் பக்கங்களில்விரிவான விளக்கம் வந்திருக்கிறது.(இந்து இயக்கங்கள் இந்து தர்மம் ஒரு விஞ்ஞான பூர்வமானது என்பதை ஆராய்வதோடுஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுவருகிறது)

    புரட்டாசி மாதம் பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்வதற்குப் பெயர் போனது.மஹாளய அமாவாசைக்கு முன் வரும் தேய்பிறை காலத்தைப் பித்ரு பட்சம் என்று அழைக்கிறார்கள். அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லும் புராணக்கதைகள்தர்ம சாஸ்திர நீதி நூல்கள் பல இருக்கின்றன. வானவியல் ரீதியில் அதன் விஞ்ஞான ரகசியத்தை இங்கு பார்ப்போம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னிராசியில் சஞ்சாரிக்கிறார். கன்னி ராசிக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. நாம் வாழும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது. நம்மையும் சேர்த்துசூரிய மண்டலம்நமது பக்கத்தில் இருக்கும் சில நட்சத்திரக் கூட்டங்களுடன் ஒரு மையத்தைச் சுற்றி வருகிறது.அந்த மையத்தைப் போல பல சிறு (அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள், ஒரு ஒளி ஆண்டு என்பது ஒன்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தைக் கொண்டது.புரியாதவர்கள் இயற்பியல் பட்டதாரிகளிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்) மையங்கள் ஒருங்கிணைந்து கன்னிராசியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இந்த சுழற்சி வரையிலும் நமது வானவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

     பொதுவாகவே மையம் என்பது ஒரு ஆதாரமாக செயல்படுகிறது. பூமிக்கு மையம் சூரியன்! அதுவே பூமிக்கு ஆதாரம்!! எப்படியெனில் பூமி முதலான கிரகங்கள் சூரியனிடமிருந்தே உருவாகின. அந்த சூரியன் தரும் சக்தியால்தான் பூமியில் உயிர்கள் நிலைபெற்று இருக்கின்றன. இந்தக் கருத்து படிப்படியாக ஒவ்வொரு மையத்துக்கும் பொருந்தும். அப்படிப் பார்க்கும்போது கன்னிராசி என்னும் மண்டலமே நமக்கு ஆதாரமாகிறது. எப்படி பூமியானது சூரியனிலிருந்து உண்டாகிசூரியனால் வாழ்விக்கப்படுகிறதோஅப்படியே நாமிருக்கும் மண்டலம் கன்னிராசியிலிருந்து உண்டாகிஅதனால் வாழ்விக்கப்படுகிறது என்று சொல்வது பொருந்தும்.

பித்ருக்களின் வழி

   ஒரு மையத்திலிருந்து உண்டானதுபிரளயகாலத்தின் போது படிப்படியாக அந்த மையத்துக்குள் ஒடுங்கும். நாமிருக்கும் பூமி சூரியனில் ஒடுங்கும்சூரிய மண்டலம் அதற்கடுத்த மையத்தில் ஒடுங்கும்அந்த மையம் கன்னிராசியில் ஒடுங்கும்மனித வாழ்க்கையை எடுத்துக் கொண்டால்உடலை விட்டு பிரிந்த உயிர்இந்த கன்னிராசி இருக்கும் மண்டலத்தில் ஒடுங்குகிறது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனவேதான் , கன்னிராசி இருக்கும் மண்டலத்தைப் பித்ருயானம் (பித்ருக்களின் வழி) என்பார்கள்.

     இந்த கன்னிராசி தென் திசையில் இருக்கிறது. இங்கு ஒரு கேள்வி எழலாம்?  பூமியில் தான் தெற்கு வடக்கு என்று திசைகள் இருக்கின்றன. பூமிக்கு வெளியே சென்றுவிட்டால்ஏது திசைமுடிவே இல்லாத பிரம்ம்ம்ம்மாமாமாமாண்டமான பிரபஞ்சத்திற்கு ஏது திசை?

   இதைக் கண்டுபிடிக்க ஒரு வழி இருக்கிறது. துருவ நட்சத்திரம் தெரியும் வட துருவப் பகுதி வடக்கு ஆகும். அதற்கு நேர் எதிராக இருக்கும் துருவப் பகுதி தெற்கு ஆகும். இந்த இரண்டு துருவங்களையும் இணைக்கும் ஒரு கற்பனைக்கோடு பூமியின் அச்சு எனப்படும். பூமிக்கு வெளியில் இருந்து பார்த்தாலும் இந்த அச்சை அடையாளம் கண்டுஎது வடக்கு, எது தெற்கு என்று சொல்ல முடியும். இங்குதான் ஒரு அதிசய ஒற்றுமை இருக்கிறது.

      கன்னிராசியானதுபூமியின் தென் துருவத்துக்குக் கீழ் தென்படுகிறது. அதாவது அந்த ராசி தெற்குத் திசையில் இருக்கிறது. அந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்ய வேண்டும் என்னும் வழக்கம் உண்டானதற்கு இதுவே காரணம் என்று தெரிகிறது. நாம் உண்டான மையம் தெற்கு திசையில்கன்னிராசியில் இருக்கவேஇறந்தப் பிறகு அந்தத் திசையில் உள்ள மண்டலத்தில் நமது பித்ருக்கள் வாழ்கிறார்கள். எனவேஅந்தத் திசையை நோக்கிப் பித்ரு காரியம் செய்கிறோம். அந்தத் திசையில் சூரியன் சஞ்சாரிக்கும்போது விசேஷமாகவே பித்ரு காரியம் செய்கிறோம். இதை அடுத்து ஒரு கேள்வி எழலாம். இறந்தவர்களது திதியன்று சிரார்த்தம் செய்கிறோம். அது அந்த ஒரு திதியில் மட்டுமே செய்யப்படுகிறது. அப்படி இருக்க இந்த பித்ரு பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட தேய்பிறை காலம் முழுவதும் செய்யப்படுவது ஏன்? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்நாம் பித்ருக்களின் காலக்கணக்கைப் பார்க்க வேண்டும்.

பித்ருக்களின் காலக்கணக்கு

   சூரியனது சுழற்சியை வைத்து சூரிய வருடம் என்று இருப்பது போல,சந்திரனது சுழற்சியை வைத்து சந்திரவருடம் (சந்திரமானம்) என்பது உண்டு. அதேபோல்,பித்ருக்களின் பித்ருவருடம் என்று இருக்கிறது. இது சந்திரனை வைத்து உருவாகும் திதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. 
அதன் விளக்கம்:
1 பட்சம்                  = 15 நாட்கள்(வளர்பிறை அல்லது தேய்பிறை)
2 பட்சம்                  = ஒரு பித்ரு நாள்(நமக்கு ஒரு சந்திர மாதம்)
30 பித்ரு நாள்(60 பட்சம்)=ஒரு பித்ரு மாதம்
12 பித்ருமாதம்(720 பட்சம்)=ஒரு பித்ரு வருடம்
இதை திதியாக மாற்றினால்,
ஒரு பித்ரு வருடம்    =(720 பட்சம்,15 திதி)=10,800 திதி
ஒரு சந்திர வருடத்தில் 360 திதிகள்
10,800 திதி/360 திதி    =30 வருடம்

அதாவது நம்முடைய சந்திர வருடக்கணக்கில் 30 வருடம் என்பது பித்ருக்களின் ஒரு வருடம் என்பதாகும். ஒருவன் 30 வருடங்களுக்கு தனது பித்ருக்களாகிய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்தால்பித்ருக்களின் வாழ்நாளில் ஒரு வருடத்துக்கு மட்டுமே அந்த சிரார்த்தம் கிடைத்தது என்று ஆகும். அவ்வளவு காலமாக ஒருவர் சிரார்த்தம் செய்வது மிக மிக மிக அபூர்வம். அதனால்பித்ரு உலகமான கன்னிராசி இருக்கும் மண்டலத்துடன் சூரியன் இணையும் புரட்டாசி மாதத்தில் ஒரு முழு பட்சத்தையும் (15 நாட்கள்) பித்ருக்களுக்கு வழிபாடு செய்வதற்காக ஒதுக்கியுள்ளனர் நமது முன்னோர்கள்.

  தேய்பிறையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்றால்அதுதான் பித்ருக்களின் பகல்காலம் ஆகும். அவர்கள் விழித்திருக்கும் அந்தக் காலகட்டத்தில் புரட்டாசி மாத பித்ரு பட்சத்தில் அவர்கள் உலகை நோக்கி நாம் அவர்களை வழிபடுகிறோம். இந்த பட்சத்தில் நாம் செய்யும் வழிபாடுசிரார்த்தம் செய்யப்படாத அனைத்து பித்ருக்களையும் சென்றடைகிறது. இவ்வாறு அனைத்து ஜீவன்களையும் அரவணைக்கும் விதமாக நம் இந்து முன்னோர்களால் நமக்குத் தரப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் விஞ்ஞானத்தையும்மெய்ஞானத்தையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் மக்கள் சமுதாயத்துக்கு உயர்ந்த பலன்களையும் தரும் விதம்நமது ஹிந்து தர்மத்துக்கு மட்டுமே உண்டு எனலாம். 

நன்றி!!! வலையுலக நண்பர்கள்.

No comments:

Post a Comment