25 March 2016

யார் கடனாளி.... பரிகாரம் உண்டா?

யார் கடனாளி.... பரிகாரம் உண்டா?
கடன் பட்டான் நெஞ்சம் போல கலங்கினான்.... என்று ராமாயணத்தில் ஆன்றோர்கள் பதிகிறார். இதனால் கடன் என்பது அன்றும் இன்றும் நம்மை வருத்தம் அடைய வைக்கிறது என்பதனை புரிந்து கொள்ள முடிகிறது.
கடன் என்பது வெறும் பணம் சம்பந்தப்பட்ட வகையில் மட்டுமேஇருக்காது. கர்ணன் துரியோதனனிடம் பட்டது ஒருவகை கடனாகும். அதனால் அவன் அதர்மத்தின் பாதையில் செல்லும் அளவுக்கு கட்டுப்படுத்தியது. இதுபோலவே... துரோணர் முதலான ஆச்சாரியார்களும் கடனாளிகளே... அதனால் அவர்கள் அடைந்த மன வேதனை மிக பெரிது.
கடன் கிடைக்குமா?
இலக்கினத்திற்கு இலக்கினாதிபருக்கு, புதன் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் கடன் வாங்கி செலவு செய்ய தூண்டப்படுகிறார்கள்.
இத்துடன் ஆறுக்கு உடையவன் சம்பந்தம் உண்டானால் கடனாளியாகிறார்கள். இதனுடன் சேர்ந்து உள்ள கிரகங்களின் தன்மைக்கு ஏற்ப, எதற்க்காக கடன்... எதில் கடன் என்ற விபரம் அறியலாம்.

பரிகாரம் செய்தல் கடனில் எப்படி செயல்படும்...
கடன் என்பது நமது பலவீனமே ஆகும். பரிகாரம் செய்யும்போது கடனுக்கு உண்டான ஸ்தலம் அல்லது ருண நிவர்த்தி பூஜைகளினால் எந்த செலவானாலும் கடன் வாங்கலாம் என்ற, மனநிலையினை அதற்க்கான சூழ்நிலையினை நாம் உருவாக்க முடியாது போகும். 
இத்துடன்... நமக்கு சாதகமாக உள்ள கிரகங்கள் சுபபலம் பெறுவதே இதில் முக்கிய பங்காற்றும். சுபபலம் காரணமாக நமது சம்பாதிக்கும் திறன் அதிகரித்து நிச்சயமாக வருமானம் உயரும். கிரகங்களின் தீய வீரியம் குறைந்து நமது வீண் செலவுகளும் குறையும். எதுவும்... புதிதாக கிடைப்பதும் இல்லை. புதிதாக இழக்கப்போவதும் இல்லை. எதுவாக இருந்தாலும் சுய ஜாதக பலனே பிரதானம். அதினை உபயோகிக்கும் அனுமதி சர்வ சுதந்திரமானது. இறைவனின் அந்த அனுமதியினை முறைபடுத்தி வாழ்வில் உயரலாம்.

மேலும் ஆலோசனைகளுக்கு 7667745633

குரு நீசம் என்ன செய்யும். பரிகாரம் தேவையா?

குரு நீசம் என்ன செய்யும்....


குரு என்பது நமது ஜீவனை குறிக்கும் கிரகம். குருவின் அதிர்வலைகளை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதை நமது ஜாதகத்தில் குரு உள்ள இடத்தின் பதிவு நமக்கு காட்டி உதவுகிறாது. இந்த விசயத்தினை நாம் இப்படியே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உதாரணம் குரு உங்களுக்கு ஒரு அதிர்வையும் நண்பருக்கு ஒரு அதிர்வையும் அனுப்புவது இல்லை.
நமக்கு தேவையான விசயங்களை ஈர்க்க முடியாத சூழ்நிலையில் நமது பிறப்பில் குறு தன்னுடைய பதிவினை தருவதால் தான் குரு தோஷம் பற்றி நாம் யோசிக்கிறோம்.
குரு நீசம்... மறைவு பெற்ற நபர்களின் வாழ்வில் அடுத்தவருக்கு ஆலோசனை கூறும் வாய்ப்பே ஏற்படாத போது குரு தோஷம் எந்த தீய விளைவினையும் தராதுகிட்டத்தட்ட செயல்படாத நிலையில் இருக்கும். 

எப்போது நாம் அடுத்தவருக்கு வழிகாட்டுதல் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறோமோ (ஆசிரியர்... ஜோதிடர்... ராணுவ போலீஸ் உயரதிகாரி... தலைவர்.... மேனேஜிங் டைரக்டர்.... இப்படி பல) அப்போது தான் நமக்கு பிரச்சினை உண்டாகிறது. குரு மறைவு தோஷம்... நல்லது கெட்டது முடிவெடுக்க தடுமாற்றமும்... குரு நீசம் நமது உழைப்பு வீணாவதையும் உண்டாக்கும்.

இதை எப்படி எதிர் கொள்ளுவது... பரிகாரம் என்ன..
குருவின் ஆகர்ஷண சக்தியினை நல்ல அதிர்வலைகளை நாம் பெற நம்மை நாம் முறைபடுத்த வேண்டும். அதற்கான பூஜைகள்... ஸ்தல வழிபாடுகள்... அதிர்ஷ்ட ரத்தினங்கள்.... சித்தர்களின் தரிசனம் இப்படி பல விசயங்களை எப்போதுமே தொடர்ந்து செய்யவேண்டும்.

ஏன் ஒருமுறை பரிகாரம் செய்தால் ஆகாதா...?

அருமையான கேள்வி. திருமணம், வேலை கிடைக்க என குறிப்பிட்ட காரியம் மட்டும் நடக்க செய்யும் பரிகாரங்கள், சில வழிபாடுகளிலேயே சித்தி உண்டாகும். விட்டுவிடலாம். பரவாயில்லை.


ஆனால்... தினசரியும் குருவின் சக்தியினை பயன் படுத்தும் தொழில் செய்பவர்களுக்கு குருவின் ஆகர்சன சக்தியில் பற்றாக்குறை ஏற்படும். ஏனேனில் இயற்கையிலேயே குருவின் அதிர்வுகளை ஏற்கும் திறன் சிலருக்கு குறைவு என, மேலேயுள்ள விசயங்களால் அறிந்தோம் அல்லவா...
இவர்கள் தொடர்ந்து பரிகாரங்கள் செய்வது அவசியம். .

மேலும், விபரங்கள் பரிகாரங்கள் குறித்து ஆலோசிக்க....7667745633

தொழில் தடை என்றால் என்ன? பரிகாரம் உண்டா?

தொழில் தடை என்றால் என்ன? பரிகாரம் உண்டா?

சாதாரணமாக பத்துக்கு உடையவர் 6..8..12 ல் மறைவதையே தொழில் தடை என கூறுகிறோம். ஆனால் இப்படியான அமைப்புகள் உள்ளவர்கள் தொழிலே செய்யாது போகும் நிலையை அடைகிறார்களா எனில் இல்லை.

பத்துக்கு உரியவன்.... ஆறில் இருப்பவர்கள்... குடும்ப பாரம்பரிய தொழில்கள் அமையும்போது சிறப்பாக செயல்படுவார்கள். அதிலும் அடிமை உத்யோகம் உண்டாகும். சம்பள தொழில்கள் சிறப்பாக இருக்கும்.

அடுத்து பத்துக்கு உரியவன் எட்டில் இருக்க பெரும்பாலும் நிதி... வட்டி.... ஆலோசனை... யூக வியாபாரம்... பங்கு... பஞ்சாயத்து... அடிதடி... இப்படியான தொழில் அமையும் போது சிறப்பாக முன்னேறுகிறார்கள்.

பத்துக்கு உரியவன் பனிரன்டில் இருக்கும் ஜாதகர் மட்டும் தைரியமாக முடிவு எடுக்க வேண்டும். தயக்கம் உள்ளவர்கள் இவர்கள் யோசிக்கும் முன்பே குறிப்பிட்ட வாய்ப்பு சென்றுவிடும். திருந்த வேண்டும். சகோதர வகையில் கூட்டு தொழில் அல்லது அவரின் ஆதரவுடன் தொழில் சிறக்கும்.

எப்படி பார்த்தாலும்....
யாரும் எந்த தொழிலும் செய்யலாம்...
யார் வெற்றிப் பெறுகிறார் என்பது மேலேயுள்ள விதியை பொருத்து...
தவறான மோசமான திசையிலும் கூட நமக்கு அனுகூலமான தொழிலில் ஈடுபடும் போது அவ்வளவாக நஷ்டம் உண்டாவது இல்லை. தேவையில்லாத புது செயல்களை செய்து அதன் மூலமாக நஷ்டம் கஷ்டம் அடைகிறோம். அனைவருக்கும் இந்த அனுபவம் உண்டாகி இருக்கும்.

பரிகாரம் என்ன செய்யும்....
குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல அதிர்வலைகளை நாம் பெறும்போது.... அதனால் நமக்கு உண்டாகும் தேவையில்லாத குழப்பம் வராது போகும். அப்போது.... தேவையில்லாத நஷ்டங்கள் தவிர்க்கப்படும்.
பத்தாமிடம் முழுதும் கெட்டுப்போகும் வாய்ப்பு இல்லாத நிலையில்... நமக்கான துறைகளை தேர்வு செய்ய நவகிரகங்களின் அருளாசி நமக்கு அவசியம் தேவையாகிறது.

தேவையான பரிகாரங்கள் காண அழையுங்கள்... 7667745633

கிரக வரிசை அடிப்படை

ஜாதகத்தில் இராசிகள் (வீடுகள்) பனிரெண்டு உள்ளது. 

இதில் ஒன்பது கிரகங்களில் ராகு கேதுக்களுக்கு என தனியாக வீடுகள் கொடுக்கவில்லை. மீதியுள்ள 7கிரகங்களில் கண்ணுக்கு தெரியும் பெரிய கிரகங்கள் இரண்டுக்கு ஒவ்வொரு வீடும், மிஞ்சிய அனைத்துக்கும் இரண்டு இரண்டு வீடுகளும் தந்துள்ளார்கள்.

வரிசை சூட்சுமம்....

சூரியன் கிரகம் அல்ல நட்சத்திரம். அதனால் சூரியனை பிரதானமாக கொள்ள வேண்டும். சிம்மத்தை சூரியன் ஆட்சி வீடாக கொள்ள....

சந்திரன் தனி கிரகம் அல்ல என்பதால் அதனை சூரியனுக்கு அருகிலேயே சந்திரனுக்கு வீடு கடகம் என தந்துள்ளார்கள்.... இன்னும் சிறிது நேரம் கடகத்தினை மறப்போம். அப்போதே அடுத்து வருவது புரியும்.

புதன் சூரியனுக்கு அருகே முதலில் சுற்றி வரும் கிரகம். அதனால் சூரியனுக்கு இருபுறமும் உள்ள வீடுகளை புதனுக்கு மிதுனம் கன்னி ராசிகளை தந்துள்ளார்கள்.

சுக்கிரன் புதனுக்கு அடுத்த கிரகம். ரிசபம் துலாம் இராசிகளை சுக்கிரனுக்கும்...

செவ்வாய் சுக்கிரனையும் தான்டி சூரியனை சுற்றுவதால் அடுத்த இரண்டு ராசியான மேசம் விருச்சிகம் வீடுகளையும்...

அதற்கு அடுத்து குருவுக்கு மீனம் தனுசு ஆகியவற்றையும்

பின்னர் கடைசியாக சனிக்கு கும்பம் மகரம் இராசிகளையும் தந்துள்ளார்கள்.
கிரக வரிசை உதாரணம்

இதில் பூமி சுக்ரன் செவ்வாய்க்கு இடையே உள்ளது.... பூமியை சுற்றியே சந்திரன் இருக்கும். அதனால் தான் குழப்பம் தவிர்க்க சந்திரனின் இருப்பை மறந்து விட கூறினேன்.

சந்திரனின் சுற்றுப்பாதை இதில் ......
தனக்கு வெளியே
அருகில் இருந்தாலும்
தூரமாக இருந்தாலும் இரண்டுமே ஒரே திசையில் இருக்குமல்லவா....
அந்த தத்துவம் மட்டுமே பொருந்தி வருகிறது.
அதனால் தான் சந்ரனை உள் வட்டத்தில் வைத்து விட்டார்கள் போல...

09 March 2016

கிரகண தோஷ மந்திரம்.

ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம் துர்க்க ஹந்திரிம் சுகப்பிரதாம் 
துஸ்டதுர்ராம் துராசார ஸமனிம் தோஸ வர்ஜிதாம் ஜெயப்பிரதாம் ஓம். 


நாளை கிரகணம் முடிந்ததும் இந்த மந்திரம் கூறி நீர் ஆடுங்கள் கிரக தோஸம் போகும் குறிப்பாக கர்பிணி பெண்கள்.

சகல தோஷ பரிகார விசயங்கள்

ன்புக்கும் மரியதைக்கும்

உரிய நண்பர்களே! வணக்கம்.

யாம்,
கொடுமுடிஎன்னும் புனித ஷேத்திரத்தில் வசித்து வருகிறோம். கொடுமுடி புனித தலமானது சர்வ பரிகாரங்களுக்கும் ஏற்ற புண்ணிய பூமியாகும். இதனை ஜோதிட துறையில் உள்ள அனைவரும் அறிவார்கள்.
தங்களுக்கோ, தங்களின் உறவினர்களுக்கோ இந்த புனித ஸ்தலத்தில் பரிகாரம் செய்ய வேண்டியதாக இருந்தால், உங்களுக்கு பரிகாரத்தினை செய்ய சிறந்த முறையில் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். கட்டணம் ரூபாய்3,000 மட்டுமே.

நாக தோஷ நிவர்த்தி,
களத்திர தோஷ நிவர்த்தி,
காலசர்ப்ப தோஷ நிவர்த்தி,
பித்ரு தோஷங்கள் நிவர்த்தி,
திருமண தடை தோஷ நிவர்த்தி,
கல்விதடை தோஷ நிவர்த்தி,
தொழில் தடை தோஷ நிவர்த்தி,
இன்னும் ஜாதகத்தின் அநேக தோஷங்களுக்கும் பூஜை செய்விக்கப்படுகிறது.

மறைமுக கட்டணம் ஏதும் இல்லாமல், கோவிலின் அர்ச்சகர்களே... தங்களுக்கான பரிகார ஹோமத்தினை செய்து தரும்படி பூசையினை செய்துதருகிறோம். கோவிலுக்கு உள்ளே.. அல்லது வெளியே... விருப்பம் போல...

தாங்கள் ஜோதிடராக இருந்தால், தொடர்பு கொள்ளுங்கள்... உங்களின் வாடிக்கையாளரை நீங்களே இருந்து எப்படி செய்விப்பீரோ, அதுபோல செய்து உங்கள் வாடிக்கையாளருக்கு அனைத்து பரிகாரங்களையும், செய்து தருகிறோம். கட்டணத்தினை நீங்களே எமக்கு செலுத்தினால் போதும். வாடிக்கையாளரிடம் எந்தகட்டணமும் பெறமாட்டாது. காணிக்கையாககூட..

வெளி மாநில, வெளிநாட்டு அன்பர்களுக்கு உங்களுக்கு உகந்த நாளில் பூஜை ஏற்பாடு செய்து, உங்களுக்காக பூஜை செய்யப்படும். பூஜா பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.

கட்டணத்தில் அடங்கும் விசயங்கள்..
அய்யர் சம்பாவனை,
பூஜை பொருள்கள்,
நவதானியம்,
நெய் தீபம்,
மூன்று அர்சனை பைகள்,
அர்ச்சனை சீட்டு,
தானம் கொடுக்க.... என அனைத்தும் கட்டணத்திலேயே அடங்கும். 

முன்பதிவு அவசியமானது.

தொடர்புக்கு....
J.V.V.பொன்தாமரைக்கண்ணன்,
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி. 638 151
ஈரோடு.
அழைக்கவும் அல்லது வாட்ஸ்ஆப் வரவும், 7667745633

செவ்வாயால் திருமண தடை

ஜாதகத்தில் செவ்வாய்க்கு 
2,4,7,8,12 ல்
சனி புதன் ராகு கேது 
ஆகிய கிரகம் இருக்கும் நபர்களின் திருமணம் காரணமே இல்லாமல் தாமதம் அடைகிறது.
மேற்கண்ட சனி புதன் ராகு கேது கிரகங்களின் தொடர்பு ஒன்றுக்கு மூன்று ஆண்டுகள் என கூட்டி பலன் உரைக்க துல்லியமாக வரும்.
ஆண் திருமண வயது. 18 to 27
பெண் திருமண வயது 16 to 23

உதாரணம்... ஆண்... செவ்வாய்க்கு நான்கில் புதன்.. 12ல் சனி... 

இவரின் திருமணம் 33 வரை தள்ளிப்போகும் வாய்ப்பு என கூறலாம். மேலும் மற்ற கிரக நிலைகளை அனுசரிக்க வேண்டும்.

வேறு ஒருவரின் தீபத்தில் விளக்கு ஏற்றுவது சரியா... தவறா?

கோவிலில் தீபம் ஏற்றுதல்...

முக்கிய சூட்சுமம்
கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதே நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொடுக்கும் சிறந்த வழியாகும்.

எந்த வழிபாடு ஆனாலும் தீபம் ஏற்றுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். நல்லெண்ணை... நெய்... அல்லது ஐந்து எண்ணைகள் கலந்து தீபம் ஏற்ற நன்மைகள் பெருகும்.

கோவிலில் தீபம் ஏற்றும் போது கோவிலில் ஏற்கனவே ஏற்றப்பட்ட தீபம் இருப்பின் அதனை உபயோகிக்கும் போது மிக்க நல்ல பலன் உண்டாகும். சந்நிதியில் ஏற்றப்பட்ட தீபம் இறைவனின் தீபமாகவே கருதப்படும்.

தனியாக தீப்பெட்டி மூலம் தீபம் ஏற்றாதீர். பிரகாரத்தில் தீபம் எரியவில்லையெனில் பூஜாரியிடம் இருந்து தீபம் ஏற்றவும். வேறு வழியே இல்லை எனில்மட்டும் தீப்பெட்டி பயன்படுத்த வேண்டும். எப்போதும் இந்த விசயத்தில் கவனமாக இருக்கவும். நெருப்பு தானம் பெறுவதும், அதையே கொடுப்பதும் தெய்வ அனுகிரகத்தை கொடுக்கும்.

தீப்பெட்டி வந்து 60 to 70 ஆண்டுகள் இருக்கலாம். அதற்க்கு முன்னர் நெருப்பு என்பதன் மதிப்பு மிகவும் அதிகம். நெருப்புக்காக யுத்தங்கள் நடந்ததாக  கூட வரலாறுகள் உள்ளது. மேலும் நமது முன்னோர்கள் யாரும் சிக்கிமுக்கி கல்மூலம் தீமூட்டி தீபம் ஏற்றி இருக்க மாட்டார்கள். மிகவும் உயர்ந்த அறிய யாகங்களிலே கூட இப்போது புதிய நெருப்பினை உண்டாக்குவது குறைந்து விட்டதனை பார்க்கிறோம்.

நெருப்பு தற்காலத்தில் மிக எளிதாக நினைத்த இடத்தில் கிடைப்பதால்....
மனிதருக்கே உண்டான சிறு மதியின் விளைவாக... தற்போது அடுத்தவர் ஏற்றிய தீபம் மூலம் அவருடைய தீய கர்மா நம்மை அடையும் என புரளிகள் கிளம்பி, நாமும் அப்படியே நினைக்கும் படி ஆகி விட்டது. நெருப்பு பரிசுத்த குணமுடையது. அதனால் அசுத்தம் அடையவே முடியாது என்பதனை ஆராய்ந்து உணருங்கள்.
நலம்
வளம்
உங்களை சேரட்டும்.
V.V.பொன்தாமரைக்கண்ணன்
DHA., DNS.,
ஶ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்.
கொடுமுடி
7667745633

எண்ணை குளியல் செய்ய (oil both)

எண்ணை குளியல் செய்ய

ஞாயிறு... அழகு பாழ்
திங்கள்... மன சஞ்சலம்
செவ்வாய்... வியாதி கோரரூபம்
புதன்... திரவிய லாபம்
வியாழன்... மனவிசாரம்
வெள்ளி... பெண்ணுக்கு நலம். ஆண்கள் மதியத்திற்கு மேல் எனில் தனம்
சனி... ஆரோக்கியம்.

பரிகாரம்
அவசியமாக வேறு நாளில் எண்ணைக்குளியல் செய்ய.... நல்லெண்ணையுடன், கடுகு எண்ணை, அத்தர், மல்லிகை தைலம் அல்லது வேறு ஏதாவது கலந்து தேய்த்தால் மேற்கண்ட தோசம் இல்லை