25 July 2015

ஜிர்கான் (வைரத்தின் மாற்று கற்கள்) zircon

ஜிர்கான்

         zircon stones எனப்படும் இந்த கற்கள் பளபளப்பில் வைரத்தினை போன்றே பிரகாசிக்கும். மற்ற கற்களை விட இதன் அடர்த்தி அதிகம். (zicon=4.7, diamond=3.62) எனவே எளிதில் உடையாது. ஜிர்கான் பலநிறங்களில் கிடைத்தாலும் நிறமற்ற கற்களே வைரத்திற்கு மாற்றாக கருத படுகிறது. மற்றவை ரத்தினமாக கருதப்படுவது இல்லை. 



கிடைக்கும் இடங்கள்.
     வியட்நாம், தாய்லாந்து, இலங்கையில் அதிகம் கிடைக்கும் இந்தவகை கற்கள் மதிப்பு மிக்கவைகளாகும்.

யார் அணியலாம்?
1. வைரம் அணிய நினைக்கும் அனைத்து நபர்களும் அணியலாம்.
2. 5, 14, 23 ம் தேதியினரும், விதி எண் 5 வருபவர்களும் அணியலாம்.
3. ரிசபம், துலாம் இராசி, இலக்கினமாக வரும் அன்பர்கள் அணிந்து ஆனந்தம் அடையலாம்.
4. சுக்கிர திசை, புத்தி நடப்பில் உள்ள அனைவரும் அணியலாம்.

அணிபவர்கள் அடையும் நன்மைகள்.
1. வாதம், பித்தம், கபத்தினை சமன் செய்து ஆரோக்கியத்தினை உறுதியாக்கும்.
2. மனதுக்கு உற்சாகம் தரும்.
3. உடல் அழகினை அதிகரிக்கும்.
4. வைரத்திற்க்கான அனைத்து பலன்களையும் அடையலாம்.

குறிப்பு:
அதிகம் போலி கற்கள் புழங்கும் கற்களில் ஜிர்கான்-ம் ஒன்று. அமெரிக்கன் டைமண்ட் எனப்படும் செயற்கை கற்களை ஜிர்க்கான் என கூறி விற்று விடுகிறார்கள். எனவே ஜிர்கான் வாங்கும் அன்பர்கள் நன்கு விசாரித்து வாங்கவும்.
ஜிர்க்கான், வாங்க முடியாத பட்சத்தில் வெள்ளை புஷ்பராகம், அல்லது வெள்ளை குவார்ட்ஸ் கற்களை அணிந்து பயன் அடையலாம்.

மேலும் விபரங்களுக்கு: க்ளிக்

20 July 2015

தச தானம்

எந்த ஒரு பூஜையும் தானம் அளிப்பக்கும் பொது தான் பூரணம் அடைகிறது. தானங்களில் பலவிதங்கள் இருந்தாலும் அனுபவத்தில் அதிக பலன் தரக்கூடிய, சிறப்பான தானம் என பெரியோர்களால் விரும்பும் தானம் தசதானம் ஆகும். ஒரே சமயத்தில் தகுதி வாய்ந்த ஒருவருக்கு, பத்து விதமான பொருள்களை தானம் அளிப்பதே தச தானம் ஆகும். இதனால் பலவிதமான நற்ப்பலன்களை கர்த்தா அடைகிறார்.  

தச தானம்செய்ய உகந்த பொருள்களும், 

அதனால் பெரும் பலன்களும்... 



மஞ்சள் தானம்=நோய் நீங்கும்
குங்குமம் தானம்=மாங்கல்ய பலம்
சந்தனம் தானம்=நினைத்தது நடக்கும்
வஸ்த்திரம் தானம்=ஆயுள் விருத்தி
பழங்கள் தானம்=தரித்திரம் நீங்கும்
நெய் தானம்=மகாலட்சுமி வசியம் ஏற்ப்படும்
நெருப்பு தானம்=நோய் நீங்கும்
மஹா கூஷ்மாண்ட தானம்=ஆயுள் விருத்தி உண்டாகும்
இரும்புசட்டி தானம்=ஆபத்து நீங்கும்
தில தானம்=ஆயுள் விருத்தி உண்டாகும்
கண்ணாடி தானம்=ஜனவசியம்  ஏற்ப்படும்.
மஹா தானம்=சர்வ ஜெயம் உண்டாகும்
பசு தானம்=தெய்வ அருள் உண்டாகும்
நவதானிய தானம்=நவக்கிரக தோஷம் நீங்கும்
அன்னதானம்=சகல பாவங்கள் விலகும்
பூமி தானம்=சகல ஐஸ்வரியம் கிடக்கும்
தண்ணீர்  தானம்=சகல தோஷம் விலகும்
தேங்காய் தானம்=சகல பாவங்கள் விலகும்
தேன் தானம்=புத்திர பாக்கியம் கிடைக்கும்

நாக கவசம் naga kavasam

ஜாதகத்தில் லக்னம், இரண்டாம் பாவத்தில்  ராகு கேது உள்ளவர்கள், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள், மரற்றும் நாக தெய்வங்களின் அருளினை பெற விரும்புபவர்கள், கீழ்கண்ட நாக கவசத்தினை பாராயணம் செய்து பயன் பெறலாம். மேலும் சமஸ்கிருதத்தில் நாக துதியும் கொடுக்கப்பட்டு உள்ளது. அன்பர்கள் படித்து பயன் அடைவீர்களாக!!

  

நாக கவசம்


நாக தெய்வக் கவசத்தை நானும் பாடிப் பலன் பெறவே
பாகம் பெண்ணுருக் கொண்டானின் பாலன் கணபதி காப்பாமே!

வணங்கும் பக்தர்க் கருளுகிற வளந்தரு நாகராசவே
இணக்கமுடனே கிழக்கினிலே எம்மைக் காப்பாய் தெற்கினிலே
சுணக்க மின்றிச் சுகந்தருவாய் சோதி மறையும் மேற்கினிலே
மணக்க வந்து காப்பாயே வடக்கிலும் காத்து வளந்தருவாய்

தாயாய் வந்து காத்திடுவாய் தரணியில் மேல் கீழ் ஆகாயம்
நீயே செல்வம் தனைத்தந்து நிலையாய் என்றும் காத்திடுவாய்
சேயாய் எம்மைப் பாராட்டி சிரசைக் காப்பாய் நெற்றியோடு
வாயைப் புருவ நடுவினையும் வடிவுடன் கண்கள் தமைக் காப்பாய்.

கன்னம் காது நாசியுடன் கன்னல் மொழிதரு நா; பற்கள்
மின்னும் நாகராசாவே விரைந்து காப்பாய் முகங்கழுத்தும்
இன்னல் தீர்க்கும் எழில் கோவே இதமாய் காப்பாய் தோள், கைகள்
மின்னல் வேகம் உடையோய் நீ மேன்மையுடனே காத்திடுவாய்.

முலைகள் மார்பு நெஞ்சினையும் முதுகு வயிறு நாபியையும்
இலையோ என்னும் இடுப்பினையும் இருப்பிடத்துடனே குறிகளையும்
நிலையில் உயர்ந்தோய் காப்பாய் நீ நீள்தொடை முழந்தாள் ஆடுசதை
மலையே கால்நகம் கனைக்கால்கள் மகிழ்ந்தே காப்பாய் காப்பாயே!

எங்கள் உரோமம் நரம்பினையும் எலும்பு தசைகள் ரத்தம் தும்
திங்கள் ரவி உள்ளவரைத் தினமும் காப்பாய் இரவு பகல்
மங்கும் நேரம் மலர் நேரம் மருளும் நேரம் மகில்நேரம்
அங்கம் அனைத்தும் காப்பாயே! அரவத் தேவே காப்பாயே!

எட்டுத் திசையிலும் காப்பாயே எங்கள் பகையை அழிப்பாயே
துட்டப் பேய்கள் செய்வினைகள் தொடாது ஓடச் செய்வாயே
பட்டுப் போகச் செய்கின்ற பிணிகள் எதுவும் அணுகாது
விட்டு விலகச் செய்வாயே விடங்கள் ஏறா தருள்வாயே!

விண்ணவர் ஏத்தும் வேலவர்க்கும் விக்னம் அகற்றும் விநாயகர்க்கும்
எண்ணிய கருமம் முடிக்கின்ற எங்கள் இறைவன் இறைவிக்கும்
புண்ணியம் சேர்க்கும் மாலவர்ற்கும் பணிகள் புரியும் நல்லரவே
எண்ணிய தெல்லாம் ஈமக்கீந்து எங்கும் எதிலும் காப்பாயே

சொல்லிய சுப்பிரமணியனிவன் செந்சொல் கவசம் தினம் சொன்னால்
நல்ல புத்திர பேறு தரும் நாக தோஷம் நீங்கி விடும்
இல்லற சுகமும் இயைந்து வரும் எல்லா வளமும் மிகுந்து வரும்
வல்லன வெல்லாம் கைகூடும் வாழ்வு வளமும் பெருகிவிடும்.

 நாக துதி
ஓம் அனந்தம் வாஸுகிம்
சேட்சம் பத்மநாபம்
ஸகம்பலம் ஸங்கபாலம்
த்ருதராஷ்டிரம்: தட்சகம்
காளியம்ததா: ஏதானி நவ
நாமானி சமகாத்மனாம்
சாயங்காலே படேநித்யம்
ப்ராதாகாரல விசேஷதக
நஸ்யவிஷ பயம் நாஸ்தி

ஸர்வத்ர விஜயூபவேத்

09 July 2015

சந்திர காந்த கல் moon stone

 சந்திரகாந்த கற்கள்





இந்த கற்களின் ஒளி பட்டைகள் மிகவும் அழகாக இருக்கும். வைடூரியம் போன்று சுழலும் ஒளி தெரியும்.இது கீழ் புறம் தட்டையாக மேல்புறம் மளமளப்பாக இருக்கும். இந்த சந்திரக்காந்த கற்கள் பார்ப்பதற்கு வெண்மையாக, பார்வைக்கு குளிர்சியாக சந்திரனை போல தெரியும். ரோமானியர்கள் இதனை லுனாரிஸ் (lunaris) என கூறி மகிழ்வார்கள்.

மூன்ஸ்டோன் அதிகமாக இலங்கையிலும், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நமது நாட்டிலும் அதிகம் கிடைக்கிறது. மூன் ஸ்டோன் கற்கள், லேசான பச்சை, நீலம், பழுப்பு  வண்ணங்களிலும் கிடைக்கிறது. இதில் பழுப்பு நிறம் கொண்ட கல் தரம் குறைந்தவைகளாக கருதப்படும். 

    சந்திரகாந்த கற்கள் அணிபவர்கள் பெரும் நன்மைகள்


இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். 
பொருள்வரவு தடையின்றி கிடைக்கும். 
கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். 
ஜலகண்டதில் இருந்து காக்கும்.
நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகுதல் சரியாகும்.
தியானம் போன்றவற்றில் மனம் ஒருநிலை அடைய வைக்கும்.



மருத்துவ குணங்கள்

தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் கோளாறுகளை சீராக்கும்.
இருதய கோளாறுகளை கட்டுப்படுத்தும்.
வயிற்று  பிரச்சனைகளை நீக்கும்.
குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். 
மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.

யாரெல்லாம் அணியலாம் ..?    
   
2,11,20,29   ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.
கடகம் ராசி, இலக்கினம் உடையவர்கள் அணியலாம்.
நன்முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு  மாற்றாகவும் அணியலாம்.
குறைந்த பட்சம் 5காரட் முதல் எவ்வளவு பெரிதாகவும் அணியலாம். விலை பற்றி அறிய...

விலை பட்டியல் price list

1 அற்புத நியூமராலாஜி · Post ஜோதிடம் மற்றும் அதிர்ஷ்ட ரத்தினம் கட்டண விலை விபரங்கள். விபரங்கள் Posting as Kanna astro Update Revert to draft Preview Close ComposeHTML Link
GEMS PRICE LIST

விலை மற்றும் கட்டண விபரம்

விலை நிலவரம் 01-12-2017 அன்று புதுப்பிக்கப் பட்டது. கற்களின் எடை, தரத்திற்கேற்ப விலை மாறும்.

இரத்தினம் பெயர்எடைவிலைதேவை
மாறுதலுக்கு உட்பட்டதுமாறுதலுக்கு உட்பட்டதுகுறைந்த பட்ச அளவு
மாணிக்கம் (சிலோன்) .200 mg(1ct) 15,0002 to 3ct
மாணிக்கம் (பேங்காங்) .200 mg(1ct) 8,0002 to 3ct
மாணிக்கம் (சாதாரண) .200 mg(1ct) 1,0002 to 3ct
முத்து(இயற்கை) .200 mg(1ct)4,5003 to 5ct
பவளம்(மோதிரம் செய்ய) .200 mg(1ct)3,0003 to 5ct
பவளம்(மாலை) .200 gm(1ct) 1,00050ct மாலை
மரகத பச்சை(ஸ்பெசல்) .200 mg(1ct) 10,0002 to 3ct
மரகத பச்சை(ஆரம்ப தரம்) .200 mg(1ct) 6,0001 to 2ct
கனகபுஷ்பராகம்(பேங்காங்) .200 mg(1ct)5,0002 to 3ct
கனகபுஷ்பராகம்(சிலோன்) .200 mg(1ct) 12,0002 to 3ct
வெள்ளை புஷ்பராகம்(சிலோன்) .200 mg(1ct) 5,0002 to 4ct
ஜிர்கான்(ஒரிஜினல்) .200 mg(1ct) 7,0002 to 3ct
நீலம்(பேங்காங்) .200 mg(1ct) 5,0002 to 3ct
நீலம்(சிலோன்) .200 mg(1ct) 10,0002 to 3ct
கோமேதகம்(சிலோன்) .200 mg(1ct) 4,0003 to 5ct
கோமேதகம்(இந்தியா) .200 mg(1ct) 7503 to 5ct
வைடூரியம்(கிரிசோபெரில்) .200 mg(1ct) 15,0001 to 2ct
வைடூரியம்(குவார்ட்ஸ்) .200 mg(1ct) 1,0003 to 5ct
மூன்ஸ்டோன்(நூல் கல்) .200 mg(1ct) 1,5003 to 10ct
மூன்ஸ்டோன்(அலை) .200 mg(1ct) 6003 to 10ct
எமிதிஸ்ட்() .200 mg(1ct) 1,0003 to 5ct
எமிதிஸ்ட்(குடிபழக்கம் நீங்க) 2ct x 27nos 11,00050ct மாலை
டர்க்காய்ஸ்(திருமணதடை நீங்க) .200 mg(1ct) 7503 to 5ct
ஸ்படிகம்(மணி) 7 to 8mm x 54nos 3,000வெள்ளி மாலை
ஸ்படிகம் டைமண்ட் கட் 7 to 8mm x 54nos 4,500வெள்ளி மாலை
கோமதி சக்ரா(வெள்ளை&சிவப்பு) 1 கிராம் ரூ100 700 to 3,00011 சக்ரா
கோமதி சக்ரா பெரியது(சிவப்பு) 1 கிராம் ரூ100 1,500 to 4,0001 சக்ரா
கொடுமுடி பரிகாரம் பூஜா சாமான்& அய்யர் உட்பட Rs 4,000 மறைமுக கட்டணம் கிடையாது
ஜோதிட ஆலோசனை & Rs 500 ஒரு ஜாதகம்
பெயர் திருத்தம் செய்ய அட்வான்ஸ் முறை Rs 5,900 ஒரு பெயர் மட்டும் தரப்படும்
பெயர் வைக்க அட்வான்ஸ் முறை Rs 4,100 மூன்று பெயர்கள் தரப்படும்



எங்களிடம் ஒரிஜினல் ராசிகற்கள் மட்டுமே கிடைக்கும்.

கற்களின் தேவைக்கு கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

ராசிக்கற்கள் அதற்க்கு உண்டான முழு தொகையினை எமது வங்கி கணக்கில் செலுத்திய பின்னரே தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.


கேஷ் ஆன் டெலிவரி இல்லை



அனைத்து ராசிக்கற்களும், சுத்தி கரணம் செய்து, உங்களுக்காகவே பிரத்தியேகமாக ப்ரோகிராம் செய்து, நாள்கள் கழித்தே உங்களுக்கு அனுப்பப் படுகிறது. இதனை அன்பர்கள் கவனத்தில் கொள்ளவும்.

ராசிக்கற்களை மோதிரம் (அ) டாலராக அணியலாம்.
மோதிரம் செய்ய கூடுதலாக 5 நாட்கள் ஆகும்.

கற்களுக்கு ஜெம் லேப் டெஸ்ட் தேவைபட்டால் மேலும் 5 நாட்கள் கூடுதலாக ஆகலாம். ஜெம் லேப் டெஸ்ட்-க்காக தனி கட்டணமாக ரூ1000 கூடுதலாக ஆகும். எமது வங்கி விபரம்...


தொடர்புக்கு...
V.V.பொன்தாமரைக்கண்ணன் DNS., DHA.,
ஸ்ரீராம் ஜோதிட கேந்திரா
கரூர் மெயின் ரோடு
கொடுமுடி 638 151
Erode.dt 
Mob:7667745633
Post settings Labels விலை பட்டியல் Published on 16/12/2017 11:31 India Standard Time Links Location Options

08 July 2015

மெலூகாவின் அமரர்கள், ஒரு அற்புத வரலாற்று புதினம்.

நிச்சயம் நாம் படிக்க வேண்டிய புத்தகம்.....


கி.மு 1900 - காஷ்மீர் - ஸ்ரீநகர்.

- படுக்கையறையுடன் இணைக்கப்பட்ட குளியலறையில் சோப்பு தேய்த்துக் குளிக்கிறார்... சிவா... மஹாதேவ்!

- பின் பருத்தி வேட்டியை அணிந்து கொள்ள, அவரது புலித்தோல் ஆடை hygienic காரணங்களுக்காக சுத்தம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.

இப்படி ரகளையான கற்பனைகளுடன் துவங்கும் நாவல். மெலூகாவின் அமரர்கள்

வானத்தின் வர்ணனையுடன், நீர்க் கரையில் இளம் கதாநாயகனுடன் துவங்கும் கதை.... மானசரோவரின் கரையில் சூரிய அஸ்தமனத்தை தீவிர சிந்தனையுடன் காணும் சிவாவுடன் முதல் காட்சி விரிகிறது.

கைலாஷ் மலையடிவாரத்தில், ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்வதே கதைக்களம். பயங்கொள்ளும் கோபம், தீவிரக் காதல், கடும் வீரம், அட்டகாச நடனம், தீயதை அழிக்கும் சக்தி... அனைத்தையும் உள்ளடக்கிய மஹாதேவ், கடவுளாக இல்லாமல் நம்மைப்போல் இரத்த சதை மனிதனாக இருந்தால்... இக்கற்பனையே இக்கதையின் கரு.

திரிசூலத்தின் முன், ஜடாமுடியுடன், எஃகு தேகத்துடன், தோள்பட்டைகளில் தைக்கப்பட்ட நீண்ட போர் வெட்டு காயங்களுடன் சிவா... இப்பிம்பத்துடன் முதல் காட்சியை மனத்திரையில் விரித்தால்... நமக்குள் ஒரு ஆகர்ஷண சக்தி ஊற்றெடுக்கத் தொடங்குகிறது.

பின்னாளில், இவர் தலைமையில் சூர்யவம்ச சேனை, சந்திர வம்சத்துடன் போரில் மோதும் போது... ‘ஹர் ஹர் மஹாதேவ்... ஹர் ஹர் மஹாதேவ்...’ என அடிநாதத்தில் கூக்குரலிடும்போது, அந்த ஆகர்ஷண சக்தி நம்முள் பிரவாகமெடுக்கிறது.

அமிஷ். இவர்தான் நூலாசிரியர். கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது IIM பட்டதாரி. சிவ கதையின் அனுபவத்தினால், தான் வேறு மனிதனாக உணர்கிறேன் என முன்னுரையில் சொல்கிறார். உண்மைதான். படிக்கும் நமக்குள்ளும் சில மாற்றங்கள் இயல்பாக நிகழ்கின்றன. தக்க வைப்பது நம் பொறுப்பு.

புராணம், வரலாறு, நவீன உலகம்... மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிறது. ராமயணப் பாத்திரங்களை நவீனப்படுத்தியிருப்பார் ராவணன் படத்தில் மணிரத்தினம். அது போலவே சதி (பார்வதி), தக்கன், நந்தி, வீரபத்திரன், பர்வதேஸ்வர், பிரகஸ்பதி (இவர் இங்கே விஞ்ஞானி!)... என அனைத்து பாத்திரங்களும் சூப்பர்.

கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள். ராமனின் சோமபானம் சர்ச்சைக்கு வித்திட்டது நினைவிருக்கும். ஆனால் அது இங்கே சோம்ராஸ் மருந்தாக, ஆயுளை நீட்டும் மருந்தாக வருகிறது. (தக்கனின் வயது 185!)

ராமனால் அனைத்து சூர்யவம்ச பிரஜைகளுக்கும் கிடைக்கச் செய்யப்பட்ட இம்மருந்திற்கு முக்கிய மூலப்பொருள் சரஸ்வதி நதிநீர். நதியை சந்திரவம்சிகள் தடை செய்ய, போர் மூள்கிறது. தோல்வியடையும் சந்திரவம்சி தீவரவாதத் தாக்குதல்களில் இறங்குகிறார்கள். அடடா! இந்தியா-பாக் பிரச்சனையைக் கூட நுழைத்து விட்டார் ஆசிரியர் (பின்னே காஷ்மீரில் வேறு கதை துவங்குகிறதே!).

தீவிரவாதத் தாக்குதல்களில் திணறும் சூர்யவம்சி, நீலகண்டர் அவதரிப்பார் என காத்திருக்க, சோம்ராஸ்-ஐப் பருகும் சிவனின் கழுத்து நீலமாகிறது! அப்போது ஆரம்பிக்கும் கதை மிக வேகமாக நம்மை கதை காலத்துடன் கட்டிப் போட்டு விடுகிறது. கதையோடு பிணைந்து வரும் சிவாவின் காதலும், போர்க்களத்தில் சதியிடத்து (பார்வதி) அது கனியும் விதமும் அழகு.

தன்னை சாதாரண மனிதனாகவே கருதும் சிவா, சந்திரவம்சியை வீழ்த்தியபின், பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி, அயோதி இராமர் கோவிலில் மஹாதேவனாக உணர்ந்து பயணத்தைத் துவங்கும் போது ‘தொடரும்’ என நாவல் முடிகிறது. ஆம், இது இன்னும் இரு பகுதிகள் கொண்ட தொடர் நாவல் - நாகர்களின் ரகசியம், வாயுபுத்திரர் வாக்கு, படித்து பரவசம் அடையுங்கள்.