06 May 2014

வைரம் (DIAMOND)



 
நவரத்தினங்களில் மிகவும் விலை உயர்ந்தது வைரம் (DIAMOND) ஆகும். மிகவும் குறைந்த அளவுகளில் கூட வைரம் கிடைக்கும் (2மி.கி அளவில் கூட கிடைக்கும்).
சோழர் காலத்தில் வைரம் மிகவும் புகழ் பெற்று விளங்கியுள்ளது. அவர்கள் வைரத்தினை மட்டதாரை மட்டதாரை என்ற பெயரிலும் கூறியதாக கல்வெட்டுக்கள் கூறுகிறது. வலிமையான உடலினை வைரம் பாய்ந்த உடம்பு என்கிறோம்.
வைரத்தின் நிறங்களில் நான்கு வகைகள் உள்ளன. வெண்மை, செம்மை, பொன், கருமை, போன்ற நிறங்கள் ஆகும்.

உலகில் மிகப்பெரிய வைரம்
கல்லினன் (cullinan) என்ற வைரம் உலகின் மிகவும் பெரிய என கருதப்பட்டது. இதன் எடை 3106 காரட் ஆகும். அனால் இதை பலதுண்டுகளாக வெட்டி பட்டை தீட்டினார்கள்.
நிஜாம் (nizam) மன்னர்களிடம் 340 காரட் எடை உள்ள வைரம் இன்றும் உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரம் மதிப்புமிக்க ரத்தினமாகவே உள்ளது.

வைரம் எங்கு கிடைக்கும்

இந்தியாவிற்கு வந்த ரோமானிய ஆசிரியர்கள் இந்தியாவில் நதிமணலில் அடமாஸ் எனும் கற்கள் கிடைகிறது என குறிப்பிட்டுள்ளார்கள். அடமாஸ் என்பதே பின்னர் டைமண்ட் என மருவியிருக்க வேண்டும். முதல்முதலாக ரோமானியர்கள் இந்தியாவில் இருந்தே வைரங்களை கொண்டு சென்றார்கள், என சார்லஸ் வில்லியம் கிங் என்ற அறிஞர் கூறுகிறார். ஆனால், வைரத்தினை முதலில் தென்னாப்ரிக்காவில் தான் சுரங்கங்களில் இருந்து வெட்டி எடுத்தார்கள். வைரம் என்பது சாதாரண கரியின் மாறுபட்ட நிலையே ஆகும். கரி>>நிலக்கரி>>>கிராபைட்>>>>வைரம். கரி அளவுக்கு மிஞ்சிய அழுத்தம் வெப்பத்தில் வைரமாக மாறியுள்ளன. ஆனால் அதற்காக பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படுகிறது. நவரத்தினங்களில் வெண்மை நிறமான வைரமே சேர்க்கப்பட்டுள்ளது. (ஆனால் வைரத்திற்கு பொதுவாக நிறம் இல்லை)

வைரம் அணிந்தால் உண்டாகும் நன்மைகள் என்ன?
  1. குற்றமற்ற வைரம் அணிந்தவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலன்களை அடைவார்கள்.
  2. ஜனவசீகரம், முககவர்சி, இரண்டையும் அள்ளிக்கொடுக்கும்.
  3. செலவு ஏறஏற, வரவும் ஏறிக்கொண்டே வரும்.
  4. மக்களிடையே செல்வாக்கும், கௌரவமும் உண்டாகும்.
  5. லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும்.
  6. காரணம் இல்லாமல் இருக்கும் கவலைகள் மறையும்.
  7. இல்லறத்தில் மகிழ்சியும், அன்யோன்யமும் அதிகரிக்கும்.
  8. சொத்துக்கள், நிலபுலன்கள் சேரும்.
  9. பாலினநோய்கள் நிவாரணம் ஆகும். அதிக உழைப்பு செய்யாமலேயே செல்வம் சேரும்.
  10. சுயநலம், பொறமை, பேராசை ஆகியவற்றை குறைத்துக்கொண்டால், அதிர்ஷ்டங்களை மேலும் அதிகரிக்கலாம்.

குறிப்பு: வைரத்தின் அதீதசக்தி சில வருடங்களில் குறையும். நல்ல பலன்கள் குறைவது போல் தெரிந்தால் வேறு ஒரு வைரம் வாங்கி அணியவும்.

யார் யார் வைரம் அணியலாம்!!
·         சுக்கிரனின் நட்சத்திரங்களில் பிறந்த பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகரர்கள்.
·         ரிஷபம், துலாம் இராசி&இலக்கின காரர்கள்.
·         தற்போது சுக்கிரனின் தசை நடைபெறும் அன்பர்கள்.
·         மேலும், ஜோதிடரின் ஆலோசனைப்படி மிதுனம், கன்னி, மகரம், கும்பம் இலக்கினம் இராசிகாரர்களும் மிகவும் நன்மை அடையலாம்.

·         ஆங்கில தேதிப்படி 5,14,23ம் தேதிகளில் பிறந்தவர்கள். தேதி+மாதம்+வருடம் கூட்ட விதி எண் 5வருபவர்கள், வைரம் அணிந்து அளவற்ற நமைகளை அடையலாம்.

விபரங்களுக்கு

No comments:

Post a Comment