19 February 2015

வாஸ்து சாஸ்த்திரப்படி ஜன்னல் அமைப்பது எப்படி?


வாஸ்து: ஜன்னல் அமைக்கும் முறை


ஓவ்வொரு மனிதனும் நோயற்ற வாழ்வு வாழ்வதற்குத் தூய்மையான காற்றும் சூரிய ஒளியும் மிக முக்கிய பங்கு ஆற்றுவது போல், ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் நபர்கள் வாழ்வில் சிறந்து விளங்க அந்த வீட்டிற்கு / கட்டடத்திற்குக் காற்றும் சூரிய ஒளியும் நன்கு உள்ளே வர வேண்டும். அப்படி வரவே நாம் ஜன்னல்கள் அமைக்கின்றோம்.

இவற்றை எவ்வாறு அமைக்க வேண்டும் எனப் பார்ப்போம்.


* ஒரு வீட்டில் / கட்டடத்தில் அமைக்கப்படும் ஜன்னல்கள் (Windows) உச்சத்தில் தான் அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குக் கிழக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு வடக்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்  
 
* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்குத் தெற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் கிழக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்

* ஒரு வீட்டிற்கு / கட்டடத்திற்கு மேற்கு பார்த்து அமைக்கப்படும் ஜன்னல் (Window), அந்த அறையின் வடக்கு சுவரை ஒட்டி அமைக்க வேண்டும்


* வடகிழக்கு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு திசையில் உள்ள ஜன்னல், 24 x 7 திறந்தே இருக்க வேண்டும். 

வாஸ்து சாஸ்திரப்படி தென் மேற்கு மூலையில் என்ன வரலாம், வரக்கூடாது?

தென்மேற்கு மூலை‌யி‌ல் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை!

வாஸ்து சாஸ்திரப்படி, தென்மேற்கு மூலையில் வர‌க் கூடியவை - வர‌க் கூடாதவை பற்றி இங்கு பார்ப்போம்.

தென்மேற்கு மூலையில் வரக் கூடியவை:



•              குடும்ப‌த் தலைவன் / தலைவி படுக்கையறை
•              மேல்நிலை தண்ணீர்த் தொட்டி (Over Head Tank)
•              பொருட்கள் சேமிக்கும் அறை (Store room)
•              பணப் பெட்டி வைக்கும் அறை

தென்மேற்கு மூலையில் வரக் கூடாதவை (உள் மற்றும் வெளி மூலைகள்):


•              சமையலறை
•              பூஜை அறை
•              பள்ளம் / கிணறு / ஆழ்துளைக் கிணறு
•              கழிவுநீர்த் தொட்டி
•              குளியலறை / கழிவறை
•              உள்மூலை படிக்கட்டு
•              வெளிமூலை மூடப்பட்டு, தூண்கள் போட்ட படிக்கட்டு.
•              படிக்கும் அறை
•              போர்டிகோ (Portico)
•              Inverter / EB-Box / Generator

 இதன் அடிப்படையில் உங்கள் வீடு அமைந்தால், அது உங்களுக்கு நன்மை விளைவிக்கும்.


வாஸ்து முறையில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி ( Over Head Tank ) அமைக்கும் முறை

மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை

கடந்த பல ஆண்டுகளாக நடத்திய நீர் பற்றிய ஆராய்ச்சியில், மனிதர்களுக்குத் தேவைப்படும் உயிர்ப்பாற்றலைக் கிரகித்து, அதனை மனிதர்களுக்கு வழங்கும் திறனைத் தண்ணீர் தன்னுள்ளே கொண்டிருப்பதால் உடல் நலத்தைப் பொறுத்தவரை தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. 

சக்தி ஊட்டப்பட்ட நீரில் குளிப்பது நன் மருந்தாகக் கருதப்படுகிறது. மனித உடம்பானது தோலின் மூலம் பிராண சக்தியை வெகுவேகமாகக் கிரகிப்பதாகக் கூறப்படுகிறது. பிராண சக்தியைப் பெற நீங்கள் ஒருநாள் முழுவதும் குடிக்கும் மொத்த நீர் இரண்டு லிட்டர் என்றால் பத்து நிமிடக் குளியலின் மூலம் அதே அளவு பிராண சக்தியைப் பெற முடியும். 
எனவே மிகுந்த சக்தி வாய்ந்த நீரைத் பயன்படுத்தி குடும்பத்தில் உள்ள எல்லோரும் நல்ல உடல் நலனைப் பெற ஒரு வீட்டில் / கட்டடத்தில் வசிக்கும் அனைவரும் ஆழ் துளை கிணறு மூலம் பெறும் நீரைத் தேக்கி வைக்க, அந்த வீட்டின் / கட்டடத்தின் மேல் தளத்தில் நீர்த் தேக்க தொட்டி (Over Head Tank) அமைப்பது உண்டு. அவ்வாறு அமைக்கப்படும் நீர் தேக்கத் தொட்டி சரியான முறையில் அமைக்க வேண்டும்.

* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.  


* ஒரு வீட்டில் / கட்டடத்தில் மேல் நிலை நீர் தேக்க தொட்டி அந்த வீட்டின் / கட்டடத்தின் வடகிழக்கு / வடமேற்கு / தென்கிழக்கு மூலையில் கண்டிப்பாக வரக் கூடாது.

17 February 2015

பிறந்த நட்சத்திரங்களுக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்

நமக்கு அருள் கொடுக்க எந்த நேரமும் தயாராக இருக்கும்  மிகவும் எளிமையாக அடையக்கூடிய சித்தர்களை நமது நட்சத்திரத்தினை வைத்து கண்டு பிடித்து அவர்களை சரண் அடைந்து வாழ்க்கையில் நலம் பெறுங்கள். தொடர்ந்து படியுங்கள்..... சித்தர்கள் திருவடியே சரணம்.



சித்தர்கள் என்பவர்கள் யார் சித்தத்தை அடக்கியவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலக இயக்கத்தை, பிரபஞ்சத்தை, இறை ஆற்றலை, உயிர் தத்துவத்தை, பிரபஞ்ச ரகசியத்தை என அனைத்தையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.

மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.

மிகக் கடினமான இந்த முறையைப் பின்பற்ற முடியாத நிலையில் வாழ்பவர்கள் என்ன செய்வது? வாழ்வில் ஏற்படும் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது? யார் உதவுவார்கள்? ஏனெனில், அவரவர் செய்த ஊழ்வினையை அவரவர்களே அனுபவிக்க வேண்டும் என்பது விதி. அதனை நிறைவேற்றத்தான் நவக்கிரகங்கள் செயல்படுகின்றன. சாந்தி, பரிகாரம் போன்றவை செய்தாலும், சில சமயங்களில் மனிதனின் கர்மவினை பலம் அதிகமாக இருக்குமானால், அவன் அவற்றை அனுபவித்தே ஆக வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமானால் அவ்வகைத் துன்பங்களிலிருந்து தப்பிப்பது எப்படி?. யார் உதவி செய்வார்கள்?

இது மாதிரி நேரத்தில் மனிதனுக்கு உதவி செய்வது சித்த புருஷர்கள் மட்டுமே!
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.

அவர்களின் கடைக்கண் பார்வைபட்டால், திருக்கரத்தால் ஆசிர்வதித்தால், மனிதனிடமிருந்து ஏதேனும் பொருளை வாங்கிக் கொண்டால், மனிதனின் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு, மாற்றுகிறார்கள் என்பது பொருள். அதன் பின் அம்மனிதனின் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஆனால் ஒன்று. அத்தகைய சித்தர்களின் அருளைப் பெற மனிதனுக்கு முதலில் வேண்டியது நல்ல தகுதி. தகுதியற்றோருக்கும், நல்லெண்ணம் இல்லாதவர்களுக்கும் சித்தர்கள் உதவ மாட்டார்கள்.

சித்தர்களைத் தியானித்தால், அவர்களின் திருவருள் கிடைத்தால், அவர்கள் நமக்கு குருமுகமாக உபதேசித்தால்கீழ்கண்ட சந்தேகங்களுக்குத் தெளிவான விடை கிடைக்கும்.  சராசரி மனிதனின் நிலையும், இறைநிலை நோக்கி உயரும்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்.


எனவே, சித்தர்கள் பாதத்தைச் சரணடைவோம். சீரும் சிறப்புமாய் வாழ்வோம்.

  • அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி
  • பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி
  • கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
  • கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
  • ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம், ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்
  • மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
  • மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
  • ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
  • மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
  • மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
  • திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
  • புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
  • புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
  • பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, திருவாரூர்(மடப்புரம்)
  • ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
  • மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
  • உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
  • உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில், ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
  • அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
  • சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.
  • சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
  • சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
  • விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
  • விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்
  • அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்தோளூர்பட்டிதொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
  • கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
  • மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
  • பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.
  • உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
  • உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
  • திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
  • அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
  • சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரிஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
  • பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர். ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி, பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
  • பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை)பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
  • உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
  • ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி


ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம் 82,83,84,85.

11 February 2015

யார் யார் நியூமராலஜிப்படி பெயரினை மாற்றி பயன் அடையலாம்?

சுய ஜாதகம் வலிமையில்லாமல் இருக்கும் நபர்கள், சுயஜாதகம் வலிமையுடன் இருந்தாலும் கூட, பெயர் எண் சரியாக அமையாமல் தடைகளையே சந்திக்கும் நபர்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் நிலையாக வேண்டும் என நினைக்கும் அன்பர்கள், 
எண்கணித கலையினை பயன் படுத்தி பலன் பெறலாம்.

பெயர் நன்கு அமைந்த ஒருவருக்கு, சுகமான வாழ்வு கிட்டும், தொழில் விருத்தி உண்டாகும், வண்டி வாகனங்கள், வீடு மாளிகைகள், செல்வவளம் பெற்று வாழ்வார் நல்ல இல்லறம், நன்மக்கள், நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...


  எந்த வயதிலும் பெயரினை சாதகமான அதிர்ஷ்ட எண்ணில் மாற்றி அமைத்து வளம் பெறலாம். நல்ல அதிர்ஷ்ட ஜாதகத்தில் பிறந்தவர்களுக்கும் கூட பெயர் நன்றாக இருந்தால் மட்டுமே அதிர்ஷ்ட்டம்  நிலையானதாக  இருக்கும்பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

  எந்த ஒரு சக்தியைக் காட்டிலும் உனக்குஉன்னைத் தவிர, உனக்குள் இருக்கும் ஆற்றலைத் தவிர, வேறு எதுவும் உதவாது. என சித்தர்கள் கூறியுள்ளார்கள். நம்முள் உள்ள ஆற்றலை அதிர்ஷ்ட்ட ஆற்றலாக மாற்றி நம்மை ஒரு வெற்றியாளனாக மாற்ற அதிர்ஷ்ட பெயர் எப்போதும் உடன் இருந்து உதவும்பெயர் மாற்றம் பற்றிய விபரங்களுக்கு...

  நமக்குள் உள்ள ஆற்றல் என்பது நமது பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் ஆகியவற்றின் மூலம் கணித்து உணர வேண்டும். அதனை சரியான முறையில் நாம், நேர்மறையாக பயன்படுத்தி நம்மை வளமாக வாழ வைக்கும் கலையே, எண்கணிதம் என்னும் நியூமராலாஜி என்னும் கலையாகும்.  விபரங்களுக்கு

பயன் பெறுவீர்!
உயர்வீர்!!
 நன்றி .நன்றி.. நன்றி...



06 February 2015

உங்களின் முழு ஜாதகத்தினை பலன்களுடன்ஆன்லைனில் பெற jpeg or pdf

அன்புள்ள ஜோதிட அன்பர்களே!

நம்முடைய ஜாதகத்தினை புத்தகத்திலே வைத்து இருப்பதும் எழுதுவதும் தான் நம்முடைய மரபாக இருக்கிறது. முன் காலங்களில் பனை ஓலையிலே எழுதி வந்தார்கள். பின்னர் காகிதங்களில் எழுதி பயன்படுத்துகிறோம். காலத்தின் மாற்றத்தில் தற்போது எல்லாமே டிஜிட்டல் மயமாகி விட்டது. எனவே பலவிதங்களில் நமக்கு உதவி செய்து தக்க வழி காட்டும், நமது ஜாதகத்தினை கூட நாம் டிஜிடல் முறையில் வைத்து இருப்பது நமக்கு உதவி புரியும். 

எனவே நமது வாசகர்களின் ஆலோசனையின் படி சுய ஜாதகத்தினை முழுமையான டிஜிடல் முறையில் எமது ஸ்ரீராம் ஜோதிட ஆராய்சி மையம் தற்போது வழங்கி வருகிறது. அன்பர்கள் இதனை முழுமையாக பயன் படுத்திக் கொள்ளவும்.

உங்களின் முழு ஜாதகம், அஷ்டவர்க்கம், திசாபுக்தி, கிரக சட்பலம், பலன்களுடன் pdf அல்லது jpeg படங்களாக உங்களுக்கு அனுப்புகிறோம்.

jpeg படத்தினை சாதாரண மொபைலில் கூட பார்க்க முடியும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இதற்க்கான சேவை கட்டணம்  ரூ 500  ரூ150 # மட்டுமே,


தங்கள் பெயர் , பிறந்த தேதி ,மாதம், வருடம், நேரம் 
(நள்ளிரவாக இருந்தால் விடிந்தால் என்ன தேதி என்ன கிழமை என்ற விவரம் குறிப்பிடுங்கள்) 
நீங்க பிறந்த ஊர் (அருகில் உள்ள பெரிய நகரம்) ஆகியவிவரங்களை அனுப்புங்கள்.


கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: ANITHA

A/C No: 286801000000995

Name of the Bank : INDIAN OVERSEAS BANK

Branch Name: KODUMUDI Branch Code: 2868

IFSC Code: IOBA0002868


வெளிநாடுகளில் இருந்து கட்டணம் செலுத்த..

paypalptkannan72@gmail.com

மணியார்டர் மூலம் கட்டணம் செலுத்த...

V.V.PONNTHAMARAICKANNAN
SRIRAAM JYOTHITA ARAYCI MAIYAM
KARUR MAIN ROAD, NATHTHAMEDU,
KODUMUDI, 638151
ERODE.DT, T.N.



கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு (அ) அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு
(அ) மணியார்டர் அனுப்பிவிட்டு அதன் விவரத்தையும் உங்கள் ஜாதக

விபரங்களையும், ஒரே மெயிலில் அனுப்பவும். 


tag: 
athirsta jothidar, v.v pon thamaraik kannan , kodumudi , jvv ponnthamaraickannan , vv. ponthamaraikannan ,kodumudi ,numerologist ponthamaraikannan 
pon thamarai , tamil numerology , parikaram , parihara , parihara , pariharam. naga thasa , naga dhosha , naka dosham.parikaaram. online gems, lucky gems, brith stone