25 March 2014

மாணிக்கம் (RUBI)

மாணிக்கம்

 இது சிகப்பாக இருக்கும். நவரத்தினங்களில் சூரியனுக்கானது. இரத்தினங்களின் அரசன் என்று பழம் நூல்கள் கூறுகின்றது. சூரியனுக்கு பிரதிநிதியாக இருக்கின்றது. இது மிகவும் விலை உயர்ந்த ரத்தினங்களுள் ஒன்றாகும். இது ஒளி ஊடுருவக் கூடிய (transparent) கல் ஆகும். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நன்கு வகை மாணிக்கம் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பதுமராகம்
தாமரை மலர், சூரிய ஒளி, மாதுளம்பூ, போன்ற நிறங்களில் காணப்படும். இதை அணிந்தால் பொருளும் புகழும், அன்னதானம், பசு, கன்னிகாதானம் செய்த பலன் உண்டாகும். 


சௌகந்திகம்
 

இந்த வகையினை நீலகந்தி என்பர். இலவ மலர், அசோகமர துளிர், செம்பஞ்சு, போன்ற நிறங்களில் இருக்கும் இந்த வகை கற்களை அணிய செல்வம், புகழ், சேரும். 

குருவிந்தம் 
குன்றிமணி, முயல் இரத்தம், செவ்வரத்த மலர், போன்ற வண்ணங்களில் கிடைக்கும் மணிகளை அணிந்தால், உலகை அழும் யோகமும், வெற்றியும், உண்டாகும். 
கொவாங்கம் மேலும் என்ற பெயரிலும் நன்கு வகைகள் மாணிக்கம் பிரிக்கப்படுகிறது. 


தரமான மாணிக்கங்கள் மியன்மாரில் கிடைகிறது. மேலும் ஸ்ரீலங்கா, இந்தியாவிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சேலம், திருச்சி மாவட்டங்களிலும் சிறிதளவு, தொண்டிஎடுக்கப்படுகிறது. மாணிக்கத்தின் ரசாயன குணம் (A I2 O3) ஆகும். இது கோரண்டம் வகையினை சேர்ந்தது. கடினத்தன்மை 9 ஆகும்.  

மாணிக்கத்தினை யார் அணியலாம்?


  1. சூரியனின் அருள் வேண்டுபவர், 
  2. சூரிய சக்தி குறைவாக உள்ளவர்கள், அனைவரும் அணிந்து சிறப்பான பலனை அடையலாம்.

  3. 1,10,19,28ம தேதிகளில் பிறந்தவர்கள், 
  4. விதி எண், 1 உடையவர்கள் மாணிக்கம் அணிந்து சிறப்பான வல்வினை அடையலாம். 
  5. அரசாங்க உதவியினை எதிர்பார்த்து இருப்பவர்களும் அணிந்து பயன் பெறலாம். 
  6. இருதயம் சம்பந்தமான நோயாளிகள், 
  7. இரத்தம் சம்பந்தமான நோயாளிகள், தமது சிகிச்சையுடன்  சேர்த்து மாணிக்கம் அணிய சீக்கிரமே நோயிலிருந்து நிவாரணம் அடையலாம்.  விபரங்களுக்கு

No comments:

Post a Comment