27 March 2014

முத்து (PEARL)

நவரத்தினங்களில் பெருமையும் மென்மையும் அழகும் மிகுந்தது முத்துக்களே ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழரின் புகழை வெளிநாடுகளில் பரப்பிய பெருமை பெற்ற முத்துக்களையே சாரும். முத்துக்களை மாலையாகவும், ஆரமாகவும், மோதிரமாகவும், பயன்படுத்துவர். விபரங்களுக்கு


முத்துக்களின் வகைகள்
     வட்டம், அனுவட்டம், ஒப்பு, குறு, சப்பாத்தி, இரட்டை, கரடு என பல வகைகள் இருந்ததாக சோழநாட்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றது. பொதுவாக முத்துக்கள் வெண்மை நிறத்தில் இருக்கும். மஞ்சள், இளம்சிவப்பு, கத்தரிபூ, பச்சை, நீலம், கறுப்பு ஆகிய முத்துகளும் கிடைக்கும். முத்துக்களில் உருண்டையான முத்துகளுக்கே மதிப்பும் விலையும் அதிகம். இதன் இரசாயன சேர்க்கை (CACO3C3H18nH2O) ஆகும். இதன் கடினத்தன்மை 3 ஆகும். மற்ற ரத்தினங்களை முத்து கற்பாறைகளில் இருந்து உருவாவதில்லை. கடலில் காணப்படும் ஒரு சிப்பியிடத்தில் உருவாகின்றது. சிப்பியினுள் நுழைந்த மண்துகள் சிப்பியின் வயிற்று தசையிலிருந்து வெளிவரும் சுண்ணாம்பு சத்து நிறைந்த திரவத்தினால் காலப்போக்கில் உருவாகி வருவதே முத்துகள் ஆகும்.


முத்துக்களை அணிவதால் உண்டாகும் பலன்கள்
  1. வெண்முத்து அணிந்தால் சகல பாவங்களும் போகும், ஆயுள் அதிகரிக்கும்.
  2. மஞ்சள் முத்துக்கள் செல்வத்தினை தரும்.
  3. சிகப்பு முத்துக்கள் அறிவையும், புகழையும் கொடுக்கும்.
  4. நீல முத்துக்கள் சகல பாக்கியங்களையும் கொடுக்கும்.
  5. தரமான முத்து அணிந்தவர் வீட்டில் கால்நடை விருத்தியாகும்.
  6. மனோதிடம், மனநிம்மதி, தன்னம்பிக்கை அதிகமாகும்.
  7. கலைகளிலே நிபுணத்துவம் உண்டாகும்.
  8. தண்ணீரில் கண்டம் விலகும்.
  9. வெளிநாட்டு யோகம் உண்டாகும்.
  10. புத்திர பக்கியத்தினை ஏற்படுத்தும்.
ஆனால் எக்காரணத்தினை கொண்டும் அடுத்தவர் உபயோகம் செய்த முத்துக்களை வாங்கி அணியக்கூடாது. அவை தீமையினையே தரும்.

முத்துகளை யார் அணியலாம்?
1.      ரோஹினி, அஸ்தம், திருவோணம், நட்சத்திரகாரர்கள்
2.      கடக இராசி, இலக்கினகாரர்கள்.
3.      ஜாதகப்படி சந்திரன் திசை நடப்பவர்கள்.
4.       ஆங்கில மாதத்தில் 2 11 20 29 ம் தேதி பிறந்தவர்கள்.
5.       விதி எண் 2 வருபவர்கள்.
ஆகியோர் முத்துகளை அணிந்து நன்மைகளை அடையலாம். விபரங்களுக்கு



25 March 2014

மாணிக்கம் (RUBI)

மாணிக்கம்

 இது சிகப்பாக இருக்கும். நவரத்தினங்களில் சூரியனுக்கானது. இரத்தினங்களின் அரசன் என்று பழம் நூல்கள் கூறுகின்றது. சூரியனுக்கு பிரதிநிதியாக இருக்கின்றது. இது மிகவும் விலை உயர்ந்த ரத்தினங்களுள் ஒன்றாகும். இது ஒளி ஊடுருவக் கூடிய (transparent) கல் ஆகும். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் நன்கு வகை மாணிக்கம் இருந்ததாக குறிப்பிடுகிறார்.

பதுமராகம்
தாமரை மலர், சூரிய ஒளி, மாதுளம்பூ, போன்ற நிறங்களில் காணப்படும். இதை அணிந்தால் பொருளும் புகழும், அன்னதானம், பசு, கன்னிகாதானம் செய்த பலன் உண்டாகும். 


சௌகந்திகம்
 

இந்த வகையினை நீலகந்தி என்பர். இலவ மலர், அசோகமர துளிர், செம்பஞ்சு, போன்ற நிறங்களில் இருக்கும் இந்த வகை கற்களை அணிய செல்வம், புகழ், சேரும். 

குருவிந்தம் 
குன்றிமணி, முயல் இரத்தம், செவ்வரத்த மலர், போன்ற வண்ணங்களில் கிடைக்கும் மணிகளை அணிந்தால், உலகை அழும் யோகமும், வெற்றியும், உண்டாகும். 
கொவாங்கம் மேலும் என்ற பெயரிலும் நன்கு வகைகள் மாணிக்கம் பிரிக்கப்படுகிறது. 


தரமான மாணிக்கங்கள் மியன்மாரில் கிடைகிறது. மேலும் ஸ்ரீலங்கா, இந்தியாவிலும் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சேலம், திருச்சி மாவட்டங்களிலும் சிறிதளவு, தொண்டிஎடுக்கப்படுகிறது. மாணிக்கத்தின் ரசாயன குணம் (A I2 O3) ஆகும். இது கோரண்டம் வகையினை சேர்ந்தது. கடினத்தன்மை 9 ஆகும்.  

மாணிக்கத்தினை யார் அணியலாம்?


  1. சூரியனின் அருள் வேண்டுபவர், 
  2. சூரிய சக்தி குறைவாக உள்ளவர்கள், அனைவரும் அணிந்து சிறப்பான பலனை அடையலாம்.

  3. 1,10,19,28ம தேதிகளில் பிறந்தவர்கள், 
  4. விதி எண், 1 உடையவர்கள் மாணிக்கம் அணிந்து சிறப்பான வல்வினை அடையலாம். 
  5. அரசாங்க உதவியினை எதிர்பார்த்து இருப்பவர்களும் அணிந்து பயன் பெறலாம். 
  6. இருதயம் சம்பந்தமான நோயாளிகள், 
  7. இரத்தம் சம்பந்தமான நோயாளிகள், தமது சிகிச்சையுடன்  சேர்த்து மாணிக்கம் அணிய சீக்கிரமே நோயிலிருந்து நிவாரணம் அடையலாம்.  விபரங்களுக்கு

நவரத்தினங்களின் அற்புத சக்திகள்

உலகில் நூற்றுக்கணக்கான கற்கள் இருந்தாலும், அவற்றில் சில வகை கற்களே, மக்களுக்கு நன்மைகளை கொடுக்கும் என நமது ஆன்றோர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.அவைகள் ஆற்றல் மிக்கவைகள் என அடையலாம் கண்டு உள்ளார்கள். மேலும் அவைகள் நல்ல அதிர்வலைகளை கொண்டவை, என அறிவியல் ஆய்வுகளும் வெளி வந்து கொண்டு உள்ளது. இதுவரை 84 வகையான கற்களை பயன்படுத்தி வெற்றியும் பெற்று உள்ளார்கள். இந்த 84 வகையான கற்களில் அதிக சக்தி மிக்கதாகவும், மதிப்பு மிக்கதாகவும், அமைந்து இருப்பது தன் நவரத்தினங்கள்.விபரங்களுக்கு


நவரத்தினங்களை விலை உயர்ந்த கற்கள்(Precious stones) எனவும், மற்ற வகை கற்களை உபரத்தினங்கள் (Semi precious stones) எனவும் பிரித்துள்ளார்கள். அந்த உபரத்தின கற்களையே நாம் அதிர்ஷ்ட கற்கள் (Lucky stones) என்று கூறுகிறோம். இவற்றில் சிலவகை கற்கள் மருந்து தயாரிக்க மட்டுமே பயன்படும் என்பது அதிசயமான உண்மையாகும். அடுத்த பதிவிலிருந்து கற்களை பற்றி பார்ப்போம்.விபரங்களுக்கு