10 July 2025

 
உங்கள் மொபைல் எண் பொருத்தமாக உள்ளதா?
இலவசமாக அறிந்து கொள்ளவும்.

09 July 2025

ஜோதிட கேள்வி பதில்.

முக்கூட்டின் நடுவனை

அக்கூட்டின் கடையன் கூட...

முழூகூட்டின் கடையோன்

பாங்காய் சாய்ந்து

உச்சமான நடுவனை

மூன்றினால் முறைத்து பார்த்தால்...

கடையோன் உள்ள இடம்

குடத்திரண்டா ஒன்றா?


பாடல் விளக்கம்:

முக்கூட்டின் நடுவனை - முக்கூட்டு கிரகம் எனும் கிரகங்களான சூரியன் புதன் சுக்கிரன் எனும் மூன்று கிரகங்களில் மையத்தில் உள்ள சூரியனை,

அக்கூட்டின் கடையன் கூட - அந்த மூன்று கிரகங்களில் இறுதியில் உள்ள கிறக்கமான சுக்கிரன் கூடி உள்ளது.

முழூகூட்டின் கடையோன் - முழுமையான நவக்கிரக அமைப்பில் இறுதி கிரகமான சனி பகவான்,

பாங்காய் சாய்ந்து - அழகாக வசதியாக அமர்ந்து கொண்டு,

உச்சமான நடுவனை - நடு கிரகமான உச்சம் பெற்ற சூரியனை

மூன்றினால் முறைத்து பார்த்தால் - மூன்றாம் (தைரிய வீரிய ஸ்தான) பார்வையினால் பார்த்தால்

கடையோன் உள்ள இடம் - அந்த சனி பகவான் உள்ள ராசி,

குடத்திரண்டா ஒன்றா? - குடம் எனப்படும் கும்ப ராசிக்கு இரண்டிலா அல்லது கும்பத்திலா?

என்பது இந்த பாடலின் கேள்வி ஆகும்.


பதில்:

சூரியன் உச்சம் பெறுவது மேஷத்தில் என்பதால், அதனை மூன்றாம் பார்வையில் சனி பார்க்கிறது எனில், சனி கும்பத்தில் இருந்தே பார்த்து இருக்கும். ஆக விடை குடத்திரண்டு அல்ல, ஒன்றே ஆகும்.

25 June 2024

சிம்ம லக்னம்

 உங்கள் லக்னம் சிம்மம். 

சூரியன் உங்கள் லக்னாதிபதி. 

உங்கள் ஜாதகத்தின் சுபகாரக கிரஹம். 

கேந்திரத்திற்கும். திரிகோணத்திற்கும் அதிபதியான அங்காரகன் உங்களுடைய பரம யோக காரகன். 

சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள் பருமனாக இல்லாவிட்டாலும், நல்ல முக அமைப்பும் தைரியமும் ஆர்வமும் லட்சியமும் உடையவர்களாக இருப்பீர்கள். 

எண்ணத்திலும் செயலிலும் ஒரு விதகர்வமும். எப்படியாவது வெற்றியாளர் ஆகவேண்டும் எனும் வேகமும் இருக்கும். 

கடக லக்னம்

 உங்கள் லக்னம் கடகம். 

லக்னாதிபதி சந்திரன் சுபகாரகன். 

கேந்திரத்திற்கும் திரிகோணத்திற்கும் ஆதிபத்யம் பெற்றுள்ள அங்காரகன் உங்களுடைய மிகச் சிறந்த யோக காரகன். 

கடகத்தில் பிறந்த நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். 

இனிமையானவர்கள். 

பாசம் மிக்கவர்கள். 

அன்பான சுபாவமுடையவர்கள். 

சிறந்த புத்திசாலிகள் கற்பனை வளம் மிக்கவர்கள்.

மிதுன லக்னம்

 உங்களுடைய லக்னம் மிதுனம். 

லக்னாதிபதி புதன் தான் உங்களுக்கு மிகச்சிறந்த யோக காரகனாவான். 

மிதுனத்தில் பிறந்த காரணத்தால் இருவித மாறுபட்ட குணங்களையுடைய நீங்கள் பொதுவாக இனிமையான சுபாவமும். பண்பான திறைவும் கொண்டவர்கள். 

மிகச் சிறந்த புத்திசாலியான நீங்கள் வெகு விரைவில் நல்லது கெட்டதைக் கண்டறிந்த சரியாகப் புரிந்து கொள்வீர்கள். 

உங்களுடைய முற்போக்கான செயல்களால் புகழ் பெறுவீர். 

ரிஷப லக்னம்

 ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதி சுக்கிரன் அவன் தான் யோக காரகன். 

அதோடு கேந்திரத்திற்கு திரிகோணத்திற்கும் அதிபதியான சனிபகவானும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்கும் யோக காரகனாவான். 

சுக்கிரனின் ஆதிக்கத்தில் ரிஷபத்தில் பிறந்த நீங்கள் சுபாவத்தில் கபடமற்றவர்கள். 

இனிய பேச்சும். மென்மையான சுபாவமும். அமைதியான போக்கும் உடையவர்கள்.

மேஷ லக்னம்

 உங்களுடைய லக்னம் மேஷம். 

லக்னாதிபதி செவ்வாய் உங்கள் ஜாதகத்திற்கு மிகச் சிறந்த யோக காரகனாவான். 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் சாதாரணமாகவே சிறிது கர்வமும் அகம்பாவமும் உடையவர்கள். 

அங்காரகன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் கொஞ்சம் சூடானவர்கள். 

சுய சுதந்திரத்தை அதிகமாகவே விரும்புவர்கள். 

மிகவும் சுறு சுறுப்பாக இயங்குபவர்கள். 

எதையாவது சாதிக்க விரும்புவர்கள். 

9 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

ரத்தின வேட்டை.

அன்று ஒரு அமாவாசை நாள். காலையில் சீக்கிரமே சிற்றுண்டி முடித்து விட்டு தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு, கிளம்ப தயாராகி விட்டான் கண்ணன். கணேசன், தாமோதர், குமார், செந்தில், ரமேஷ் என ஒரு கூட்டமாக கிளம்பி விட்டார்கள். அனைவரும் தனது வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டும் என்பதால், கண்ணன் தனது வீட்டின் முன்பிருந்து சாலையினை வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தான்.
2000 ம் ஆண்டு பிறந்து விட்டது. ஆனாலும் அப்போதும் கூட இவர்களின் ஊரில் மஞ்சள் பை கலாச்சாரம் போகவில்லை. அவரவார்களுக்கான உணவு நீர் ஆகியவைகள் அவர்களே கொண்டு வர வேண்டும் என பேசியிருந்தார்கள். அர்ஜுனன் அண்ணாவிடம் புகைப்பட காமிரா இருந்தது. அதற்கு ஒரு பிலிம் ரோல் வாங்கி ரெடியாக வைத்திருந்தார்கள். ரோட்டில் இருந்து நண்பர்களின் சிக்னல் கிடைக்கவே, உடனடியாக கண்ணன் கிளம்பினான்.
வழியில் ஒரு ஊரில் ஆலமரம் இருந்தது. அதன் அடியில் செதுக்கப் படாத வெள்ளை பாறையினை நிற்க வைத்து இருந்தார்கள். அது அசப்பில் விநாயகர் போலவே இருந்தது. அங்கே இறங்கி, ஒரே ஒரு வைரக்கல் கிடைத்து விட்டால் பெரிய பணக்காரன் ஆகிவிடலாம் என வேண்டிக் கொண்டு கிளம்பினார்கள்.
சுமாராக 7 கிமீ சென்று இருக்கலாம். செம்மண் பூமியாக இருந்த பாதை திடீரென, சரளை & கூலங்கற்கள் கொண்ட வெண்ணிற தன்மை கொண்ட பூமியாக மாறியது. இந்த நிலப்பரப்பின் மாற்றம் ஆச்சரியம் தந்தது. நெருங்கி விட்டோம் என்ற மகிழ்ச்சி அனைவரிடமும் தெரிந்தது.
"தாத்தா, இங்கே ரத்தினக்கல் எல்லாம் வெட்டி எடுப்பங்கலாமே அந்த இடம் எங்கே உள்ளது" என ஒரு மாடு மேய்க்கும் நபரிடம் வழி கேட்டு சாலையில் இடது பக்கம் உள்ள ஒரு வண்டி பாதையில் சைக்கிளை விட்டார்கள். உள்ளே மாடு மேய்த்த இன்னொருவர் "பசங்களா இத்தனை பேரு கும்பலா வந்திருக்கீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா. அங்கே குவாரி தொண்டுண பெரிய பள்ளம் இருக்கு" என ஜாக்கிரதை கூறி விட்டு சென்றார்.
மணி 10க்கு மேல் இருக்கும். யாரிடமும் கடிகாரம் இல்லை. (அப்போது மொபைல் என ஒன்று உள்ளதே இவர்களுக்கு தெரியாது.) சைக்கிளை ஒரு வெப்ப மரத்தடியில் நிறுத்தி விட்டு ரத்தின வேட்டையில் இறங்கலாம் என முடிவு செய்தனர்.
போன உடனேயே, பெரிய ரத்தினங்கள் குவிந்து கிடக்கும் அள்ளிக் கொண்டு வரலாம் எனும் எண்ணத்தில் கல் (மண்) விழுந்தது. அங்கே உள்ள அனைத்து பாறைகளும் மின்னின. கற்களும் ஜொலித்தது. ஆனால் அது தரமான ராசிக் கற்கள் அல்ல.
திடீர் என தாமோதர் கத்தி கூச்சல் போடவே அனைவரும் சத்தம் வந்த திசையினை நோக்கி ஓடினார்கள்.
தொடரும்...

8 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

பக்கத்து வீட்டில் இருந்த தனது சித்தப்பா தந்த அய்யூப் அவர்களின் ராசிக்கல் பற்றிய புத்தகத்தை மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படித்ததன் மூலமாக ராசிக்கல் பற்றிய புரிதல் அதிகரித்துக் கொண்டே போனது கண்ணனுக்கு...

ஜோதிடர் லிங்கம் அவர்களின் சகோதரர் பாமாண்டம்பாளையம் பகுதில் உள்ள ஆடுமாடு மேய்ப்பர்கள் பொறுக்கி எடுத்து வரும் வண்ண வண்ண கற்களை வாங்குவார்கள். அது ரத்தினங்களா கண்ணாடியா என சோதிப்பார்கள். கல்லில் மஞ்சள் நீரினை விட்டு அதில் ரத்தினத்தை தேய்த்து பார்க்க வேண்டும். அப்போது அது சிவக்காமல் அப்படியே இருப்பது ரத்தினத்தின் குணமாக உள்ளதாக கூறுவர். சுண்ணாம்பு சத்துவம் அதிகமுள்ள கற்கள் பட்டை தீட்ட முடியாது என்பதால் வாங்க மாட்டார்கள்.
கண்ணனுக்கு தனது 21 + வயதுகளில் ராசிக்கற்களின் மீதான மோகம் மிக அதிகரித்தது. அங்கேயுள்ள கிராமவாசிகள் எப்படி கற்களை தேடுகிறார்கள் என்பது பற்றி சில கதைகள் உள்ளது.
(அதற்கு முன்னர் பாமாண்டம்பாளையம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும். இது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பரமத்தி-வேலூர் ன் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். 2010 ம் ஆண்டில் மத்திய அரசால் பிளாட்டினம் உள்ளதா என ஆராய பெரிய அளவில் குழு வந்தது. அதற்கும் மேலாக சந்திராயன் பரிசோதனைக்காக சந்திரனை ஒத்த மண் இங்கிருந்தே எடுக்கப்பட்டது. இந்த பகுதி முழுக்கவே உலகத்தரமான சந்திரகாந்தகல் கிடைக்கும். இது பற்றியெல்லாம் கண்ணனுக்கு அப்போது தெரியாது.)
1990 க்கு முன்பு வரை பாமாண்டம்பாளையம் சுற்றியுள்ள கிராம மக்கள் அந்த ஊரில் அஸ்திவாரம் ஏதுமற்ற 10-15 அடி நீள அகலமுள்ள ஓலை குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்வார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த குடிலின் உள்ளேயுள்ள மண்ணை ஐந்தடி வரைக்கும் தோண்டி சலிப்பார்கள். அப்போது அதிலிருந்து கிடைக்கும் வண்ண கற்களை எடுத்து வைத்துக்கொண்டு விடுவார்கள். பின்னர் குடிசையினை தள்ளி வைத்துக்கொண்டு இன்னும் ஒரு குழியினை தோண்டி சலித்த மண்ணை முன்பு தோண்டிய குழியினை நிரப்புவார்கள்.
மேற்கண்ட படி கிடைத்த கற்களை கரூர் ல் ரத்தினங்களுக்கான வார சந்தையில் விற்று விடுவார்கள். இந்தியாவெங்கும் இருந்து பல வியாபாரிகள் இங்கு வந்து ரத்தினங்கள் வாங்குவதுண்டு. 1990 + வரை கூட கரூரில் குறிப்பிட்ட ஒரு வீதியில் பொறுக்கி எடுத்த கற்களை சிறுசிறு குவியலாக வைத்து விற்பனை செய்வார்கள். இப்போது வீதியில் விற்பதில்லை. ஜோதிடர்களிடம் அல்லது ரத்தின வியாபாரிகளிடம் நேரடியாக விற்று விடுகிறார்கள்.
கண்ணனும் கணேசனும் இதுபற்றி நிறைய பேசி வந்தார்கள். சரி ஒரு நாள் நாமும் பாமாண்டம்பாளையம் சென்று பார்த்து விடலாம் என முடிவெடுத்தார்கள். இந்த காலகட்டத்தில் கற்களின் தரம் வண்ணம் கடினத்தன்மை விலை நிர்ணயம் பற்றிய பல்வேறு நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொள்ள வசதியாக இருந்தது.
ரத்தின வேட்டைக்கான பாமாண்டம்பாளையம் பயணம் மிகவும் அற்புதமான அனுபவத்தை தந்தது.
தொடரும்...

7 - ஆரம்பம் ஆவது எண்ணாலே...

கண்ணன் கூறியபடி நடக்காமல் போனது. உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்தியா வெளியேறி விட்டது. அதன்பின்னர் தான் ஒரு உண்மை புரிந்தது. கேள்வி வாக்கியத்தை வைத்து பிரமிடு கணக்கு செய்வது சரிவராது. அதே கேள்வியின் ஒரு வார்த்தை மாறினாலும் கூட கணக்கு மாறி விடுகிறது என்பதை அதன் பின்னர் தான் கவனித்தான். அதன் பின்னர் 1996 ன் இறுதி மாதங்கள் வரை மீண்டும் மீண்டும் பல்வேறு பெயர்களை நியூமராலஜி படி ஆராய்ந்து வந்த கண்ணன் ஏதோ புரிந்தது போல உணர்ந்தான். பெயருக்கும் அதன் பிரமிடு எண்ணுக்குமான தொடர்பை உணரமுடிந்தது.

இந்த கணக்குகளை போடுவதற்கு நிறைய நோட்டுகள் தேவைப்பட்டது. இது பெரிய செலவாக பட்டது அவனுக்கு. இதனால் கண்ணனின் கைத்தறி தொழில் பெரிய அளவில் வருமானம் இழப்பு உண்டானது. இருந்தாலும் கூட எண்கணிதம் மீது இருந்த ஆர்வம் குறையவில்லை.
இதன் இடையே ஜோதிடம் சார்ந்த பல்வேறு தகவல்களை படிக்க தொடங்கினான். கண்ணனின் பொருளாதாரம் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க அனுமதிக்காத அந்த காலகட்டத்தில், அவனின் தாத்தா வாங்கி வைத்திருந்த சில அற்புதமான ஜோதிட புத்தகங்கள் இவனுக்கு உதவியது. இதில் முக்கியமானது குடும்ப ஜோதிடம் "தி லிட்டில் பிளவர் கம்பெனி" வெளியீட்டில் வந்த (முதல் பதிப்பு) புத்தகம் இவனுடைய தாத்தாவிடம் இருந்தது.
அந்த ஒரு புத்தகத்தையே மீண்டும் மீண்டும் படிப்பதும் அதில் உள்ள ஜாதகம் கணிக்கும் கணிதத்தை பல்வேறு தேதிகளை வைத்து போடுவதும் என கண்ணனின் ஜோதிட பயணம் தொடர்ந்தது.
ஆண்டுகள் சில கடந்தன இது 1999. 2000 ஆண்டு திறக்க உள்ளதை கொண்டாடும் வகையில் உள்ளூரில் உள்ள சிறுவர்கள் இளைஞர்கள் இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மேஜிக் ஷோ ஒன்றை ஏற்பாடு செய்தனர். இதில் மேஜிக் நிபுணராக பிளேடுகளை விழுங்கி அதை சரமாக எடுப்பது போன்ற அபாயகரமான பல்வேறு மேஜிக் கலை செய்து அசத்தினான் கண்ணன். இதனால் ஊருக்குள் தனது 20வது வயதிலேயே நல்ல அறிமுகம் கிடைத்தது.
அந்த காலகட்டத்தில் அறிமுகமான அற்புதமான நண்பன் முருகன். மூன்று ஆண்டுகளாக நின்று விட்டிருந்த எண்ணியல் கலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவிய எண்கணித ஜோதிடர் முருகன். 1995இல் கொடுமுடியில் வாங்காமல் விட்ட பண்டிட் சேதுராமன் அவர்களின் அதிர்ஷ்ட விஞ்ஞானம் புத்தகமாகட்டும், ஹீப்ரு பிரமிடு நியூமராலஜிக்கான எண்ணமங்கலம் பழனிச்சாமி அய்யாவின் புத்தகமாகட்டும், இன்னும் பல எண்ணியல் சுட்சுமங்களை பற்றிய அரிய பொக்கிஷங்களாகட்டும் அனைத்தையும் ஒரு சேர கண்ணனுக்கு முருகன் கற்றுக் கொடுத்தார்.
ஏற்கனவே எண்ணியல் கலைக்கான ஆய்வில் இணைந்து செயல்பட்ட கணேசனுடன், இந்த இருவருக்கும் உயர்நிலை எண்கணிதத்தின் சூட்சுமங்களை கற்றுத் தந்த முருகனும் இணைந்து ஒரு பெரிய குழுவாக செயல்பட்டார்கள். கடந்த நான்காண்டுகளில் ஜோதிட கணிதம் ஜோதிட பலன்கள் எப்படி கூறுவது என்ற நுணுக்கங்களையும் கண்ணன் தெரிந்து வைத்திருந்தான்.
இப்பொழுது தானே 20 வயது ஆகிறது. இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஜோதிடராக மாறிவிடலாம் என, நண்பர்களுடன் கூறிக் கொண்டிருந்த கண்ணனுக்கு, ஜோதிடர் லிங்கம் அவர்களின் மூலம் ஜோதிடத் துறைக்கான அடுத்த வாசல் திறந்தது. "பரபரப்பான நாட்களில் தன்னிடம் ஜோதிட புத்தகம் எழுதுபவர்களுக்கு தன்னால் எழுதிக் கொடுக்க முடியவில்லை எனவே நீ இதனை எழுதி தர முடியுமா?" என ஜோதிடர் லிங்கம் கண்ணனிடம் கேட்க அந்த வாய்ப்பை உடனடியாக அவன் ஏற்றுக் கொண்டான்.
இதன் மூலமாக ஒரு ஜாதகத்தை கணிப்பதற்கு மற்றும் அஷ்டவர்க்கம், திசா புத்தி, ஷட்பல கணிதம் போன்ற பல்வேறு கணிதங்களை தானாக போட்டு பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்பு கண்ணனுக்கு கிடைத்தது. மேலும் ஜோதிடர் லிங்கம் மூலமாக அதிர்ஷ்ட கல் பற்றிய அறிமுகமும் அப்போது கண்ணனுக்கு கிடைத்திருந்தது.
ராசிக்கல் பற்றிய அனுபவங்கள் வாழ்க்கையில் உண்டாக்கப் போகும் பிரச்சனைகள் பற்றியெல்லாம் அப்போது கண்ணனுக்கு தெரிந்திருக்கவில்லை.
தொடரும்....