30 November 2014

கடன் சுமையினால் தடுமாற்றமா? மைத்ரமுகூர்தம் ஐ பயன்படுத்துங்கள்.

நெருப்பு ,  பகை, கடன் ஆகியவைகளை மிச்சம்   வைக்க கூடாது அப்படி வைத்தால் அது அவர்களது கழுத்தை நெரிக்கும் என்று பெரியவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். கடன் பெற்றார் நெஞ்சம் போல்கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்றுகடன் பெற்றவர்களின்  நிலையை கம்பர் இலக்கிய நயத்துடன், தனது இலக்கியத்தில் சொல்லியிருப்பார். 
கேள்வி :சரி ஜாதக ரீதியாக மீள கடனில் மூழ்கிவிடும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் என்ன செய்தால் கடனில் இருந்து மீண்டு நல வாழ்வினை பெற முடியும் ?

இதற்க்கு சரியான வழி என்ன ? மேலும் பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவு பெறுவது எப்படி ? இதற்க்கு ஜோதிட ரீதியான தீர்வுதான் என்ன ? ஜோதிடம் இந்த சிரமத்தில் இருந்து விடுபட வழி காட்டுகிறதா ? 
பதில்: நிச்சயம் இருக்கிறது.
கடன்களை கட்டுவதற்காகவே, பிரத்தியேகமாக ஒரு  முகூர்த்த காலம் ஒன்று உள்ளது. அதனை மைத்ரமுகூர்தம் என குறிப்பிடுவார்கள். இந்தநாளில் தீர்க்க முடியாது என தடுமாறும் கடனுக்கான அசலில் இருந்து, ஒரு சிறுதொகையை காட்டும்போது மீதியுள்ள கடனும் மெல்ல மெல்ல தீர்வுக்கு வரும்.முயற்சித்து பார்க்கவும். 

கடன் தீர உங்களுக்கு உதவி தேவையா?

26 November 2014

கலியுகாதி சகாப்த வருடங்களை கணக்கிடுவது எப்படி?

கலியுகாதி வருஷங்களை அறிய எப்போதும் சாலி வாகன சகாப்த்தத்தினையே முதலாக கொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. சாலிவாகன வருடம் அறிய ஆங்கில வருடத்துடன் 78ஐ கழித்துக் கொள்ளவேண்டும். பின்னால் உள்ள படத்தில் உள்ளவாறு நமக்கு தேவையான வருடத்தினை கணக்கிட்டுக் கொள்ளலாம்.


சகாப்தத வருடங்களை கணக்கிட

13 November 2014

உப ரத்தின கற்கள் ( ALTERNATE GEMS OR LUCKY STONES )



உப ரத்தின கற்கள் ( ALTERNATE GEMS OR LUCKY STONES )

அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை அதிர்ஷ்டத்தை தேடி மனிதன் அலைகிறான். மனிதனின் முயற்ச்சிகள் வெற்றி பெற பல சாஸ்திரங்கள் நமக்கு வழி காட்டுகிறது. அதில் மிக முக்கியமானது ரத்தின சாஸ்திரம் ஆகும். யார், யார் அணியவேண்டும் ஜாதகத்தை பார்த்து அணிவதுதான் ரத்தின சாஸ்திரம் ஆகும். நமக்கு இயற்க்கை அன்னை நமக்கு படைத்த அற்புதமான பொக்கிஷம் தான் இரத்தினமாகும். மாமன்னர்கள் முதல் சாதாரண மனிதன் வரை அதிர்ஷ்ட இரத்தினத்தை அணிந்து பல வெற்றிகளையும், பல சாதனைகளையும் அடைந்துள்ளார்கள்.

ராசி கற்கள் எப்படி உருவானது.

            கோடிக்காணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் உட்புற சீதோஷ்ண மாற்றத்தால் தாது உப்புகளாகவும், மண்,மணல், கல் கலந்து பலவிதப் பாறைகளாக தாது பொருட்கள், இரசாயன பொருட்களாகவும், அடிக்கடி பூகம்பங்கள், இயற்கை சீற்றங்களும், இரசாயன மாற்றத்தால் பரிணாம வளர்ச்சி அடைந்து இதன் மூலம் உருப்பெற்று வளர்ச்சி அடைந்து இரத்தினங்கள் உருவானது. அந்த இரத்தினம் இயற்கைச் சக்தியால் அதிர்வுகளையும், மின்காந்த அலைகளையும் பலஆயிரம் ஆண்டுகளாக உருபெற்று இயற்கை ஆற்றலால் சக்தி பெற்றது. மகா இரத்தினம் 9 வகை கற்கள் கொண்டவைகள் ஆகும். இவைகள் சிறப்பான  ஆற்றல் கொண்டவையாகும். இந்த கற்களும் அதிகமாக கிடைக்காது. உபரத்தினம் உப ரத்தின கற்கள் ( ALTERNATE GEMS OR LUCKY STONES ) 100க்கும் மேற்ப்பட்ட இரத்தினங்கள் இருந்தாலும் சிலவகைக் கற்கள் நவக்கிரகங்களோடு Planets தொடர்பு கொண்டுள்ளன. ரத்தினங்களின் இயற்பியல், வேதியியல் குணத்தை பொறுத்து, ஒவ்வொரு ரத்தினமும் தனித்தனி தன்மைப் பெற்றுள்ளது.


நவ இரத்தினத்திற்கு இணையான நன்மை தரக் கூடிய வகையில் முக்கியமான, அதிக பலன்களைக் கொடுக்கும் (ALTERNATE GEMS OR LUCKY STONES) உபரத்தினகற்கள்  உள்ளது, அதிர்ஷ்டத்தை அடைய வேண்டும் என்று துடிப்பவர்கள் இந்த வகையிலான அதிர்ஷ்ட இரத்தினத்தை வாங்கி அணிந்து நன்மைகளை அடையலாம். அந்த ரத்தினம் நன்மையினை மட்டுமே கொடுக்கும், தவிர தீமை கொடுக்காது. இரத்தின கற்கள் அணிய எந்த காலத்தில், எந்த விரலில், எந்த உலோகத்தில், எந்த நேரத்தில், எந்த மந்திர சுலோகங்களை கடைபிடிக்க வேண்டும் என்ற விதி முறைகள் பின்பற்றினால் இரத்தின கற்களின் ஒளியில் வரும் கதீர்விச்சின் மூலம் நமது சரீரத்தில் உள்ள முக்கியமான நரம்புகளுடன் தொடர்பு கொண்டுள்ள இரத்த ஓட்ட நாளங்கள் மூலம் கற்களின் சக்தி நமது மனதிலும், புற சூழ்நிலையிலும், உடலிலும் நல்ல பல விளைவுகளை தருகிறது. இரத்தின கற்களின் மகா சக்தி இருப்பது நிச்சயமான விஷயமாகிறது. இந்த இரத்தினத்தை கைவிரல் மோதிரத்தில் அணியலாம் (or) கழுத்தில் டாலராக அணியலாம். இரத்தின மணிகள், பிரபஞ்சக்தியை கதிர்வீச்சு முறையில் உள்வாங்கி, வரவிருக்கும் கஷ்டங்களில் இருந்தும், ஆபத்துகளிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்கிறது. பெரும்பாலான நோய்களுக்கு மனப்பிரச்சனைகள் தான் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவார். மன இறுக்கம், படப்படப்பு, பயம், தன்னம்பிக்கையின்மை, கோழைத்தனம் போன்ற மனக்கோளாறுகளை அதிக நோய்களுக்கு அடித்தளமாக இருக்கிறது. இரத்தினங்கள் அணிவதால் மனதிற்கு உற்சாகம் தன்னம்பிக்கையும் கிடைக்கின்றன.


ராசிகற்கள் தேர்வு செய்வது எப்படி?

 How to choose lucky stones?

ரத்தினங்கள் வாங்கும் போது ரத்தினத்தை நன்கு தெரிந்தவரிடம்
(Gem Expert) வாங்க வேண்டும். ஜெம்ஸ், ராசியான கல் தேர்வு செய்ய 7667745633  தொடர்பு கொள்ளவும்.    ஜாதகம், எண் ராசி, பெயர் ராசி,  பார்த்து  தோஷ பரிகார பலனை கூறி வாழ்க்கைக்கு முன்னேற்றம் தரக்கூடிய ரத்தினம் அணிந்தால் வாழ்க்கையில் சிறப்புடன் வாழலாம். நீங்கள் வாங்கும் எந்த ராசிகற்களாக இருந்தாலும் அது முறையாக சுத்தி செய்தும், சக்தியினை முறைபடுத்தி ப்ரோகிராம் செய்யப்பட்டதாகவும் உள்ளதா? என கேட்டு வாங்கவும்.  ஸ்ரீராம் சக்தி மையம் மூலம் கிடைக்கும் இரத்தின கற்கள் 100% உயிரோட்டம் மிகுந்த கற்களாகவும், முறையே சுத்தி செய்து, பிரத்தியேகமாக உங்களுக்காகவே ப்ரோகிராமிங் செய்து மட்டுமே கிடைக்கும். (தங்கம் & வெள்ளி) மோதிரம் தருகின்றோம். ராசி கற்களின் விலை பற்றி அறிய....

V.V.பொன்தாமரைக்கண்ணன்
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி.638151
ஈரோடு மாவட்டம்,
தொடர்புக்கு:76677-45633 

           

12 November 2014

எளிமையான ஆருட முறை (ஸ்ரீ சீதாராமர் சக்கரங்கள்)



ஆருட முறைகளில் பலப்பல வழிமுறைகள் உள்ளன. ஆரூடம் என்பது பொதுவாக ஒருகாரியம் செய்ய ஆரம்பிக்கும் போது அதனை செய்யலாமா, வேண்டாமா? என வரும் சந்தேகத்தினை தெய்வசன்னிதானத்திலோ அல்லது தகுதியான ஆரூடம் கூறும் நபரிடமோ சென்று முறையாக கேட்டு தெய்வத்தின் அனுமதி இருக்கிறதா? என நாம் அறிந்து கொள்வதே ஆகும்.
இதுவே சரியானதாக பெரியோர் கூறியுள்ளார்கள். அதுபடி நம்மால் குறிப்பிட முறையில் ஆரூடம் கேட்க முடியாத பொது அதற்க்கான எளிய ஆரூட முறையினை அருளியுள்ளார்கள்.
ஸ்ரீ சீதா ஆருட சக்கரம்
 
ஸ்ரீராமர் ஆரூட சக்கரம்



இதில் மிகவும் எளிமையான ஆரூட முறைகளாக எண்களால் வடிவமைக்கப்பட்ட, ஸ்ரீராமர் சக்கரம், சீத சக்கரம் ஆகியவைகள் கூறியுள்ளார்கள். இதனை முறையாக கட்டத்தில் அடைத்து பயன்படுத்தும் போது ஸ்ரீஸ்ரீ சீதா ராமரின் அனுக்கிரகம் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மையாகும். இதில் குறிப்பிட்ட சீத சக்கரம் என்பது, சீனாவில் தோன்றிய சீனவாஸ்த்து சாஸ்திரத்தில் பிரபஞ்ச ரகசியம் கூறும் அற்புதமான ஒன்றாகவும், அதனை மிகப்பெரிய ராட்சஸ ஆமை ஒன்றின் முதுகில் இருந்து கண்டறிந்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆரூடம் பார்க்கும் முறை.



இஷ்ட தெய்வத்தினை நினைத்து வேண்டிக்கொண்டு கட்டத்தினை தொடச்சொல்லி பலன் கூறவும்.

ஸ்ரீராமர் சக்கரம் பலன்கள்:

9

16

5

4

7

2

11

14

12

13

8

1

6

3

10

15

1-ஸ்நான நாசம்
2-துக்கம்
3-காரிய சித்தி
4-லாபம்
5-மரணம்
6-குலக்ஷயம்
7-ராஜாங்கம்
8-பந்து தரிசனம்
9-கல்யாணம்
10-நாசம்
11-சர்வ லாபம்
12-தீர்காயுசு
13-கலகம்
14-சுகம்
15-நன்மை
16-க்ஷேமம்

சீதா சக்கர பலன்கள்:

8

3

4

1

5

9

6

7

2

1-தான லாபம்
2-நாசம்
3-சிநேகம்
4-பீடை
5-க்ஷேமம்
6-கலகம்
7-தனம்
8-மரணம்
9-சந்தோஷம்

அதிர்ஷ்ட விஞ்ஞான ஜோதிடர்...
V.V.பொன்தாமரைக்கண்ணன்
ஸ்ரீராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்,
கொடுமுடி.638151
ஈரோடு மாவட்டம்,
தொடர்புக்கு:76677-45633

 

11 November 2014

வாஸ்த்து சாஸ்த்திரப்படி உச்சபலம் பெற்ற வாசல் எது? What is the threshold for the maximum strength of Vastu?


வாஸ்த்து சாஸ்திரத்தில் உட்பிரிவுகளாக பலப்பல விதிமுறைகள் இருந்தாலும் அனைத்து மக்களுக்கும் அதன் அடிப்படையினை தெரிந்து கொண்டு  இருப்பது அவசியம் ஆகும். வீட்டில் ஏற்படும் பலவிதமான வாஸ்த்து தோஷங்களுக்கு காரணம் நமக்கு அதன் அடிப்படை விசயங்கள் கூட தெரியாமல் இருப்பதே ஆகும்.
பெரும்பாலும் வாஸ்த்துக் குற்றங்கள் ஏற்படும் இடம் வீட்டின் தலை வாசல் என கூறப்படும், நாம் வீட்டின் உள்ளே வரும் காந்த ஆற்றலின் வழியினை சரியானமுறையில் அமைத்துக் கொள்லாததே ஆகும். அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்வு வாழ உறுதியளிக்கும், முதல் வாஸ்த்து பலம், ஒரு வீட்டின் வாசலே ஆகும். அதனை சரியான முறையில் அமைத்து கொண்டாலே அற்புதமான முறையில் நமது வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.  

பொதுவாகவே நமக்கு வீட்டின் கிழக்கு திசை என்பதும், வடக்கு திசை என்பதும், மிகவும் முக்கியமானதாகும். இதை மையமாக வைத்து நாம் வாசல் வைக்கும் சூட்சுமத்தினைபுரிந்து கொள்ள பார்ப்போம். வீட்டின் நான்கு பக்கவாட்டு பக்கங்களிலும் உள்ள சுவர்களில் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியினை உச்சம் என குறிப்பிடுவார்கள். இந்த திசைகளில் இயற்கையின் காந்த ஆற்றல் மிக அதிகமாக குவியும். அதே போல தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளை நீச்சம் எனகுறிப்பிடுவார்கள். இந்த திசைகளிலே காந்த சக்தியானது உயிர் ஆற்றலினை குறைவாக கொண்டு இருக்கும். இதனை போலவே இரண்டு திசைகளுக்கு சரி பாதியில் உள்ள இடத்தினை சமம் என குறிப்பிடுவர்கள். (மனையடி சாஸ்த்திரத்தின் படி இந்த பகுதியினையே சிறப்பாக கூறுகிறார்கள்)  இந்த இடங்களில் காந்தசக்தியானது, சரியான முறையில் சமமாக பரவி நிற்கும். இதை வைத்தே நாம் நம்முடைய வீட்டின் உச்சநீச்சங்களை தெரிந்து கொள்ள முடியும். இதனை இந்த படத்தினை பார்த்து புரிந்து கொள்ளலாம்.
vastu palam konda vaasal.
ஸ்ரீராம் சக்தி மையம்

கிழக்கு: 
இந்த சுவற்றில் வடக்கு பகுதி +1௦௦ எனவும் தெற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது.இதில் நடுபாகமாகிய கிழக்கில் இருந்து வடக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
தெற்கு:
இந்த சுவற்றில் கிழக்கு பகுதி +1௦௦ எனவும் மேற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது. இதில் நடுபாகமாகிய தெற்கில் இருந்து கிழக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
மேற்கு: 
இந்த சுவற்றில் வடக்கு பகுதி +1௦௦ எனவும் தெற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது. இதில் நடுபாகமாகிய மேற்கில் இருந்து வடக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.
வடக்கு:
இந்த சுவற்றில் கிழக்கு பகுதி +1௦௦ எனவும் மேற்கு பகுதி -1௦௦ எனவும் வருகிறது. இதில் நடுபாகமாகிய வடக்கில் இருந்து கிழக்கு பகுதியினை நோக்கி வாசலை வைக்க நன்மையே உண்டாகும்.

இந்த முறையின் படி பார்க்கும் பொது, ஈசான்யம் பகுதியில் கிழக்கு மற்றும் வடக்கு ஆகிய இரண்டு திசைகளிலும் உச்ச பலம் வருவதால், ஈசான்யம் மிகவும் புனிதமானதாக கருதப்பதுகிறது. மேலும் அதிகமான தகவலுக்கு உங்கள் ஜோதிடரை அணுகவும்.