28 August 2015

ராகு கேது தோஷம் நிவர்த்தி Ragu Kethu Parihara


     நாம் வசிக்கும் இந்த பூமியில் இருந்து வெகு தொலைவில் ஒளி மிகுந்த கிரகங்களும், நட்சத்திரங்களும் இருக்கிறது. கிரகங்கள் ஒன்பது என்றும், நட்சத்திர மண்டலங்களில் கிரகங்களின் பாதையில் உள்ள இருபத்தேழு மண்டலங்கள் என்றும், வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என ஏழு கிரகங்களும் நிழல் கிரகங்கள் எனப்படும், ராகு, கேது
சேர்த்து நவகிரகங்கள் எனப்படுகிறது.

      சூரியனின் ஒரு சுற்று ஒரு வருட காலமும், சந்திரனின் ஒரு சுற்று இரண்டு பட்சங்கள் கொண்ட ஒரு மாதமாகவும் கணக்கிடப்படுகிறது. செவ்வாய் ஒரு சுற்று 18 மாதங்களாகும். புதன், சுக்கிரன், இவர்களின் சஞ்சாரம் ஒரு ஆண்டு ஆகும் சனியின் ஒரு சுற்று முப்பது வருட காலமாகும். குருவின் ஒரு சுற்று பன்னிரெண்டு வருடங்கள், ராகுவும், கேதுவும், ஒன்றரை வருட காலத்தில் ஒரு சுற்றை முடிப்பர். ஏழு கிரகங்களும் பிரதட்சிணமாக சுற்றி வரும் போது ராகுவும், கேதுவும் மட்டும் அப்ரதட்சிணமாக சுற்றி வருகிறார்கள்.

      ராசி சக்கரத்தில் தனக்கென்று வீடு இல்லாமல் இருக்கும் நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவிதமானவை. ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்று வசனம் உண்டு. இவ்விருவரும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் ராசியையும், அந்த ராசிநாதனையும் பொருத்தும், இவர்கள் எந்த கிரகங்களின் பார்வை பெறுகிறார்கள் என்பதை பொருத்தும் இவர்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. அனேகமாக நல்ல இடங்களில் அமையாவிடில் இவற்றால் அதிகக் கெடுதல்கள் ஏற்படுகிறது. சந்திரன் சூரியன் இவர்களை விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர். சந்திர, சூரியரையும், பலம் இழக்கும் படி, ஒளி இழக்கும்படி செய்ய இவர்களுக்கு ஆற்றல் உண்டு.

        ராகு கேது தோஷம் உடையவர்கள், மிகவும் கடுமையான பலன்களை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர். விவாக தாமதம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவற்றுக்கு காரணமாக இருக்கிறார்கள். மேலும், மனநோய், விபத்துக்கள், தீய சேர்க்கை போன்ற பலவித கெடுதல்களும் ஏற்படும். ராகு, கேது இவர்களால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் கெடுதலான பாதிப்புகள் நீங்க ராகு, கேது ஸ்தோத்திரங்களை சொல்வதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் உண்டு. திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் ராகுவுக்கும், கீழ்பெரும்பள்ளம் எனும் இடத்தில் கேதுவுக்கும், தனித்தனி சன்னதிகள் இருப்பதால் அங்கு சென்று வழிபட்டு நாகநாத ஸ்வாமியை வணங்கி வருவது மிக்க நன்மையினை கொடுக்கிறது. இந்த வழிபாடு ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானாவர்களின் அனுபவம். லக்னத்தில் கேதுவும், ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள ஆண் பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும். இத்தகைய ஜாதக அமைப்புகள் உள்ளவர்கள் முறையாக வழிபாடு செய்து வந்தால், சீக்கிரம் திருமணம் நிச்சயமாகி விடும்.

       அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷபரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில், அவர்களின் நல்லாசி பெற, ராகு பகவானுக்கு கோமேதகம் ரத்தினத்தினையும், கேது பகவானுக்கு வைடூரியம் இரத்தினம், ஆகிய ராசிகல்-க்களை ஒரே மோதிரத்தில் அணியும்போது, முக்கியமாக ராகு, கேது இவர்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம் முதலான தோஷம், ராகு தசை பதினெட்டு வருடங்கள். கேது தசை ஏழு வருடங்கள் ராகுகேது மூலம் உண்டாகும் கெடுதல்களைப் போக்கி எல்லா நன்மைகளையும் பரிகாரம் அடைய முடிகிறது. மேலும்  விபரங்களுக்கு...

        கொங்கு தேசமான ஈரோடு மாவட்டம், கொடுமுடி மகுடேஸ்வரர் மும்மூர்த்தி ஸ்தலத்தில் ராகு கேதுக்களுக்கான பரிகார பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. ராகு, கேது தோஷங்கள் நீங்குவதற்காக விசேஷமான பூஜைகள் செய்வதற்கு இங்கே அனேக வசதிகள் உள்ளன. கால சர்ப்ப தோஷம், குடும்ப சாப தோஷம், மேலும் எல்லாவிதமான பாம்பு கிரகங்களால் ஏற்படும் தோஷம் காரணமாக, திருமணம் தடைபட்டு வருபவர்களும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி உறவு சரியில்லாமல் கவலைப்படுபவர்களும், குடும்ப சச்சரவுகளால் மன அமைதி இல்லாதிருப்பவர்களும், செய்யும் தொழிலில் விருத்தி இல்லாமல் இருப்பவர்களும் இத்தலத்தினில் ராகு-கேது பரிகார பூசையினை இங்கு செய்ய முடிகிறது. இங்கு அனைத்து நாட்களிலும் பரிகார நிவர்த்தி பூஜைகள் நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு...
tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

26 August 2015

வெற்றிக்கு உதவும் எண்கணிதம் Numerology for success

பெயர் நன்கு அமைந்த ஒருவருக்கு, சுகமான வாழ்வு கிட்டும், தொழில் விருத்தி உண்டாகும், வண்டி வாகனங்கள், வீடு மாளிகைகள், செல்வவளம் பெற்று வாழ்வார் நல்ல இல்லறம், நன்மக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

எந்த வயதிலும் பெயரினை சாதகமான அதிர்ஷ்ட எண்ணில் மாற்றி அமைத்து வளம் பெறலாம். நல்ல அதிர்ஷ்ட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கும் கூட பெயர் நன்றாக இருந்தால் மட்டுமே அதிர்ஷ்ட்டம் நிலையானதாக இருக்கும்.

எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் உனக்கு, உன்னைத் தவிர, உனக்குள் இருக்கும் ஆற்றலைத் தவிர, வேறு எதுவும் உதவாது. என சித்தர்கள் கூறியுள்ளார்கள். நம்முள் உள்ள ஆற்றலை அதிர்ஷ்ட்ட ஆற்றலாக மாற்றி நம்மை ஒரு வெற்றியாளனாக மாற்ற அதிர்ஷ்ட பெயர் எப்போதும் உடன் இருந்து உதவும்.

நமக்குள் உள்ள ஆற்றல் என்பது நமது பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் ஆகியவற்றின் மூலம் கணித்து உணர வேண்டும். அதனை சரியான முறையில் நாம், நேர்மறையாக பயன்படுத்தி நம்மை வளமாக வாழ வைக்கும் கலையே, எண்கணிதம் என்னும் நியூமராலாஜி என்னும் கலையாகும்.

பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...



sriraam jyothida arayci maiyam

tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

25 August 2015

பெயர் மாற்றம்&பரிகார கட்டண விபரங்கள் numerology name correction & parihara fees

ஜோதிடம், எண்கணிதம், குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர், நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்னைகள், தோஷங்கள், பரிகாரங்கள், ராசிக்கல் போன்ற அனைத்து விபரங்களுக்கும் அணுகவும். நேரில் வரமுடியாதவர்கள் Consulting Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.


பெயர் மாற்றம் செய்வது என்பது, பெயரினை ஒட்டு மொத்தமாக மாற்றுவது இல்லை. பெயரில் ஒரு சிறு மாற்றத்தின் மூலம் நமது பெயரை அதிர்ஷ்ட அலைவரிசைக்கு கொண்டுவருவதே ஆகும்.


நிலைகட்டணம்உங்களுக்கு கிடைக்கும் விபரங்கள்குறிப்பு
குழந்தைகளுக்கு பெயர் சூட்டரூபாய்
 5,699 
மட்டும்
அதிர்ஷ்ட பெயர்,
12 பக்க அதிர்ஷ்ட குறிப்புகள் pdf தரப்படும். .
(பெயர் எண், பிறப்பு எண், விதி எண், எண், தேதிகள், மாதம், வழிபாடு, யந்திரம், தீப தூபங்கள், அதிர்ஷ்ட சின்னங்கள், அதிர்ஷ்ட வண்ணம், அதிர்ஷ்ட வயதுகள், தொழில், பெயர் எண் பலன்கள், ஹீப்ரு எண் பலன்கள், பிறப்பு எண் பலன்கள், அதிர்ஷ்ட ரத்தினம், பெயர் எழுத குறிப்பு, தவிர்க்க வேண்டிய எண், வண்ணம், பற்றிய குறிப்பு)
குறைந்த பட்சம் ஐந்து பெயர்கள் கொடுக்கப்படும். மேலும் பெற்றோர் கொடுக்கும் பெயர்கள் எண்கணித முறையில் பரிசீலித்து தரப்படும்.
உயர் நிலை நியூமராலாஜி 
(பெயர் மாற்றம் செய்ய)
ரூபாய் 8,099 மட்டும்அதிர்ஷ்ட பெயர்,
12 பக்க pdf  அதிர்ஷ்ட குறிப்புகள்.
(பெயர் எண், பிறப்பு எண், விதி எண், எண், தேதிகள், மாதம், வழிபாடு, யந்திரம், தீப தூபங்கள், அதிர்ஷ்ட சின்னங்கள், அதிர்ஷ்ட வண்ணம், அதிர்ஷ்ட வயதுகள், தொழில், பெயர் எண் பலன்கள், ஹீப்ரு எண் பலன்கள், பிறப்பு எண் பலன்கள், அதிர்ஷ்ட ரத்தினம், பெயர் எழுத குறிப்பு, தவிர்க்க வேண்டிய எண், வண்ணம், பற்றிய குறிப்பு)
அதிக பட்சம் மூன்று அதிர்ஷ்ட பெயர்கள் தேர்வு செய்து தரப்படும். அதில் நீங்கள் தேர்ந்து எடுக்கும் பெயருக்கு ஏற்ற அதிர்ஷ்ட குறிப்புகள் தரப்படும்.
உயர் நிலை நியூமராலாஜி (நிறுவனங்களுக்கான பெயர் தேர்வு)
ரூபாய் 9,999 மட்டும்அதிர்ஷ்ட பெயர்,
 12 பக்க pdf குறிப்பு,
சீன வாஸ்த்து குறிப்பு
(நான்கு அதிர்ஷ்ட திசைகள், நான்கு தீய திசை விபரங்கள், வெற்றி திசை, ஆரோக்கிய திசை, குடும்ப வாழ்க்கை திசை, சுயமுன்னேற்ற திசை, தடைகள் தரும் திசை, ஆபத்தினை தரும் திசை, விபத்தினை தரும் திசை, முற்றிலும் தோல்வி தரும் திசை, ஆகிய விபரங்கள்.)
 உங்களுக்கு பொருந்தும் பெயருக்கு ஏற்ற அதிர்ஷ்ட குறிப்புகள் தரப்படும்.
தோஷ நிவர்த்தி பரிகாரங்கள்.

கொடுமுடி-யில் தகுதிவாய்ந்த புரோகிதர்களை கொண்டு பரிகாரங்கள் செய்யப்படும்
ரூபாய் 6,000 மட்டும்நாக தோஷம்
காலசர்ப்ப தோஷம்
திருமண தடை தோஷங்கள்
கதளி விவாகம்
ஜோதிடர்களின் தேவைகளுக்கு ஏற்ப எல்லாவிதமான பரிகாரங்களும் செய்யப்படும்.
இந்த கட்டணத்தில் பூஜா பொருள்கள், அய்யர் சம்பாவனை, மற்றும் அர்ச்சனை தட்டுகள் & அபிசேக சீட்டு & தீபம் உட்பட அனைத்தும் அடங்கும். வேறு எந்த மறைமுக கட்டணமும் கிடையாது.


வங்கி கணக்கு எண் காண


பெயர் மாற்றம் மூலம் வளம்பெற கீழ்கண்ட விபரங்களை சமர்பிக்கவும்.

எந்த பிரிவின் கீழ் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

பெயர்:

தந்தை பெயர்:

தாய் பெயர்:

பிறந்த தேதி

பிறந்த நேரம்

பிறந்த இடம்:

குல தெய்வம் பெயர்:

கல்வி:

தொழில்:

ராசிக்கல் அணிந்த விவரங்கள்:

இதுவரை நீங்கள் செய்த பரிகாரங்களின் விபரம்:
1.



உங்கள் தொடர்பு செல் எண்:

உங்கள் மின்னஞ்சல் ஐடி:

உங்கள் முக்கியமான கேள்வி:
1.




tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone

எண் கணிதம் விளக்கம் astro numerology

அஸ்ட்ரோ நியூமராலாஜி - எண் கணிதம் விளக்கம்.
      பெயர் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஆயுள் முழுவதும் அவரினை உலகத்துடன் இணைக்கிற முக்கியமான அடையாளம் ஆகும். பெயரின் உச்சரிப்பு என்பது ஒலி அலைவரிசைகளின் அதிர்வாகும். பொதுவாக ஒலி அலைகளின் மாறுபட்ட அதிர்வுகளின் தொகுப்பினையே நமது செவி மொழி என்ற வடிவில் உணர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழி மற்ற எல்லா மொழிகளையும் உள்ளடக்கி உலகத்தினையே ஆட்கொள்கிறது என்பது, அந்த மொழியின் பலமான அதிர்வலைகளின் தொகுப்பு மற்ற மொழிகளின் ஆகர்சன சக்தியினை விட அதிகமானது என்பதனை நாம் உணரவேண்டும். அந்த வகையில் உலகத்திற்கே பொது மொழியாக உள்ள ஆங்கில எழுத்துகளை மட்டுமே பயன் படுத்தி சப்தத்தின் நல்ல மற்றும் தீய விளைவுகளை கண்டறிவது பொருத்தமானதாகவே உள்ளது.


       நம்மை உலகத்தின் சக மனிதர்களுடன் இணைக்கும் நமது பெயரின் அதிர்வெண், நமது ஜாதக ரீதியாக நாம் பிறந்த தேதி எண், விதி எண், மற்றும் உயிர் எண்ணுடன் பொருந்தி போகும் போது, நம்மால் மிகவும் சிறப்பான முறையில் இயங்க முடிகிறது. அதனை இப்படி விளக்கலாம். போர்களத்திற்கு செல்லும் வீரனுக்கு அவனின் அசைவுகளை, போர்முறைகளை, வேகத்தினை தடுக்காத ஆடைகள், கவசங்கள், ஆயுதங்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே ஒவ்வொரு மனிதருக்கும் அவர்களது பெயரும் முக்கியமானது.

      ஒரு குழந்தை பிறந்து, அது வளரும் போதும் அல்லது வளர்ந்த பின்னரும் கூட பெற்றோர்கள் மட்டுமல்ல குடும்பத்தினை சேர்ந்த எந்த நபர்களும் குழந்தையினை இனிசியலுடன் சேர்த்து கூப்பிடுவது இல்லை. எனவே இனிசியல் இல்லாமலேயே முதலில் பெயரினை மட்டும் சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் குழந்தை வளரும் பொது உச்சரிக்கும் அதிர்வலைகள் குழந்தைக்கு நன்மைகள் செய்யும். குழந்தைக்கு வைக்கும் பெயர் நீண்ட பெயராக இருக்கும் பட்சத்தில் செல்லமாக அந்த பெயரில் ஒரு பகுதியினை மட்டும் கூப்பிட முடிவு செய்யும் பொது, எண்கணித நிபுணரிடம் தக்க ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். முழு பெயர் எண்னின் அலைவரிசையினை கெடுக்கும் படியான பெயராக அது அமையுமானால், அது குழந்தைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

      படித்து வளர்ந்து பட்டங்கள் பெற்று, தொழில் அதிபராகவோ அல்லது உயர் பதவியிலோ இருக்கும் பொது நாம் நமது முழு பெயராலேயே அறியப்படுவோம். அப்போது நிறைய கையெழுத்து போடும் பொது இன்சியலுடன் உள்ள பெயரின் எழுத்துகளின் உண்டாகும் அதிர்வுகளின் தாக்கத்தினால் மீண்டும் நாம் மாறுபாடான பலன்களை அடையக்கூடும். எனவே இன்சியலுடனும், இல்லாமலும் மேலும் நமது கூப்பிடும் பெயரும் கூட ஒரே அலைவரிசையில் நட்பு அலைவரிசையில் இருக்குமாறு அமைத்து கொள்ளுங்கள். பெயர் மட்டுமே முழு பலன்களை தந்து விட முடியாது. அவரவர்களின் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்து தான் பெயர் வைக்க வேண்டும். ஜாதக ரீதியாக மிகவும் கடினமான சூழலில் சிக்கிய அன்பர்கள் 100% எண்கணித முறையில் எளிமையான வாழ்க்கையினை அடையலாம். ஜாதக ரீதியாக தற்போது நல்ல சூழல் இருக்கும் அன்பர்கள் தங்களின் அதிர்ஷ்டத்தினை 100% தக்க வைத்து கொள்ள முடியும். மேலும், அதனை வாழ்நாள் முழுதும் தொடரவைக்க முடியும். 
   ஜோதிடம் எண்கணிதம், குழந்தைகளுக்கு அதிர்ஷ்ட பெயர், நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட பெயர், குடும்பம் தொழில் பற்றிய பிரச்னைகள், தோஷங்கள், ராசிக்கல் போன்ற அனைத்து விபரங்களுக்கும் அணுகவும். நேரில் வரமுடியாதவர்கள் Consultng Fees-ஐ எனது வங்கி கணக்கில் செலுத்தியவுடன் போன் மூலம் ஜோதிட பலன்கள் தெரிவிக்கப்படும்.

18 August 2015

நாக சதுர்த்தி, நாக பஞ்சமி (naga parikara)

 18-08-2015 ம் தேதி நாகசதுர்த்தி வழிபாடு
 19-08-2015 ம் தேதி நாகபஞ்சமி வழிபாடு
இந்த இரண்டு நாட்களில் நாக தெய்வங்களை முறைப்படி வழிபட ஜாதக ரீதியான, ராகு கேது தோஷங்கள், குடும்ப சாப தோஷம், கால சர்ப்ப தோஷம், மற்றும் விஷ ஜந்துக்களால் உண்டாகும் தோஷங்களும், விலகி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

விசேசமாக தினசரி பூஜை செய்யப்படும் இடத்தில், அரசு வேம்பு மரத்தடியில், இந்த தினங்களில் நாக பிரதிஷ்டை செய்ய அநேக விதமான நன்மைகள் உண்டாகும். தோஷ நிவர்த்தி ஆகும். வழிபாட்டு மந்திரத்திற்கு அடுத்துள்ள இணைப்பினை க்ளிக் செய்க...>> நாகர் வழிபாடு மந்திரம்